நெல்சன் மீது நம்பிக்கை இழந்த ரஜினிகாந்த்.. கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : தமிழ்திரையுலகின் முடிசூடா மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. ரஜினி நடிப்பில் வெளியான சில படங்கள் சரியாக போகாததால் கடும் வருத்தத்தில் இருந்தார் ரஜினி. அந்த நேரத்தில்தான் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று பக்கா கமர்சியல் படங்களை கொடுத்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்திருந்தார் இயக்குனர் சிறுத்தை சிவா.

அதையடுத்து ரஜினி சிவாவை அழைத்து பேச இருவர் கூட்டணியில் அண்ணாத்த படம் தயாரானது. படம் சுமார் ரகமே. எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என ரஜினி தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியுள்ளார். அதனால் அடுத்த படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கவேண்டும் என் ஆசைப்பட்டு இயக்குனர் நெல்சனுடன் இணைய முடிவெடுத்தார்.

ஆனால் பீஸ்ட் திரைப்படம் படு சொதப்பலான முடிவைக்கொடுக்க டென்ஷனான ரஜினி படத்தை தவிர்த்துவிட்டதாக வதந்திகள் பரவின. படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தகவல் உண்மையல்ல என அறிக்கை வெளியிட்டது. ஆனால் தற்போது நெல்சனுடன் இணைந்து இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் பணியாற்றப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் கே.எஸ் ரவிக்குமார் தரப்பில் இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அதை மறுத்தும் இதுவரை ஒரு அறிக்கை வெளியிடப்படவில்லை. அதனால் ரசிகர்கள் குழம்பிப்போயுள்ளனர். ஆனால் கே.எஸ் ரவிக்குமார் இணையவேண்டும் என்பதில் ரஜினி ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் ஒரு படையப்பாவை பார்க்க ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

என்னை நம்ப வைத்து ஏமாற்றிய அனிரூத்… கதறி ஆளும் கீர்த்தி சுரேஷ்..! என்ன நடந்தது தெரியுமா.?