ரஜினி நேரில் அழைத்த ப்ளூ சட்டை மாறனுக்கு செய்த தரமான சம்பவம்…

0
Follow on Google News

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படம் வெளியாகும் முன்பிருந்தே ரஜினியை ட்ரோல் செய்து வந்தார் ப்ளூ சட்டை மாறன். அதோடு இல்லாமல் படம் வெளியான பின்னரும் நெகட்டிவாக விமர்சனம் செய்து வந்து கொண்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.தொடர்ச்சியாக ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்தும் ட்ரோல் மீம்களை பறக்கவிட்டு வருகிறார் ப்ளூ சட்டை.

இதனால் அனைத்து ரசிகர்களும் இவரை அடிக்காத குறையாக கழிவு கழுவி ஊத்தி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஜெயிலர் படத்தின் வசூல் குறித்து பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்களான ரமேஷ் பாலா, மனோ பாலா, தயாரிப்பாளர் தனஞ்செயன் என யார் பேசினாலும், வடை, வடைன்னு கடந்த ஒரு வாரமாக காதல் பரத் போல சுற்றித் திரிந்த ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு விட்டது.

ஜெயிலர் திரைப்படம் முதல் வாரத்தில் 375 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே தற்போது அதிகாரப்பூர்வ ட்வீட் போட்டு விஜய் ரசிகர்களையும், ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட ரஜினி ஹேட்டர்களையும் கதற விட்டுள்ளது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தற்போது புதிய கதை ஒன்றை கூறி வருகிறார். அதாவது ரஜினி இமயமலை போவதற்கு முன் இவரை பார்க்க வேண்டும் என்று அழைப்பு கொடுத்ததாக கூறுகிறார்.

அதாவது ரஜினியின் நம்பிக்கைக்குரிய ஒரு பத்திரிக்கையாளரிடமிருந்து இவருக்கு அழைப்பு வந்ததாம். ஆரம்பத்தில் தயங்கிய ப்ளூ சட்டையை பத்திரிக்கையாளர் பயப்பட வேண்டாம் அவர் உங்கள் மீது கோபமாக தான் இருக்கிறார். அதே நேரத்தில் உங்களை பார்த்து பேச வேண்டும் என்று நினைக்கிறார். அவர் உண்மையிலேயே அன்பானவர் தான் நீங்கள் வந்து பேசினால் அனைத்தையும் சரி செய்து விடலாம் என்று கூப்பிட்டு இருக்கிறார்.

அடுத்தபடியாக இவர் பேசப்போன நிலையில் இதை வீடியோ எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். ப்ளூசட்டை மாறனின் கோரிக்கைக்கு முதலில் மறுத்துவிட்ட ரஜினி, பின்னர் சில கண்டிஷன்களோடு சம்மதம் தெரிவித்தாராம். அதாவது இந்த வீடியோவை வெளியே விடக்கூடாது என ப்ளூ சட்டை மாறனிடம் எழுதி வாங்கியதாகவும் , இதனைத் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் ரஜினியை நான் சந்தித்ததில் மிகவும் கசப்பான அனுபவமாக எனக்கு கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதை என் வாழ்நாளில் நான் மறக்கவே முடியாது அந்த அளவிற்கு நான் அவமானத்தை பெற்று இருக்கிறேன் என்று புலம்புயும் வருகிறாராம். இந்நிலையில் அந்த மீட்டிங்கில் சில கசப்பான அனுபவங்கள் கிடைத்ததால், தற்போது அந்த வீடியோவை 11 மணிக்கு வெளியிடுவேன் என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்திருந்தார். இதனால் பலர் என்ன வீடியோ, என்ன சம்பவம் என காத்திருந்தனர்.

இந்நிலையில் 11 மணிக்கு வீடியோ வரும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு விபூதி அடித்துவிட்டார் ப்ளூ சட்டை மாறன். வடிவேலுவின் காமெடி வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்து நெட்டிசன்களை அப்செட் ஆக்கிவிட்டார். இதுகுறித்து பலரும் ப்ளூ சட்டை மாறனை கேள்வி எழுப்ப, அவரோ கண்டிப்பாக அந்த வீடியோவை வெளியிடுவேன் என மீண்டும் கூறி வருகிறார்.

ரஜினி இவரை கூப்பிட்டு பேசுவதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை. அந்த அளவிற்கு இவர் ஒன்னும் பெரிய ஆளும் கிடையாது, ரஜினியும் இந்த அளவுக்கு இறங்கிப் போக மாட்டார். ப்ளூ சட்டை தான் தேவை இல்லாமல் பொய் பேசி வாய்க்கு வந்தபடி உலறுகிறார் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில், ஆக மொத்தத்தில் இவருக்கு ஏதோ ஒரு கசப்பான விஷயம் நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. இந்நிலையில் சூப்பர்ஸ்டார் எல்லாம் உங்களை ஒரு ஆளாகவே மதிக்கமாட்டார் என்றும் கடைசி வரை குறை சொல்லாத வாயும், இல்லை குறைக்காத நாயும் இல்லை என ரஜினி சொன்னது போன்று குறைத்து கொண்டே இருக்கட்டும் என நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனை கலாய்த்து வருகின்றனர்.