இன்னும் எத்தனை பேரை ஏமாற்ற போகிறார் ரஜினிகாந்த்… சிவகார்த்திகேயன் இந்த சின்ன வயசிலும்…

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் ஓடுகிற குதிரையில் சவாரி செய்யக் கூடியவர், அந்த வகையில் காலகட்டத்திற்கு ஏற்ப ஹிட் பட இயக்குநரை நேரில் அழைத்து நாமளும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று ஓடிக்கொண்டிருக்கிற குதிரையில் சவாரி செய்யக் கூடியவர் ரஜினிகாந்த். அண்ணாத்தே படத்தை முடித்துவிட்டு அப்போது ஓடுகின்ற குதிரையாக டான் படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தியிடம் கதை கேட்டு ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு அடுத்த புதிய படத்தில் இணைவோம், படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் மற்ற வேலைகளை செய்யுங்கள் என ரஜினி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் உறுதி செய்ததை தொடர்ந்து இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி புதிய படத்திற்கான திரைக்கதை அமைப்பது மற்றும் ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளை தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆனால் சிபி சக்கரவர்த்திக்கு நெருக்கமான சினிமா துறையைச் சேர்ந்தவர்கள், அவரிடம் ரஜினிகாந்திடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர், இதுபோன்றுதான் கார்த்திக் சுப்புராஜ்யிடம் கதை கேட்டு திரைக்கதை மற்றும் ஸ்கிரிப்ட் வேலையை தொடங்குகள் என தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்,

ரஜினிகாந்தின் பேச்சைக் நம்பி அதற்கான அனைத்து வேலைகளையும் செய்து முடித்து ரஜினிகாந்தின் கால் சீட்டுக்காக காத்திருந்து கடைசியில் கார்த்திக் சுப்புராஜ் ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம், மேலும் ரஜினிகாந்தை நம்பி மற்ற நடிகர்களை வைத்து இயக்கம் வாய்ப்பு வந்தும், அந்த படத்தை தவிர்த்து வந்தார் கார்த்திக் சுப்புராஜ். அது போன்று நீங்கள் ரஜினிகாந்தை முழுவதுமாக நம்பி மற்ற பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தால் இறுதியில் நீங்கள் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என சிபி சக்கரவர்த்தியை அவருக்கும் நெருக்கமான சினிமா துறையினர் ஏற்கனவே எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இருந்தும் மிக தீவிரமாக இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகளில் இறங்கினார் சிபி சக்கரவர்த்தி, சுமார் மூன்று மாதம் மிக கடுமையாக உழைத்து, ரஜினி நடித்துவரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனே இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என திட்டமிடலுடன் காத்திருந்துள்ளார் சிபி சக்கரவர்த்தி. ஆனால் ரஜினிகாந்த் தற்பொழுது ஜெயிலர் படமும் ஆக்சன் படம் என்பதால், ஆக்சன் காட்சிகளில் அவரது உடல் ஒத்துழைப்பு தரவில்லை.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஆக்சன் படத்தில் நடிப்பது மிக சிரமம் என முடிவு செய்த ரஜினிகாந்த், அடுத்த தன்னுடைய படம் ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட்டாக இருக்க வேண்டும் என சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினிகாந்த்,புதிய படத்தை ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட்டாக மாற்றுங்கள் என தெரிவித்துள்ளார். அதற்கு சிபி சக்கரவர்த்தி, சார் ஒரு அனைத்து பணிகளையும் நான் முடித்து படபிடிப்பு தயாராக இருக்கும், இந்த கட்டத்தில் எப்படி என்னால் இதை ஃபேமிலி சப்ஜெக்ட்டாக மாற்ற முடியும் என சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆனால் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இதனால் தற்பொழுது ரஜினி படத்திலிருந்து வெளியேற்றபட்டுள்ளார் சிபி சக்கரவர்த்தி. இந்த நிலையில் ரஜினிகாந்தை நம்பி காத்திருந்து ஏமாற்றம் அடைந்த சிபி சக்கரவர்த்தி சினிமா வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நிலையில் தற்பொழுது சிபி சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விடும் நோக்கில், சிவகார்த்திகேயன் தானாக முன் வந்து, வாங்க சேர்ந்து படம் பண்ணலாம் என சிபி சக்கரவர்த்திக்கு உதவி செய்ய முன் வந்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.