உயிரை காப்பாற்ற பின்வாசல் வழியே நுழையும் ரஜினிகாந்த்… தஞ்சை பெரிய கோவிலில் என்ன இருக்கு தெரியுமா.?

0
Follow on Google News

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக பெரிய உச்சத்தில் இருந்தவர் இயக்குனர் மணிரத்தினம். தொடர் வெற்றியை கொடுத்து வந்த இயக்குனர் மணிரத்தினம் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருந்த நடிகர்கள் ஏராளம். ரஜினிகாந்த் நடிப்பில் தளபதி, கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் என இரு பெரும் ஜாம்பவான்களுக்கு அவர் கொடுத்த ஹிட் படம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 20 வருடமாக இவர் இயக்கத்தில் வெளியான அணைத்து படங்களும் தோல்வியை சந்தித்து வருகிறது.

மணிரத்தினம் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என தொடர்ந்து அடுத்தடுத்து அவர் இயக்கத்தில் படம் வெளியானாலும், மக்கள் மத்தியில் எந்த ஒரு வரவேற்பும் இல்லை, மேலும் தற்பொழுது மணிரத்தினம் என்கிற ஒரு இயக்குனரை மறந்து மக்கள் பல வருடம் ஆச்சு என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் சோழ மன்னனின் கதையை மய்ய படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தில் நடிகர்கள், விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என ஒரு பெரிய நட்சத்திரமே நடித்துள்ளது. இந்த படம் பெரும் பண செலவில், பாகுபாலி படத்திற்கு இணையாக எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தாலும், படத்திற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் இல்லை. இதனை தொடர்ந்து இந்த படத்துக்கான ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ள மணிரத்தினம், அதன் முதற்கட்டமாக படத்தின் ஆடியோ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ நிகழ்ச்சிக்காக படத்தில் கதைக்கேற்ப தஞ்சை பெரிய கோவிலில் பிரமாண்டமாக நடந்த திட்டமிட்டுள்ளார் மணிரத்தினம். இதற்காக சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் அழைத்து வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த மணிரத்தினம், சென்னையில் உள்ள ரஜினியை நேரில் சந்தித்து, தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் பொன்னியின் செல்வன் ஆடியோ நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதே போன்று வெளியூரில் இருக்கும் கமல்ஹாசன் சென்னை வந்ததும், அவரையும் நேரில் சந்திக்கும் திட்டத்தில் இருந்துள்ளார் மணிரத்தினம். இந்நிலையில், தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வந்தால் அமைச்சர் பதவி காலியாகி விடும், ஆட்சி கவிழ்ந்து விடும், எம்ஜிஆர் ஒரு முறை தஞ்சை பெரிய கோவிலில் தான் மயங்கி விழுந்தார், இந்திராகாந்தி தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்து சென்ற பின்பு தான் சுட்டு கொல்லப்பட்டார் என்கிற தகவல்கள் உலா வரும் நிலையில்.

தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் பொன்னியின் செல்வன் ஆடியோ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டி வந்த ரஜினிகாந்த், நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல் ஆடியோ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றால் கலந்து கொள்கிறேன் என தஞ்சையில் நடைபெறும் பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்கிற தகவலை மணிரத்தினத்துக்கு சொல்லி அனுப்பியுள்ளார் ரஜினிகாந்த் என தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் ரஜினி உயிருக்கு ஆபத்து என உணர்வதால் தான் ரஜினிகாந்த் அங்கே நடக்கும் ஆடியோ வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்தை சென்னையில் சந்தித்து பேசியுள்ளார் மணிரத்தினம், அப்போது தஞ்சை பெரிய கோவிலில் இதற்கு முன்பு கருணாநிதி முதல்வராக இருந்த போது பின் வாசல் வழியாக சென்றுள்ளார் என்பதை விளக்கிய மணிரத்தினம்.

அதே போன்று நீங்களும் பின் வாசல் வழியாக நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்,உங்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் வராது, என ரஜினிகாந்தை சந்தித்து அறிவுறுத்தியுள்ளார் மணிரத்தினம், இதனை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பின் வாசல் வழியாக சென்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடதக்கது.

ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம்… ரஜினி கடும் எதிர்ப்பு… போதையில் இருவரும் தப்பு செய்து விட்டோம், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் வேதனை…