தனுஷ் முகத்தை பார்க்க கூட விரும்பாத ரஜினிகாந்த்… என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் கடந்த வருடம் ஜனவரி 17ஆம் தேதி நள்ளிரவு தங்களுடைய 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருவரும் பிரிவதாக தனித்தனியாக அறிவிப்பை வெளியிட்டு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு, குழந்தைகள் நலன் கருதி இருவரையும் மீண்டும் இணைத்து வைப்பதற்காக இரு குடும்பத்தினரும் நடத்தி வந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியை சந்தித்து மீண்டும் இவர்கள் இணைவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது.

இந்த நிலையில் போயஸ் கார்டனில் தனுஷ் கட்டப்படும் வீட்டின் கிரகபிரவேசம் அன்று தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக இணைந்து புதிய வீட்டில் குடியேறுவர்கள் என பலரும் எதிர்பார்க்க பட்ட நிலையில், கிரக பிரவேசம் அன்று தனுஷ் அவருடைய தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அவருடைய தாய் மட்டுமே கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த நிகழ்வில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா, மாமனார் ரஜினிகாந்த், மாமியார் லதா ரஜினிகாந்த் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் புதிய வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்வுக்கு மாமனார் ரஜினிகாந்த், மாமியார் லதா ரஜினிகாந்த், மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் வரவேண்டும் என தனுஷ் தன்னுடைய விருப்பத்தை சொல்லி அனுப்பி வைத்துள்ளார். ஆனால் மாமனார் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை, இதனால் கடந்த ஜனவரி மதம் கிரகப்பிரவேசம் நடந்த திட்டமிட்டிருந்த தனுஷ் குறிப்பிட்ட அதே தேதியில் நடத்தவில்லை,

இருந்தாலும், மாமனார் மற்றும் மாமியார் தரப்பில் இருந்து ஏதாவது புதிய வீடு கிரகபிரவேசத்துக்கு வருவது குறித்து தகவல் வருகிறதா என காத்திருந்த தனுஷ்க்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தன்னுடைய தாய் மற்றும் தந்தையுடன் போயஸ் கார்டனில் கட்டியுள்ள புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் செய்து முடித்தார் தனுஷ்.

இந்நிலையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ள ‘மாமன்னன்’. திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சசிறப்பு அழைப்பாளராக நடிகர் கமல்ஹாசன் சிவகார்த்திகேயன், இன்னும் பலம் முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் தனுசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்கள் மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நிலையில் நடிகர் ரஜினி வராததற்கு பின்னணி காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, நடிகர் ரஜினிகாந்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. அந்த வகையில் ஒரே மேடையில் தனுசுடன் இருப்பதை விரும்பாத நடிகர் ரஜினிகாந்த் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்வுக்கு வராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த நிகழ்வுக்கு நடிகர் தனுஷும் இறுதியில் சில காரணங்களால் கலந்து கொள்ளவில்லை. நடிகர் தனுஷ் மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என முன்கூட்டியே ரஜினிகாந்த்க்கு தெரிந்திருந்தால் அவர் நிச்சயம் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருப்பார் என கூறப்படுகிறது. அந்த வகையில் மருமகன் தனுஷ் மீது இன்னும் ரஜினிகாந்துக்கு கோபம் இருக்கின்றது. அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் தனுஷ் பங்குபெறும் நிகழ்ச்சியில் நாம் இருக்கக் கூடாது என்கின்ற முடிவில் நடிகர் ரஜினிகாந்த் மாமன்னன் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு வரவில்லை என கூறப்படுகிறது