ரஜினி மீது உள்ள வன்மம்… அதற்காக இந்த அளவுக்கு ப்ளூ சட்டை மாறன் இறங்கி வெச்சு செய்யணுமா.?

0
Follow on Google News

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் மல்ட்டி ஸ்டார் நடிப்பில் உருவான படம் ஜெயிலர். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி ரசிகர்கள் பேராவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.திரும்பும் பக்கமெல்லாம் தியேட்டர்களில் அலைமோதும் ரசிகக் கூட்டங்கள், சோஷியல் மீடியா அனைத்திலும் பாசிட்டிவ் ஆன விமர்சனங்கள் என ஜெயிலர் படம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜெயிலர் படம் என்னதான் ரசிகர்களின் மனதை திருப்தி படுத்தினாலும், பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை திருப்தி படுத்தவில்லை போலத் தெரிகிறது. அவரது சமீபத்திய ட்வீட்களும் அப்படித்தான் சொல்கின்றன. ஆம், ஒருபக்கம் தனன் ஜெயன், மனோபாலா மற்றும் ரமேஷ் பாலா ஆகியோர் ட்விட்டரில் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து 350 கோடி வசூல், 500 கோடி வசூல் என ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர்.

இவர்களின் ட்வீட்டுக்கு ப்ளூ சட்டை மாறன் அவர்கள் வடை சுடும் மெஷினின் படம் மற்றும் வடைகளின் படங்களை போட்டு நக்கலாக பதிலளித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் வசூல் குறித்து பலரும் பலவாறாக பேசிக்கொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு விட்டது.

ஆம், ஜெயிலர் திரைப்படம் முதல் வாரத்தில் 375 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே தற்போது அதிகாரப்பூர்வ ட்வீட் போட்டு விமர்சகர்களை கதற விட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்காது என்கிற நினைப்பில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து அள்ளி விட்டவர்களுக்கும், வடை, வடை என கலாய்த்துக் கொண்டிருந்த ப்ளூ சட்டை மாறனுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த வசூல் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன், திடீரென ரஜினிகாந்த் தன்னை ஜெயிலர் சக்சஸ் பார்ட்டிக்கு அழைத்ததாகவும் அங்கே நடந்த சர்ச்சைக்குரிய விஷயத்தை வீடியோவாக வெளியிடப் போகிறேன் என்றும் ஆங்கிலத்தில் ஒரு பெரிய கட்டுரையாக எழுதி வெளியிட்டிருந்தார். தொடர்ந்து ஜெயிலர் படத்தின் மீது வன்மத்தை கக்கிக் கொண்டிருந்தவர், திடீரென இவ்வாறு கூறியிருக்கிறாரே என்று ஏராளமான ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால், ஒரு காமெடி வீடியோவை மட்டுமே வெளியிட்டு எதிர்பார்த்த தனது கொஞ்ச ரசிகர்களையும் ஏமாற்றி விட்டார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அஃபிஷியல் அப்டேட்டையடுத்து, ஏதோ உண்மை சம்பவத்தை சொல்வது போல பொய்யான விஷயத்தை ஆங்கிலத்தில் அத்தனை பெரிய கட்டுரையாக போட்டு தன்னை நம்பிக் கொண்டிருந்த கொஞ்ச ரசிகர்களையும் ப்ளூ சட்டை மாறன் ஏமாற்றி விட்டதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும், சூப்பர்ஸ்டார் எல்லாம் உங்களை ஒரு ஆளாகவே மதிக்கமாட்டார் என்றும் கடைசி வரை காக்கா போல கத்த வேண்டியது தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்தா பாரு ப்ளூ சட்டை மாற பொட்டி வந்துடுச்சு, சன் பிக்சர்ஸும் வடை சுடுறான் என புதுசா ஒரு ட்வீட் போட்டு விடு தமாஷா இருக்கும் என ரஜினி ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனின் சினிமா ரெவியூக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்த நிலையில், சமீப காலமாக வரும் அணைத்து படங்களையும் கிண்டல் நய்யாண்டி செய்து விமர்சித்து வருகிறார். குறிப்பாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஜெயிலர் படத்தை ப்ளூ சட்டை மாறன் நெகடிவ் விமர்சனம் செய்து வருவது, ரஜினிகாந்த் மீது உள்ள வயிதெருச்சல் தான் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.