ரஜினிகாந்த் ஜாதகத்தில் பிரட்சனை.. தப்பிக்க ரஜினி எடுத்த விசித்திரம் முடிவு என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கடும் போராட்டத்திற்கு பின்பு தமிழக மக்களால் அங்கீகரிக்கப்பட்டு நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர். எம்ஜிஆருக்கு பிறகு அடுத்த தமிழகத்தின் முதல்வராகும் அளவுக்கு தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் தீவிர சிகிச்சைக்கு சிங்கப்பூர் சென்றவர், தமிழக மக்களின் பிரார்த்தனையின் பலனாக உயிர் பிழைத்து மறுபிறவி எடுத்து வந்தார்.

ரஜினிகாந்த் சிங்கப்பூர் சிகிச்சை மேற்கொண்ட பின்பு அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மிக கவனமாக கையாளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு ஜாதகத்தின் மீது அதீத நம்பிக்கை உண்டு. மேலும் ரஜினிகாந்த் மிகத் தீவிர ஆன்மீகவாதியும் கூட, அந்த வகையில் அடிக்கடி அவர் இமயமலை செல்வது, இந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் சென்று வழிபட்டு வருவது என்று தொடர்ந்து செய்து வரக்கூடியவர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தின் போதும் அடுத்து அவர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், ஒவ்வொரு முறையும் அவருடைய ஜாதகத்தின் முழு விவரம் அறிந்து கொண்ட பின்பு தான் செயலில் இறங்க கூடியவர்கள் ரஜினிகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினரும். அந்த வகையில் சமீபத்தில் அவருடைய ஜாதகப்படி அடுத்த அவர் நடிக்கும் படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்திக்கும் என்று ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் மிகப்பெரிய தோல்வி படமான பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கம் ஜெயிலர் படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்து வெளியாகும் படம் ஜாதக ரீதியாக தோல்வி அடையும் என்கிற என்கின்ற அச்சத்தில், பரிகாரமாக என்ன செய்யலாம் என்று ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி அவருடைய இயக்கத்தில் ரஜினி நடித்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்ய செய்துள்ளார் ரஜினிகாந்த், ஆனால் தமிழகத்தில் திரையரங்குகள் யாரும் பாபா ரீ ரிலீஸ் படத்தை வெளியிட முன் வராததால் ரஜினிகாந்த் தரப்பிலே திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து பாபா படத்தை ரிலீஸ் செய்துள்ளனர்.

இந்நிலையில் பாபா ரீ ரிலீஸ் மிகப்பெரிய பிளாப் ஆகியுள்ளது என்கின்ற செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ள ரஜினிகாந்த், தன்னுடைய ஜாதகப்படி தான் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் பிளாப் என்றும், அதற்கு அடுத்து வரும் படம் வெற்றியடையும் என்பதால் ஜெயிலர் படம் ஹிட் அடிக்கும் என்று மகிழ்ச்சியில் உள்ளார். இந்நிலையில் ஜாதகத்தையே ஏமாற்றம் செய்த ஏற்பாடு தான் பாபா பட ரீ ரிலீஸ் என்று கூறப்படுகிறது.

சி.வி. சண்முகம் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி.. அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசலா.?