தண்ணியை போட்டு ரஜினி செய்த காரியம்… தரமான பதிலடி கொடுத்த ராதாரவி..!

0
Follow on Google News

நடிகர் ராதாரவி வில்லன் நடிகராக பல படங்களில் நடித்தவர், தமிழ் சினிமாவில் எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர்,மேலும் எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் நேருக்கு நேராக கேள்வி எழுப்பக் கூடியவர் நடிகர் ராதாரவி. அந்த வகையில் நடிகர் விஜயை, ஒரு முறை குடும்பத்துடன் சந்திக்க ராதாரவி முயற்சித்த போது, நடிகர் விஜய் கூட்டத்துடன் வர வேண்டாம் என்று தெரிவிக்க, அதற்கு அப்படி ஒன்றும் நான் வந்து உன்னை பசந்திக்க தேவையில்லை என்று புறக்கணித்து விட்டதாக நடிகர் ராதாரவி ஒரு முறை பேட்டியில்தெரிவித்துள்ளார்.

இப்படி உச்ச நடிகர்களுடன் ஏற்பட்ட அவருடைய அனுபவங்களை மூடி மறைக்காமல் வெளிப்படையாக பேசி வரக்கூடியவர் நடிகர் ராதாரவி, அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் தண்ணி அடித்துக் கொண்டிருந்தபோது ரஜினிக்கும் ராதாரவிக்கும் நடந்த ஒரு சம்பவத்தை பேட்டி ஒன்றில் ராதாரவி பேசியது வைரலாகி வருகிறது, அதில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் படத்தை முதன் முதலில் இயக்க இருந்தது இயக்குனர் பி வாசு.

ஒரு முறை பி வாசு வெளியூரில் ராதாரவியை சந்தித்தபோது ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அருணாச்சலத்தில் நீங்க தான் வில்லன் என்று தெரிவித்தவர், ராதாரவிக்கு பெயரை குறிப்பிட்டு அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கான வசனமும் எழுதி முடித்துள்ளேன் என்று ராதாரவியிடம் தெரிவித்துள்ளார் பி.வாசு. அடுத்த சில நாட்களில் ரஜினிகாந்த் இடமிருந்து ராதாரவிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

உடனே வீட்டிற்கு வர முடியுமா என்று ரஜினிகாந்த் அழைத்துள்ளார். ரஜினிகாந்த் வீட்டிற்கு அடுத்த நாள் ராதாரவி சென்றதும் படியில் இருந்து இறங்கி வந்து ராதாரவியை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றுள்ளார் ரஜினிகாந்த். காலை 8 மணி அளவில் இருவரும் ஒரு ரவுண்டு தண்ணி அடிக்க ஆரம்பித்துள்ளனர். அப்போது ரஜினிகாந்த் நீங்கள் எப்போதெல்லாம் குடிப்பீர்கள் என்று ராதாரவி இடம் கேட்டுள்ளார்.

அதற்கு எனக்கு டைம் எல்லாம் கிடையாது, வேலை இல்லை என்றால் எப்ப வேண்டும் என்றாலும் குடிப்பேன் என்று ராதாரவி தெரிவித்துள்ளார். அதற்கு இப்ப உங்களுக்கு வேலை இல்லை இல்லையே என்று ரஜினிகாந்த் கேட்க அதற்கு ராதாரவி இல்லை என்று பதில் அளித்துள்ளார். அப்ப சரி இப்ப குடிக்கலாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரும் குடித்துக் கொண்டிருக்கும் போது ராதாரவி இடம் நீங்கதான் அருணாச்சலம் படத்தில் வில்லன் என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

மேலும் பி வாசு எழுதி கொடுத்த வசனத்தை ராதாரவியிடம் காண்பித்து இங்கே பாருங்கள் வில்லன் பேசும் வசனத்தில் உங்கள் பெயர் தான் இடம் பெற்றிருக்கிறது என்று ரஜினிகாந்த காண்பித்துள்ளார். அதன் பின்பு தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், ஆனால் இப்போது இயக்குனரை மாற்றி விட்டோம் பி.வாசுவுக்கு பதிலாக சுந்தர்.சியை கொண்டு வந்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் நடித்தால் சரியாக இருக்காது என தெரிவித்த ரஜினிகாந்த், மூன்று வில்லன்களும் வேறு ஒரு நடிகரை போட்டு விட்டோம் அதனால் உங்களால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று ராதாரவியை நேரில் அழைத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். அப்போது சினிமாவின் அதிர்ஷ்டம் என்ன என்று தெரியுமா என ராதாரவி கேட்க.

அதற்கு ரஜினிகாந்த் என்ன என கேட்டுள்ளார். உடனே இந்த திறமை இந்த அதிர்ஷ்டத்தை தேடி வரவேண்டிய இருக்கிறது என்று ரஜினிகாந்தை கையை நீட்டி பதில் அளித்துள்ளார் ராதாரவி. அதற்கு அடேங்கப்பா… அடேங்கப்பா என்று ரஜினிகாந்த் ரசித்துள்ளார். அப்போதே ராதாரவி முடிவு செய்துவிட்டார் நம்மளுடைய கதையை ரஜினிகாந்த் முடித்துவிட்டார் என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.