அவருடைய இடத்திற்கே சென்று தங்கிவிடும் ஐஸ்வர்யா.. நிம்மதியின்றி தவிக்கும் ரஜினிகாந்த்..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த வருடம் ஒரு மனதாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான வாய்ப்பு இனி இல்லை என்பது போன்று அமைத்தது தனுஷ் புதிய வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்வு. ஆம், தனுஷ் புதிய வீட்டின் கிரக பிரவேச நிகழ்வில் மனைவி ஐஸ்வர்யா உட்பட ரஜினிகாந்த் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளாதது இனி ஐஸ்வர்யா – தனுஷ் இணைவதற்காக வாய்ப்பு இல்லை என்பதை உறுதி படுத்தியது.

இந்நிலையில் ஏற்கனவே அநிருத் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிசு கிசுவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்கள், மேலும் தனுஷ் – அனிருத் இருவரும் சில வருடங்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பேசாமல் இருந்து வந்தனர், இந்த நிலையில் மீண்டும் அநிருத் உடன் நெருக்கமாக பழகி வரும் ஐஸ்வர்யா, சமீப காலமாக அநிருத் ஸ்டுடியோவுக்கு அடிக்கடி சென்று வருகிறார்.

மேலும் பெருபாலான நாட்கள் அநிருத் ஸ்டுடியோவில் தங்கி விடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், அப்படி இருக்கையில், எதற்காக அனிருத் ஸ்டுடியோவுக்கு அடிக்கடி செல்லும் ஐஸ்வர்யா அங்கேயே பெரும்பாலும் தங்கி விடுகிறார் என்கிற குழப்பம் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுவாக உருவெடுத்தது.

இந்த கிசு கிசு, ரஜினியின் கவனத்துக்கு வந்ததை தொடர்ந்து, ஏற்கனவே அனிருத் உடன் மகள் ஐஸ்வர்யா நெருக்கமாக இருந்து அது பிரச்சனையாக உருவெடுத்ததை அறிந்த ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யாவை இது குறித்து மிக கடுமையாக கண்டித்துள்ளார், ஆனால் அநிருத் இசையில் ஒரு பாடல் பட இருக்கிறேன், அதனால் அடிக்கடி அங்கே செல்கிறேன் என ஐஸ்வர்யா தெரிவிக்க, முதலில் லால் சலாம் படத்தில் மட்டும் கவனம் செலுத்து என கடுமையாக ரஜினிகாந்த் மகளிடம் அவருடைய கோபத்தை வெளிப்டுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அநிருத் பிரச்சனை முடிந்த அடுத்த சில நாட்களில் அடுத்த பிரச்சனையாக ரஜினிக்கு மிக பெரிய தலைவலியாக அமைத்துள்ளது பிரபு தேவா – ஐஸ்வர்யா விவகாரம், கணவரை விவகாரத்து செய்து விட்டு கவர்ச்சி உடையில் தீவிர உடல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஐஸ்வர்யா, அந்த புகைப்படங்களை அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.

ஏற்கனவே யோக கற்று கொண்டு வந்த ஐஸ்வர்யா, தொடர்ந்து யோக பயிற்சியில் ஈடுபட்டு வந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார், அப்போது யோக மாஸ்டர் ஒருவருடன் கிசு கிசுக்க பட்ட ஐஸ்வர்யா, தற்பொழுது நடிகர் பிரபு தேவா உடன் நெருக்கமாக பழகி வருவது மற்றும், அவருடன் இணைந்து உடற் பயிற்சி செய்து வருவது, தற்பொழுது பிரபு தேவா உடன் கிசு கிசுக்கப்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா.

இந்த நிலையில் தொடர்ந்து தன்னுடைய மகள் பற்றி வரும் கிசு கிசு செய்திகளால் மகள் மீது செம்ம டென்ஷனில் இருக்கும் ரஜினிகாந்த், அவ்வ போது மன நிம்மதிக்காக முன்பை விட அதிக நேரம் தியானம் செய்து வருவதாக கூறப்டுகிறது.மேலும் மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என ரஜினிகாந்த் ஆசையை நிறைவேற்ற வில்லை என்றாலும் கூட, ஐஸ்வர்யாவின் சில நடவடிக்கைகள் ரஜினியை மனவேதனை அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.