ஐஸ்வர்யா – தனுஷ் விவகாரம்… அனிரூத் செய்தது சரி தான்.. ரஜினிகாந்த் பாராட்டு..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வந்தனர், இவர்கள் இருவரின் திடீர் இந்த முடிவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் அப்செட் ஆனார். இரண்டு மகன்களின் எதிர்காலம் பற்றி சற்றும் சிந்திக்காமல், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக எடுத்த முடிவுக்கு குடும்ப உறுப்பினர்கள் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார் ரஜினிகாந்த். குறிப்பாக மனைவி லதா மீது கடுமையான கோபத்தில் இருந்தார்.

ரஜினிகாந்த் மனைவி லதாவின் தம்பி மகன் தான் இசை அமைப்பாளர் அனிரூத், இவர் ரஜினிகாந்த் இரண்டு மகள்களுடன் நெருங்கி பழக கூடியவர், பொதுவாகவே ரஜினிகாந்த் குடும்பத்திற்கு மிக நெருக்கமான உறவினர் பையனாக இருப்பவர் அனிருத். இளம் வயதில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் மிக குறுகிய காலத்தில் மிக பெரிய உச்சத்தை அடைந்து முன்னணி நடிகர்கள் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் ஏற்கனவே அடிக்கடி குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு வந்ததற்கு காரணம் அனிரூத் தான் என்று கூறப்பட்டு வந்தது. அனிரூத் உடன் தனுஷ் நெருக்கி பழகிய பின்பு தான், இரவு பார்ட்டி சக நடிகைகளிடம் கிசு கிசு என தவறான பாதைக்கு தனுஷை அழைத்து சென்றது அனிரூத் தான் என்றும், மேலும் ஐஸ்வர்யா உடன் அனிரூத் மிக நெருக்கமாக பழகி வருவது தனுஷ்க்கு பிடிக்கவில்லை என்றும்.

இப்படி தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைக்கு முக்கிய காரணம் அனிரூத் தான் என கூறப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கடும் கோபத்தில் அனிருத் மீது இருந்துள்ளார் என்றும், இதனாலே சில காலம் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டிற்கு அனிரூத் வராமல் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதே போன்று சில வருடங்களுக்கு முன்பு சிம்பு உடன் சேர்ந்து பீப் சாங் வெளியிட்டு கடும் பிரச்சனையில் சிக்கினார் அனிரூத்.

அப்போது தன்னுடைய குடுப்ப உறுப்பினர்கள் அனிரூத் உடன் இருக்கும் தொடர்பை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் சொன்னதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிக்கும் திருசிற்றம்பலம் படத்தில் நீண்ட வருடத்துக்கு பின்பு தனுஷ் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிரூத். இந்த படத்தின் பணியாற்றிய போது தனுஷ் உடன் மீண்டும் நெருங்கி பழக தொடங்கிய அனிரூத், பிரிந்த ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியரை மீண்டும் இணைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார் அனிரூத்.

அதன் பயனாக, ஐஸ்வர்யா – தனுஷ் இருவரையும் சந்தித்து பேச வைத்து மீண்டும் இணைவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் அனிரூத். இதனை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி அடிக்கடி அவர்கள் பிரிவதற்கு முன்பு வாழ்ந்து வந்த சென்னை அரியபுரத்தில் உள்ள வீட்டிற்கு இருவரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மகள் ஐஸ்வர்யா கணவர் தனுஷ் உடன் மீண்டும் இணைந்துள்ள தகவல் ரஜினிகாந்துக்கு குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு காரணமாக இருந்தது அனிரூத் என்பதை அறிந்த ரஜினிகாந்த், தனது குடும்ப உறுப்பினர்களிடம், விளையாட்டு பையன் அனிரூத் என்று நினைத்தால், எவ்வளவு பெரிய செயலை செய்துள்ளார் அனிரூத் என்று குடும்பத்தினரிடம் அனிரூத்தை வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த் என்று கூறப்படுகிறது. இதனால் அனிரூத் மீது இதற்கு முன்பு ரஜினிகாந்திடம் இருந்த கோபம் அனைத்தும் பறந்து விட்டது என்றும், விரைவில் தனுஷ் – ஐஸ்வர்யா இணைத்தது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

சொல்லி அடித்தது போல் சூர்யா முகத்தில் கரியை பூசிய ஹரி… வருத்தத்தில் சூர்யா… என்ன நடந்தது தெரியுமா.?