ஐஸ்வர்யா – சிம்பு இணைவதில் சிக்கல்… மகிழ்ச்சியில் தனுஷ்..! என்ன சிக்கல் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்டு இருவரும் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரிந்த இந்த தம்பதியினரை மீண்டும் இணைந்து வைக்கும் முயற்சியில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு வந்தனர், ஆனால் அந்த முயற்சி தோல்வியை தழுவிய நிலையில், இவர்கள் மீண்டும் இணைவதற்கான சாத்தியம் இல்லை என உறுதிப்படுத்திய தகவல் வெளியாகியுள்ளது.

பிரிந்த இந்த தம்பதியினர் அவரவர் தங்கள் தொழிலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர், தனுஷ் படப்பிடிப்பில் பிசியாகியுள்ளார். ஐஸ்வர்யா ஆல்பம் தயாரிப்பில் பிசியானவர் மீண்டும் இயக்குனராக படம் இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும்போது சிம்புவுடன் காதல் கிசு கிசுவில் சிக்கிய ஐஸ்வர்யா பின் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருக்கு போட்டியாக இருந்த தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தனுஷை விட்டு பிரிந்துள்ள ஐஸ்வர்யா அவருக்கு போட்டியாக இருக்கும் சிம்புவை வைத்து படம் இயக்கும் வேலையில் இறக்கிய ஐஸ்வர்யா, கதையையும் தயார் செய்து அந்த கதையை சிம்புவிடம் தெரிவிக்க அவரும் கதை பிடித்து ஓகே சொல்லியுள்ளார். இதன் பின்பு சிம்பு நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தை AGS அகரம் கல்பாத்தி தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு முடிந்த உடன் ஐஸ்வர்யா இயக்கத்தில் புதிய படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதனால் சிம்பு – ஐஸ்வர்யா இணைந்து பணியாற்ற இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் அடுத்தகட்ட பணிகளை தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா, ஆனால் தற்போது தீடிரென ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க கால்சீட் கொடுப்பதில் சிக்கல் இருப்பதாக சிம்பு தெரிவித்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுவதால், சிம்புவை வைத்து படம் இயக்கம் ஆசையில் இருந்த ஐஸ்வர்யா ஏமாற்றம் அடைந்துள்ளார்.

ஆனால் சிம்பு தற்போது தன்னால் கால்சீட் கொடுக்க முடியாது, ஆனால் விரைவில் ஐஸ்வர்யா இயக்கத்தில் நிச்சயம் ஒரு படம் நடிப்பேன் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா இயக்கத்தில் சிம்பு நடிக்கவில்லை என்கிற தகவல் அறிந்த தனுஷ் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதே வேலையில் சிம்புவுக்காக தயார் செய்த கதையை ஒரு ஓரமாக வைத்து விட்டு, வேறு ஒரு கதையை தயார் செய்து அந்த படத்தில் நடிக்க நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வரும் ஐஸ்வர்யா.

விரைவில் அந்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கி மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கதைகளை உருவாக்குவதில் ஐஸ்வர்யா திறமையானவர் என்பது அவருடைய கதை தான் வேலையில்லா பட்டதாரி படம் என்பது அவருடைய கதைக்கு கிடைத்த நற்சான்று என்பது குறிப்பிடதக்கது.

மனைவி பேச்சை கேட்டு மார்க்கெட் இழந்த சூர்யா…புதிய படத்தை வாங்குவதில் தியேட்டர்கள் தயக்கம்… தேவையா இது.?