என்னை ஏமாற்றிவிட்டார்… நடிகர் பிரேம்ஜி மீது அவருடைய பெண் தோழி பரபரப்பு குற்றசாட்டு…

0
Follow on Google News

2024 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் போது, பிரேம்ஜி, கூடவே சேர்த்து, happy new year, this year I am getting married.. dot.. என திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் அவர் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என அறிவிக்காததால், பிரேம்ஜியின் ரசிகர்களே இவர் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என சமூக வலைதளங்களை அலசி ஆராய்ந்து பாடகி வினைதா தான் பிரேம்ஜியின் காதலி என கூறினர்.

ஏனெனில் பிரேம்ஜி, பாடகி வினைதாவை செல்ல குட்டி என்று சொல்லி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு இருந்தார். மேலும் பிரேம்ஜி அமரனின் பிறந்தநாளுக்கு, அவரை செல்லக்குட்டி என சொல்லி பதிலுக்கு வினைதாவும் போஸ்ட் போட்டார். அதையும், இதையும் சேர்த்து வைத்து பார்த்து பிரேம்ஜி அமரனுக்கும், பாடகி வினைதாவுக்கும் தான் திருமணம் என்கிற முடிவுக்கு ரசிகர்கள் வந்தனர்.

இந்நிலையில் இவரைத்தான் பிரேம்ஜி காதலிக்கிறார் திருமணமும் செய்து கொள்ளப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், ரசிகர்களின் தலையில் இடியை இறக்குவது போல், பிரேம்ஜி, சேலத்தைச் சேர்ந்த இந்து என்ற பெண்ணை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டிருந்தார். முதலில் இருவருக்கும் முகநூலில் ஆரம்பித்த பழக்கம், பிறகு வாட்ஸ்-அப் வரை நீண்டு, அந்த வாட்ஸ் அப் உரையாடலில்தான் இருவருக்குமான காதல் மலர்ந்ததாகவும், முதலில் இந்துதான் பிரேம்ஜியிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும் கூறியிருந்தனர்.

இருவருக்கும் 20 வயதுவரை வித்தியாசம் இருந்தாலும், காதலுக்கு வயதில்லை என திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் பிரேம்ஜியின் தூக்கத்தை கெடுக்கும் விதமாக முன்னாள் காதலியும், பாடகியுமான வினைதா, பிரேம்ஜி என்னை ஏமாற்றிவிட்டார் என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் அவர், பிரேம்ஜியும், நானும் சிங்கிளாகத்தான் இருந்தோம், ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். நடிகர் ஜெய், நான், பிரேம்ஜி எல்லாரும் ஒன்றாக தான் இருப்போம். நான்கூட ஜெய் தான் விரைவில் திருமணம் செய்து கொள்வான் என நினைத்தேன், ஆனால் பிரேம்ஜி திருமணம் செய்து கொண்டான். மேலும் அவர், பிரேம்ஜி திடீரென வந்து என்னிடம் காதலுக்கு ஐடியா கொடு என கேட்டார், நான், இவன் சும்மா தான் கேட்கிறேன் என, பல ஐடியாக்களை கொடுத்தேன்.

அப்போது இந்து ப்ரபோஸ் பண்ணும்போது பிரேம்ஜியிடம், இப்படி பண்ணு, அப்படி பண்ணு என்று கூறினேன். என்னிடம் ஐடியாவையும், ஆசீர்வாதத்தையும் வாங்கினான். சரி சும்மாதான் இருக்கும் என்று நினைத்தேன். இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்திருவான் என நினைக்கவே இல்லை, கல்யாணம் செய்துவிட்டான் என்று கதறியிருக்கிறார். மேலும் அவர் தற்போது பிரேம்ஜி தான் என்னை விட்டு போய் விட்டான், ஜெய் ஆவது என் கூடவே இருப்பானா என்று எதிர்பார்க்கிறேன் எனக் கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்னம்மா, ஒன்னு இல்லனா, இன்னொன்னா என பாடகி வினைதாவை ரசிகர்கள் கழுவி ஊற்றுவதோடு, பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதனும் விமர்சித்திருக்கிறார்.