இரண்டாவது திருமணத்துக்கு ரெடியான நடிகர் பிரசாந்த்… 51 வயது பிரசாத் வருங்கால மனைவி வயசு என்ன தெரியுமா..?

0
Follow on Google News

ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் ‘ஆண் அழகன்’ என்ற பட்டத்தை பெற்ற நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருந்தார். பிரசாந்த் 90ஸ்களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். குறிப்பாக இப்போது டாப் லெவலில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரைவிட பிரசாந்த்துக்கு தான் ரசிகர்கள் அதிகம் இருந்தனர். ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளை அதிகளவில் தன் பக்கம் ஈர்த்திருந்தார்.

நடிகர் பிரசாந்துக்கு கடந்த 2005ஆம் ஆண்டு பிரபல எக்ஸ்போர்ட் தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்ற பெண்ணை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆகி சில நாட்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகர் பிரசாந்த்க்கு, அவர் மனைவி பற்றிய பல ரகசியங்கள் மெல்ல மெல்ல தெரியவந்துள்ளது. குறிப்பாக பிரசாந்தை விட கிரகலட்சுமி வயது அதிகமானவர் என்பதும், இவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்ததையும் மூடி மறைத்து, பிரஷாந்தை பெண் வீட்டார் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இந்த உண்மையெல்லாம் வெளியே வந்ததால் தன் மனைவியை பிரஷாந்த் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இந்நிலையில் தான் உச்ச நடிகராக இருந்த பிரஷாந்த், திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

பின் இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த பிறகு தான், சில திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும் அடிக்கடி கோர்ட் கேஸ் என அலைந்துக் கொண்டிருந்த பிரசாந்தால் சினிமா மீது கவனம் செலுத்த முடியாமல் போனதை அடுத்து அப்போது வெளியான படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்துள்ளது.

பின் படிப்படியாக இவருடைய மார்க்கெட் சினிமாவில் குறைய தொடங்கியதால், பிரசாந்த் இருக்கும் இடம் தெரியாமல் போனார். அதோடு உடல் பருமன் அதிகரித்து ரசிகர்களால் ஹீரோவாக ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு பிரசாந்த் மாறினார். இவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது இவர் திருமணம் தான். மேலும் பிரஷாந்தின் வாழ்க்கை வீணாப்போனதற்கு அவரின் தந்தையும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

ஏனெனில் இவர் பிரஷாந்தை தன் கைக்குள்ளேயே அடக்கி வைத்து, பிரஷாந்தின் வாழ்க்கையில் மூக்கை நுழைத்து கொண்டே இருப்பார் என்றும், இதனால் அவரது தந்தை செய்வது சரியா, தவறா என்று கூட பார்க்காமல் அவர் சொல்வதை அப்படியே பிரசாந்த் செய்ததும் ஒரு தவறு என சொல்லப்படுகிறது. பிரஷாந்தின் வாழ்க்கையை அவர் தந்தை தான் வாழ்ந்து கொண்டிருந்து இருக்கிறார்.

இந்நிலையில் தான் தற்போது 51 வயதாகும் பிரசாந்திற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரின் தந்தை முடிவு செய்துள்ளார் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன், பிரசாந்த் நடிக்கும் GOAT, அந்தகன் ஆகிய படங்கள் வெளியானதும், பெண் பார்க்க போவதாகவும், பிரசாந்த், வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லிவிட்டார், அதனால் இந்த முறை நன்கு விசாரித்து பெண் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஒரு பெண்ணை நாங்கள் பார்த்து வைத்திருக்கிறோம், அது எங்கள் சொந்தக்கார பெண் என்றும் கூறியிருக்கிறார். அதோடு, நான் பிரஷாந்த் வாழ்க்கையில் தவறு செய்துவிட்டேனோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது என அவர் தந்தை எமோஷனலாக பேசியதை பார்த்த ரசிகர்கள், இதுவரை செய்தது போல் இல்லாமல், இந்த முறையாவது நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைய்யுங்கள் என அட்வைஸும் செய்து வருகின்றனர்.