விஜயின் சூழ்ச்சியில் சிக்கிய பிரசாந்த்…. லாக் செய்யப்பட்டதால் தப்பிக்க முடியாமல் தவிக்கும் பிரசாந்த்..

0
Follow on Google News

நடிகர் விஜய் கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்று வரை எத்தனையோ விமர்சனங்கள் மற்றும் தோல்விகளைச் சந்தித்து வந்தாலும், அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படமும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘ தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தில் நடிகை லைலா, சினேகா, பிரபுதேவா, உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.குறிப்பாக நடிகர் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

90களில் சாக்லேட் நாயகனாக வலம் வந்தவர்தான் நடிகர் பிரசாந்த். அன்றைய காலகட்டத்தில் சினிமாவின் டாப் ஹீரோக்களாக இருந்த அஜித் மட்டும் விஜயை விட ஒரு படி டாப்ல இருந்தவர் பிரசாந்த். அப்படி இருக்கையில், இப்போது விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பிரசாந்த் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இப்படத்தில் பிரசாந்த் நடிப்பதற்கு விஜய் போட்ட மாஸ்டர் பிளான் தான் காரணம் என்பது அம்பலம் ஆகி உள்ளது.

ஆம், நடிகர் பிரசாந்த் முதலில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டி வந்துள்ளாராம்.அதன் பிறகு, இப்படத்தில் செகண்ட் ஹீரோ மாதிரி கேரக்டர் என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்து விட்டார்களாம். அதுமட்டுமில்லாமல், விஜயும் பிரசாந்தும் ஏற்கனவே நண்பர்கள் என்பதால், விஜய் நேரடியாக பிரசாந்திற்கு ஃபோன் பண்ணி படத்தில் நடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் பிரசாந்த்தும் மறுப்பு தெரிவிக்க முடியாமல் படத்திற்கு ஓகே சொல்லியதாக கூறப்படுகிறது.

தன்னுடைய படத்தில் பிரசாந்தை நடிக்க வைப்பதற்கு விஜய் ஏன் இவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். இங்குதான் விஜயின் மாஸ்டர் பிளான் இருக்கிறது. அதாவது, விஜய் மற்றும் பிரசாந்த் இருவரும் அவர்களது அப்பாவின் உதவியுடன் சினிமாவில் நுழைந்து கொடி கொட்டி பறந்து கொண்டிருக்கும்போது தான், நடிகர் அஜித் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது விஜய், பிரசாந்த் இருவரும் நடிகர் அஜித்தை குறைத்து மதிப்பிட்டு வந்தார்கள். ஆனால் நடிகர் அஜித் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து சினிமாவின் உச்சத்தை எட்டி வளர்ந்து விட்டார். இப்போது விஜய்க்கும் அஜித்துக்கும் தான் கடும் போட்டி நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நடிகர் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிகர் பிரசாந்தை நடிக்க வைப்பதாக பேசப்பட்டு வந்தது.

இதை அறிந்த விஜய், இந்த மாதிரி விஷயம் நடந்தால் எல்லாம் நல்ல பெயரும் அஜித்துக்கு போய்விடும் என்று எண்ணி, அதற்கு முன்பு பிரசாந்தை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார். இதனாலேயே தானே கால் செய்து பிரசாந்தை நடிக்க கூப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித் படமாக இருந்தால் என்ன விஜய் படமாக இருந்தால் என்ன நடிகர் பிரசாந்த் அவரது திறமையை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு தான் என்று கூற வேண்டும்.