பிரபுதேவா செய்த அட்டூழியம்… நயன்தாராவுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல்… என்ன அட்டூழியம் தெரியுமா.?

0
Follow on Google News

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த 9ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். புதிய படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க ரூபாய் 10 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு வந்த நிலையில், மேலும் தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கும் முன்பு நடிகர் சிம்பு மற்றும் பிரபுதேவா இருவரையும் காதலித்து வந்தவர் நயன்தாரா, வல்லவன் படத்தில் நடிகர் சிம்புவை காதலித்தார், ஆனால் இந்த காதல் மிக நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை, மிக குறுகிய காலத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிம்புவை விட்டு பிரிந்தார் நயன்தார. இதன் பின்பு பிரபு தேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்த போது பிரபு தேவாவை இரண்டாவது முறையாக காதலித்தார்.

இந்த காதல் சிம்பு போன்று குறுகிய காலத்தில் பிரச்சனையில் முடியவில்லை, சுமார் 5 வருடங்களாக பிரபு தேவா – நயன்தாரா இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் பிரபுதேவா உடன் இணைந்து நயன்தாரா வாழ்ந்து வந்தார். ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கும் மற்றொரு பெண்ணின் கணவரான பிரபுதேவா உடன் ஒரே வீட்டில் நயன்தாரா வாழ்ந்து வந்தது அப்போது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதற்கு பிரபுதேவா மனைவி ரமலத் கடும் எதிப்பு தெரிவித்தார், எனது கணவரை என்னிடம் இருந்து பிரித்த நயன்தாராவை நேரில் பார்த்தால் பளார் என அறைந்து விடுவேன் என பகிரங்கமாக தெரிவித்தார் ரமலத். இதனை தொடர்ந்து மனைவி ராமலத்தை விவாகரத்து செய்த பிரபு தேவா – நயன்தாரா காதல். திருமணம் வரை சென்று இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாதியிலே நின்றது. இரண்டாவது காதல் தோல்வியில் மிகவும் மனம் உடைத்து இருந்தார் நயன்தாரா.

இந்நிலையில் மூன்றாவது காதலனை கரம் பிடித்துள்ள நயன்தாரா குழந்தை பெற்று கொள்வதில் பெரும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது, இதற்கு காரணம் அவருடைய வயது என்று கூறப்பட்டாலும், நயன்தாராவுக்கு வயது 37 ஆகிறது, பல நடிகைகள் பொதுவாக 35 முதல் 40 வயதில் திருமணம் செய்து கொண்டு கூட குழந்தைகள் பெற்றுள்ளனர், ஆனால் தற்பொழுது நயன்தாராவுக்கு இருக்கின்ற பிரச்சனை குறித்து ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.

அதில் பிரபுதேவாவை காதலிக்கும் போது சுமார் 5 ஆண்டுகள் அவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக நயன்தாரா வாழ்ந்து வந்துள்ளார் என்றும், அப்போது சில முறை நயன்தாரா கர்ப்பம் அடைந்துள்ளார். மூன்று தடவைக்கு மேல் நயன்தாரா கர்ப்பத்தை கலைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இது பிரபுதேவாவை காதலித்து வந்த போதே கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று தடவைக்கு மேல் கருவை கலைத்துள்ள நயன்தாரா கர்ப்பப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம், அதனால் தற்பொழுது நயன்தாரா குழந்தை பெற்று கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்… அடம் பிடிக்கும் ரஜினிகாந்த் … டென்ஷனில் தயாரிப்பு நிறுவனம் என்ன செய்தது தெரியுமா.?