நயன்தாரா வாழ்க்கையில் மீண்டும் பிரபுதேவா..! விக்னேஷ்சிவன் – நயன்தாரா உறவில் விரிசல்…

0
Follow on Google News

நடிகை நயன்தாரா வல்லவன் படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் நடிகர் மற்றும் இயக்குனர் சிம்புவை காதலித்தார், ஆனால் இந்த காதல் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது, இதன் பின்பு நடிகர் பிரபு தேவாவை காதலித்தார். ஏற்கனவே பிரபதேவா திருமணம் முடிந்து குழந்தை இருப்பது தெரிந்தே அடுத்தவர் கணவரான பிரபுதேவாவை காதலித்து வந்தார் நயன்தாரா. இந்த காதலுக்கு எதிராக பிரபுதேவா மனைவி ரமலத் கடுமையாக எதிர்த்து வந்தார்.

என்னுடைய கணவரை என்னிடம் திருப்பி கொடுத்துவிடு என்றும், மேலும் ஒரு கட்டடத்தில் நயந்தாராவை நேரில் எங்கே பார்த்தாலும் அடிப்பேன் என பகிரங்கமாக தெரிவித்தார் பிரபுதேவா மனைவி ரம்லத். ஆனாலும் பிரபுதேவாவை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தீவிரமாக காதலித்து வந்தார் நயன்தாரா, சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பிரபுதேவா மற்றும் நயன்தாரா ஜோடி ஒன்றாக வந்து கலந்து கொள்வார்கள், மேலும் திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இதனை தொடர்ந்து மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்த நடிகர் பிரபுதேவா தான் காதலித்து வந்த நயன்தாராவை திருமணம் செய்வதற்கு முடிவு செய்து இருவரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதில் மனைவியை விட்டு பிரிந்து வந்தது போன்று பிரபு தேவா குழந்தைகளை விட்டும் பிரிந்து வர வேண்டும் என நயன்தாரா கண்டிஷன் போட, அதற்கு பிரபு தேவா சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் நயன்தாரா மற்றும் பிரபுதேவா இடையில் மோதல் வெடித்தது.

இதனை தொடர்ந்து திருமணம் வரை சென்ற நயன்தாரா – பிரபுதேவா காதல் முடிவுக்கு வந்து இருவரும் பிரிந்தனர். இதன் பின்பு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த நயந்தாரா மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்று வாக்கில் இரண்டு காதல் என்கிற படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா, இந்த படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

நயன்தாரா கணவரான விஜய்சேதுபதியை காதலிக்கும் கதாபத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்த படம் முடியும் தருவாயில் இருக்கையில் தற்பொழுது தான் இந்த படத்தின் கதை பிரபுதேவா, அவரது மனைவி ரமலத் மற்றும் நயன்தாரா ஆகியோர் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை தழுவிய கதை என்பதை தெரிந்து கொண்ட நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவன் மீது செம்ம டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக காற்று வாக்கில் இரண்டு காதல் படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு படத்தின் ப்ரோமோஷனுக்கு வருவதாக சொன்ன நயன்தாரா தற்பொழுது விக்னேஷ் சிவன் மீது இருக்கும் கோபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்கு நான் வரமாட்டேன் என மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காற்று வாக்கில் இரண்டு காதல் படத்துடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் முடிவுக்கு வந்து விடும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

நீ யாருய்யா எனக்கு சான்ஸ் கொடுக்க… ரஜினியிடம் திமிரை காட்டிய நெல்சன்..! என்ன நடந்தது தெரியுமா.?