ஓன்று, இரெண்டெல்ல, பத்துக்கு மேற்பட்ட பெண்கள்… நடிகர் பார்த்திபன் குறித்து பயில்வான் சொன்ன தகவல்…

0
Follow on Google News

நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் காதலித்து 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர், இந்த தம்பதியினருக்கு, அபிநயா, கீர்த்தனா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், நடிகர் மாதவன் மற்றும் நடிகை சிம்ரன் நடிப்பில் வெளிவந்த கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் பார்த்திபன் மகள் கீர்த்தனா நடித்திருந்தார், இந்த படத்தில் நடித்ததற்கு தேசிய விருது அவருக்கு கிடைத்தது.

பார்த்திபன் – சீதா தம்பதியரின் வாழ்கை சிறப்பாக சென்ற நிலையில்,இவன் படத்தில் பார்த்திபன் உடன் இணைந்து நடித்த நடிகை சௌதர்யா உடன் நெருக்கமாக பார்த்திபன் இருப்பதாக கிசு கிசு எழுந்தது, இதனை தொடர்ந்து பார்த்திபன் – சீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தொடர்ந்து இருவருக்கும் இடையில் சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது, இதனை தொடர்ந்து விவாகரத்து பெற்று பார்த்திபன் – சீதா தம்பதியினர் 2001ம் ஆண்டு பிரிந்தனர்.

பார்த்திபன் – சீதா இருவரும் விவாகரத்து பெற்ற பின் அவர்களின் குழந்தைகள் பார்த்திபன் வசம் தான் அதிக நாட்கள் வசித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவாகரத்து பெற்று பார்த்திபனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நடிகை சீதா , சின்னத்திரை நடிகர் சதீஸ் என்பவரை 2010 இரண்டாவது திருமணம் செய்து 2016 வரை வாழ்ந்து வந்த நடிகை சீதா, அதன் பின்பு நடிகர் சதீஷை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பார்த்திபன் – சீதா தமபதியினரின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்தில் பார்த்திபன் – சீதா இருவரும் பங்கேற்று இருந்தனர், இதனை தொடர்ந்து, பார்த்திபன் சீதா இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்கான வாய்ப்பு அமையவில்லை, தொடர்ந்து பார்த்திபன் – சீதா இருவரும் பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், பார்த்திபன் – சீதா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வளந்தாலும், இதுவரை இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி எந்த ஒரு இடத்திலும் குறை சொன்னது கிடையாது, அதே நேரத்தில் பார்த்திபன் அவருடைய மனைவி சீதாவை விவாகரத்து செய்த பின்பு அவருக்கான சினிமா மார்க்கெட் மிக பெரிய அளவில் சரிவை சந்தித்தது. காரணம் பார்த்திபன் விவாகரத்து செய்த பின்பு அவர் நடித்த படம் சரிவர போகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுயை முன்னாள் காதல் மனைவி சீதா குறித்து பேட்டி ஒன்றில் பேசிய பார்த்திபன், நான் என்னுடைய பழைய காதல் அல்லது யாரையாவது பற்றி பேசினாலே அவர்களுடைய மனது புண்படக் கூடாது என்று பார்த்து பேசுவேன்.அப்படி இருக்கும் போது, என்னில் பாதியாக இருக்கும், இப்போதும் என்னுடைய குழந்தைகளின் அம்மாவாக இருப்பவரின் மனசு கஷ்டப்படுத்துவேனா? ஆனால் சிலர் நாம் ஒன்று பேச வேறொன்றாக வெளியிடுவதால் மனக்கசப்புகள் குடும்பத்திற்குள் வந்து விடுகிறது என சமீபத்தில் வேதனையுடன் பார்த்திபன் பேசி இருந்தார்.

இந்நிலையில், பிரபல நடிகரும், சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் பேட்டி ஒன்றில் பார்த்திபன் குறித்து பேசுகையில், பார்த்திபன் அவருடைய தனது மனைவி சீதாவை பிரிந்து பின்னர் அடிக்கடி ஒவ்வொரு பெண்களுடனும் காதல் செய்து வந்ததாகும், சில பெண்கள் எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் என தெரிவித்து பெண்கள் பிரிந்து சென்று விட்டனர். இதே போல், பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் பார்த்திபனுக்கு காதல் ஏற்பட்டது என்று பயில்வான் ரங்கநாதன் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.