நாக சைத்தன்யா – சோபிதா இருவரின் திருமணத்தில் இருக்கும் பிரச்சனை… இரண்டாவது திருமணத்திலும் இப்படி ஒரு பிரச்சனையா.?

0
Follow on Google News

தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாகவே ஹெட் லைன்ஸாக இருப்பது நடிகர் நாக சைதன்யா – நடிகை சோபிதா நிச்சயதார்த்தம் தான். நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பிறகு விவாகரத்து செய்தவர். நாக சைதன்யா – சோபிதா நிச்சயதார்த்தம் கடந்த வியாழக்கிழமை சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. அவர்களுக்கு பலரும் ஒருபக்கம் தங்களது வாழ்த்தினை கூறிவரும் சூழலில், பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருக்கும் விஷயம் ரசிகர்களுக்கு ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய குடும்பங்களில் ஒன்று நாகேஸ்வர ராவ் குடும்பம். அவருக்கு பிறந்த நாகார்ஜுனாவும் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடிகர் நாகார்ஜுனா முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்துவிட்டு பின் நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் தான் நாக சைதன்யா.அவர் டோலிவுட்டில் ஃபேமஸான நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. நாக சைத்தான்யா விண்னைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது சமந்தாவை காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்திருந்தார். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

அவர்களது பிரிவுக்கு சமந்தா திருமணத்துக்கு பின்பும் நடித்தது தான் என்று அரசல் புரசலாக தகவல்கள் ஓடின. இருவரும் பிரிந்த பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்துவருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே அதுகுறித்து வாய் திறக்கவில்லை. அதேசமயம் ஒன்றாக வெளிநாடு சென்ற புகைப்படங்கள் பரவின.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாக சைதன்யா – சோபிதா நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 8ம் தியதி ஹைதராபாத்தில் வைத்து சிம்ப்பிளாக நடந்தது. அதனை நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார். நாக சைத்தன்யா-சோபிதா நிச்சயதார்த்தத்துக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் ஃபேமஸாக இருக்கும் ஜோதிடர் வேணு சுவாமி, அவர்களது திருமண வாழ்க்கை குறித்து கூறியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

நாக சைத்தன்யா-சோபிதா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய வேணு, “சமந்தா மற்றும் சோபிதாவின் ஜாதகத்தை அலசினால் இரண்டு ஜாதகங்களிலுமே சனியின் கவனம் செவ்வாய் மீதுதான் இருக்கிறது. சோபிதாவின் ஜாதகத்தில் செவ்வாயின் கவனம் சுக்கிரன் மற்றும் வியாழன் மீது இருக்கிறது. 2017ஆம் ஆண்டு சோபிதாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் சிக்கல் இருக்கும். அதுவரை நன்றாக இருபார்கள்.

ஆனால் அதற்கு பிறகு அவர்களது திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா என்பது சந்தேகமே. ஜாதகம் மட்டுமின்றி நிச்சயதார்த்தம் செய்த நேரமும் சரியில்லை. நாக சைதன்யா – சமந்தாவுக்கு 50 மதிப்பெண்ணும், நாக சைதன்யா – சோபிதாவுக்கு பத்து மதிப்பெண்ணையும் தருகிறேன். தொழிலில் இருவருக்கும் நன்றாகத்தான் இருக்கிறது.

நாக சைதன்யாவும், சோபிதாவும் சேர்ந்து இருக்க முடியாது என்றுதான் காலம் சொல்கிறது” என்று கூறியிருந்தார். இது நாக சைதன்யா ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்துள்ளது! ஒரு சில ரசிகர்கள் நாக சைத்தன்யா வாழ்க்கை குறித்து வருத்தப்பட்டாலும் மற்றும் சிலர் சமந்தாவை நாக சைத்தன்யா இரண்டாவது திருமணத்திற்கு முன்பே விவாகரத்துக்கு பெற்று விடுவார் என ஜோதிடர் தெரிவித்துள்ளார் என கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்…