உங்க கணவர் இன்னும் எத்தனை குடும்பத்தை கெடுக்க போகிறாரா.? ஒரே ஓட்டலில் நடந்த தனுஷ் – ஐஸ்வர்யா பஞ்சாயத்து..!

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி ஆந்திராவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனி தனி அறையில் இருந்து கொண்டு நள்ளிரவில் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். ஆந்திராவில் இவர்கள் இருவரின் பிரச்சனைக்கு காரணம், தனுஷால் மனைவியை விட்டு பிரித்த மன உளைச்சலுக்கு ஆளான ஆந்திராவை சேர்ந்த பிரபல சினிமா குடும்பத்தை சேர்ந்த அந்த நடிகர் ஐஸ்வர்யாவை சந்தித்த பின்பு தான் என தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா படப்பிடிப்பு வேலையாக ஆந்திராவில் தங்கி பணியாற்றி வந்த ஐஸ்வர்யாவை எதார்த்தமாக சந்தித்துள்ளார் தெலுங்கு பட நடிகர் நாகசைந்தா என கூறப்படுகிறது. அப்போது இருவரும் நீண்ட நேரமாக பேசியுள்ளனர். நாகசைந்தா தனது குடும்பத்தில் நடந்த அணைத்து பிரச்சனைக்கும் காரணம் உங்கள் கணவன் தான் என்று வருத்தப்பட்டு ஐஸ்வர்யாவிடம் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் ஐஸ்வர்யாவிடம் நாகசைந்தா தெரிவித்ததாவது, தான் சமந்தாவை காதலித்து கொண்டிருந்த போதே, சமந்தாவிடம் நெருக்கமாக சுற்றி வந்தார், இதை அறிந்த நான் உங்கள் கணவரை நேரில் சந்தித்து எனக்கு சமந்தாவுக்கு திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது, இனி அவரை விட்டு விடுங்கள் என்று தெரிவித்தேன். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என தெரிவித்து விட்டு, எனக்கும் சமந்தாவுக்கு திருமணம் முடிந்த பின்பும் கூட சமந்தாவுடன் தொடர்பில் இருந்துள்ளார் என தெரிவித்த நாகசைந்தா.

மேலும் இதனால் தனக்கும் தன் மனைவி சமந்தாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது, ஆமாம் தனுஷ் உடன் தொடர்பில் தான் இருக்கிறேன் என தனனிடம் வெளிப்படையாகவே சமந்தா தெரிவித்ததாகவும் இதன் பின்பு தான் நானும் என் மனைவியும் பிரிவதாக முடிவு செய்தோம் என தனது வருத்தத்தை ஐஸ்வர்யாவிடம் நாகசைந்தா தெரிவித்தததாக கூறபடுகிறது. மேலும் இதனால் தனது குடும்பம் அடைந்த அவமானத்தையும் நாகசைந்தா தெரிவித்ததாக கூறபடுகிறது.

இதனை கேட்டு மிகவும் வருந்துவதாக ஐஸ்வர்யா தெரிவிக்க, இன்னும் எத்தனை குடும்பத்தை உங்க கணவர் கெடுக்க போகிறாரா.? என ஐஸ்வர்யாவிடம் இருந்து நாகசைந்தா விடைபெற்றதாக கூறப்படுகிறது. இதன் பின்பு தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்ற ஐஸ்வர்யா கணவர் தனுஷ் உடன் பேச இருவருக்கும் இருந்து வந்த கருத்து வேறுபாடு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது, சுமார் இரண்டு நாட்களாக நீடித்த இருவருக்கும் இடையிலான சண்டை இருவரும் பிரிவதாக அறிவிக்கும் நிலைக்கு சென்று விட்டது என கூறப்படுகிறது.

ஆனால். இவர்கள் பிரிவுக்கு இது மட்டுமே காரணம் இல்லை, ஏற்கனவே சென்னையில் இருக்கும் போதே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் ஆந்திராவில் ஒரே ஓட்டலில் தனி தனி அறையில் தங்கி இருந்து அவரவர் சினிமா பணிகளை செய்து வந்ததாக கூறப்படுவது கூறிப்பிடத்தக்கது.