என்னை விலைக்கு வாங்க முடியாது.. இந்தி சினிமாவுக்கு சவால் விடும் மகேஷ் பாபு… கங்கனா ரனாவத் பதிலடி..

0
Follow on Google News

ஆந்திரா : பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு பாலிவுட்டால் என்னை பணம் கொடுத்து வாங்க முடியாது என கூறி சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார். மகேஷ் பாபுவின் இந்த கூற்றுக்கு சிலதரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும் பாலிவுட் நடிகை ஒருவர் மகேஷின் கருத்தை ஆமோதித்துள்ளார்.

நடிகர் மகேஷ் பாபு நடித்து தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் சர்க்காரு வாரிபட்டா. இந்த திரைப்படத்திற்கான வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மகேஷ் பாபு ” நான் திமிர் பிடித்து பேசவில்லை. ஹிந்தியில் இருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் விஷயம் என்னவென்றால் அவர்களால் என்னை விலைக்கு வாங்க முடியாது.

என்னால் நேரத்தை வீணாக்க முடியாது. எனக்கு இங்கு கிடைக்கும் மரியாதை, நட்சத்திர அந்தஸ்து அங்கே கிடைக்குமா தெரியவில்லை. என்னுடைய இண்டஸ்ட்ரியை விட்டு வேறொரு இண்டஸ்ட்ரிக்கு செல்ல நிஜமாக எனக்கு தோணவில்லை” என மகேஷ் பாபு தெரிவித்திருந்தார். இவரின் கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பாலிவுட் கதாநாயகி கங்கனா ரனாவத் மகேஷின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத் லீட் ரோலில் நடித்து வெளிவர இருக்கும் தாகத் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியீட்டிற்கு டெல்லி வந்த கங்கானாவிடம் செய்தியாளர்கள் மகேஷ் பாபுவின் கருத்து குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த கங்கனா “அவர் சொல்வதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். பல்வேறு திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து மகேஷ் பாபுவுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கின்றன.

அவரது தலைமுறையினர் தெலுங்கு திரைப்படங்களை தெலுங்கு திரையுலகத்தை நம்பர் ஒன்னாக மாற்றியுள்ளனர். எனவே அவர் கூறியதுபோல அவரை பாலிவுட்டால் வாங்கமுடியாது. மகேஷ் நடித்த பரத் அண்டெ நானு திரைப்படம் மிக சிறந்த ஒரு திரைப்படம். அவர் தனது தொழிலுக்கு மரியாதை காட்டியுள்ளார். தமிழ் திரைப்படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு கடந்த 10-15 வருடங்களில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்” என செய்தியாளர்களிடம் கங்கனா தெரிவித்தார்.

தமிழில் இளிச்சவாயனிடம் வெச்சுக்க… எங்ககிட்ட வேண்டாம்.. ஷங்கரை எச்சரித்த தயாரிப்பாளர்.! எதற்கு தெரியுமா.?