3 கோடிக்கு மேல் உதவி செய்த பாலா… காக்கா – கழுகு என சண்டை போடும் ரஜினி- விஜய்… இதில் யார் உண்மையான சூப்பர்ஸ்டார்.?

0
Follow on Google News

கலக்கப்போவது நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா தன் வருமானத்தின் பெரும் பகுதியை ஒதுக்கி, உதவி தேவைப்படும் பலருக்கு உதவி செய்து வருகிறார். கல்விக்காக கஷ்டப்படும் பல ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் மலைவாழ் மக்களுக்காக தன் சொந்த செலவில் 4 ஆம்புலன்ஸ்களை வாங்கி தந்தார். நகைச்சுவை நடிகராக வளர்ந்து வரும் பாலா தொடர்ந்து பல சமூக சேவைகளை செய்து வருகின்றார்.

தற்போது தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது சென்னையில் பெரு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாலா பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிககப்பட்ட மக்களுக்கு – குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம், 200 குடும்பங்களுக்கு மொத்தமாக இரண்டு லட்சம் உதவித் தொகை வழங்கியுள்ளார். பலரும் வீட்டை விட்டே வெளியே வர தயங்கி முடங்கி உள்ள நிலையில், தெருவில் இறங்கி உதவுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கிய பாலாவின் செயல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

பாலா.. உன் மனசு யாருக்கும் வராது.. எனக்கு கூட வராது.. உன் பெறறோர்க்கும் உன்னை வளர்த்தவர்களுக்கும் தான் இந்த புகழ் எல்லாம்.. இன்று முதல் உனக்கு ரசிகன் நானும்” என பலரும் வாழ்த்தி வருகிறார்கள். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாலா, “சென்னை மழையால் என்னால் வெளியில் வர முடியவில்லை. இல்லையென்றால் முன்னரே ஏதாவது பண்ணியிருப்பேன்.

அவரவர் தேவைக்கேற்ப வாங்கி கொள்ளும் வசதியாக 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளேன். 2015 அப்போ உதவி செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அப்போது காசு இல்லை. இப்போ என்கிட்ட 2 லட்சம் காசு இருந்தது. அதை அப்படியே கொடுத்துள்ளேன். வந்தாரை வாழவைக்கும் சென்னை. என்னையும் வாழவைத்தது சென்னை தான். நம்மல பாத்துகிட்டது சென்னை தான். அதனால் நம்மால் முடிந்ததை செய்து இந்த ஊரை பார்த்துக்க வேண்டும்” என்றார்.

ஏற்கெனவே பாலா பல உதவிகளை மக்களுக்குச் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இலவச ஆம்புலன்ஸ் சேவை ஒன்றைத் தொடங்கி வைத்திருந்தார். தன்னால் இயன்ற உதவிகளை எளியோர்களுக்கு செய்துவரும் பாலாவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர் பாலா உதவி வழங்கும் புகைப்படங்களும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

எத்தனையோ பெரிய பிரபலங்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்துக்கொண்டு, அதை கரையான் பிடிப்பதற்கு பூட்டியே வைத்து அழகு பார்க்கிறார்கள். அந்த வகையில் இவர்களெல்லாம் ஹீரோ இல்லை ஜீரோ என்று சொல்லும் அளவிற்கு பாலாவின் செயல் இருக்கிறது. இதற்கு மத்தியில் தினமும் கஷ்டப்பட்டு சம்பாதித்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் விஜய் டிவி பாலாவின் உதவி மக்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

மேலும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு காக்கா – கழுகு கதை சொல்லி சண்டையிட்டு கொள்ளும் ரஜினி – விஜய் மத்தியில் மக்களுக்காக இதுவரை அம்புலன்ஸ், மலை நிவாரம் என இதுவரை மூன்று கோடிக்கு மேல் பணத்தையும் வாரி இறைத்து வரும் பாலா தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என பலரும் கொண்டாடி வருவது குறிப்பிடதக்கது.