லிங்குசாமியை நம்ப வைத்து மோசம் செய்த கார்த்திக்… அண்ணன், தம்பி செய்த துரோகம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் என்கின்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அவருடைய சகோதரருடன் இணைந்து சினிமா படங்களை தயாரித்து வந்தார். மேலும் பல சினிமா படங்களை வாங்கி வெளியிடும் செய்து வந்தார். ஆரம்பத்தில் இவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் லாபத்தை கொடுத்து வந்தது.

இந்நிலையில் 2013ஆம் வருடம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தை லிங்குசாமி தலையில் கட்டிவிட்டு அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்தார் மணிரத்தினம். ஆனால் கடல் படத்தை இருந்து வாங்கி விநியோகம் செய்த இயக்குனர் லிங்குசாமி மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார். இருந்தும் இந்த நஷ்டத்தை சரி செய்ய மணிரத்தினத்திடம் லிங்குசாமி அணுகியுள்ளார்.

ஆனாலும் மணிரத்தினம் அதெல்லாம் எனக்கு தெரியாது என ஒதுங்கி கொண்டார். லிங்குசாமி முதல் முதலில் பெரும் தொகையை இழந்தது மணிரத்தினத்தின் கடல் படத்தில் இருந்து தான். இருந்தும் பெரும் நம்பிக்கையுடன் சூர்யாவை வைத்து அஞ்சான் படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கி இருந்தார் லிங்குசாமி. இந்த படம் மேலும் அவருக்கு நஷ்டத்தை கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உத்தமன் வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமி, கமலஹாசனின் ஒரு ரசிகனாக இந்த படத்தை தயாரித்து, கமல்ஹாசன் என்ன கேட்கிறாரோ அதை தயாரிப்பு தரப்பில் இருந்து செய்து கொடுத்தார் லிங்குசாமி. ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. உத்தம வில்லன் படம் வெளியாவதற்கு முன்பு பண சிக்கலை சந்தித்து படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இப்படி ஒரு சிக்கலில் லிங்குசாமி இருக்கும் போது, அவருக்கு உதவும் வகையில் நடிகர் கார்த்திக் ஒரு படம் லிங்குசாமிக்கு நடித்து தருவதாக உறுதியளித்துள்ளார். சூர்யாவும் தம்பி கார்த்திக் நிச்சயம் உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுப்பார், எதாவது செய்து உத்தமவில்லன் படத்தை வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் என நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்கள் சூர்யா மற்றும் கார்த்திக்.

கார்த்திக் கால் சீட் கொடுக்கிறார் என்ற நம்பிக்கையில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு நிறுவனத்திடம் கடனாக பெற்று உத்தமவில்லன் படத்தை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. ஆனால் உத்தமவில்லன் படம் தோல்வியை தழுவி மேலும் லிங்குசாமிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்த லிங்குசாமியை, நம்ப வைத்து கடைசிவரையும் கால் சீட் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் கார்த்திக்.

இதனால் வாங்கிய கடனை கார்த்தி கால் சீட் கொடுப்பார் அந்தப் படத்தில் வெற்றியை மூலம் கடனை அடைத்து விடலாம் என்கின்ற நம்பிக்கையில் இருந்த லிங்குசாமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனைத் தொடர்ந்து கடனை அடைக்க முடியாமல் காலம் தாமதம் செய்து வந்த லிங்குசாமிக்கு எதிராக கடன் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்து தற்பொழுது லிங்குசாமிக்கு சிறை தண்டனையும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பறிபோகிறது சூர்யாவின் தேசிய விருது… இந்திய அளவில் மிக பெரிய அவமானத்தை சந்திக்கும் சூர்யா..!