நான் பட்ட அசிங்கம் போதும்… அவமானத்துடன் பிக்பாஸில் இருந்து வெளியேறிய கமல்ஹாசன்…

0
Follow on Google News

வெளிநாட்டில் பெரும் வரவேற்பை பெற்ற பிக் பிரதர் என்ற நிகழ்ச்சி தான், தற்போது இந்தியாவில் பிக் பாஸ் என்ற பெயரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது‌. இதன் முதல் சீசன் முதல், கடந்த ஏழாவது சீசன் வரையிலும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். ஆனால் திடீரென நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கப் போவதில்லை, பிக் பாஸில் இருந்து விலகுகிறேன் என அதிரடியாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் கமல்ஹாசன் பிக்பாஸில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணமே, கடந்த சீசனில் போட்டியாளராக வந்து பாதியில் வெளியேற்றப்பட்ட பிரதீப் தான் என்ற பகிர் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில சீசன்களாக கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு தலை பட்சமாக செயல்படுகிறார் என்ற விவாதம் அளவுக்கு அதிகமாக இருந்தது. குறிப்பாக ஏழாவது சீசனில் மாயா கேங்கிற்கு ஆதரவாக கமல்ஹாசன் அதிகமாக பேசுகிறார் என்று பலரும் கூறிவந்தனர்.

மேலும் மாயா-கமல் என பலரும் அவரை சேர்த்து வைத்தே விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தான் மாயாவிற்காக , பிரதீப் ஆண்டனியை, கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிவிட்டார் என பெரும் பூகம்பம் வெடித்து, பலரும் கமலுக்கு எதிராக திரும்பினர். அப்போது பிரதீப் ஆண்டனி, பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்று, அவரை இந்த வீட்டில் இருந்த மாயா, பூர்ணிமா போன்ற பலரும் குற்றம் சாட்டி, திட்டம் தீட்டி வெளிய அனுப்பி இருந்தனர்.

இதனை வெளியில் இருந்து பார்த்த அனைவருமே, பிரதீப் மீது தவறில்லை என்று சொன்ன போதும், ஆனால் கமல்ஹாசன் இவர் இந்த வீட்டிற்குள் இருப்பது பெண்களுக்கே ஆபத்து என்று சொல்லி அவரை வெளியேற்றி இருந்தார். பிரதிப்பை வெளியேற்றியதும் கமல்ஹாசனை தான் வெளியேற்ற வேண்டும் என மக்கள் பொங்கி எழுந்தனர். அப்போது அதை மீண்டும் மடை மாற்றம் செய்வதற்காக, கமல்ஹாசன் அடுத்த வாரம் அந்த நிகழ்ச்சியில், நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளால் தான் நாங்கள் இந்த முடிவெடுத்தோம் என்று போட்டியாளர்கள் வாயாலையே சொல்லும் வகையில் கேள்விகளை ட்விஸ்டாக கேட்டு பிரதீப் மீது குற்றம் சுமத்திய போட்டியாளர்களின் மேல் பழியை போட்டுவிட்டார்.

இதனால்தான் தற்போது, பிரதீப் மீது தவறில்லாத போதும் மாயா கேங்கிற்காக ஒரு தலை பட்சமாக கமல் தீர்ப்பு வழங்கிய காரணத்தால் தான், இந்த சீசனில் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது, மேலும் கர்மா திருப்பித் தாக்கி இருக்கிறது என்றெல்லாம் ரசிகர்கள் கமல்ஹாசனை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தவறான தீர்ப்பு வழங்கியதால் கமலஹாசன் இமேஜ் மிக பெரிய அளவில் டேமேஜாகி உள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால். மேலும் கமல்ஹாசன் இமேஜ் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் டேமேஜாகி அவர் நடிப்பில் வெளியாகும் சினிமாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்,கமல்ஹாசன் திரைப்பட சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால்தான் தன்னால் பிக்பாஸில் கலந்து கொள்ள முடியவில்லை என்று, எவ்வளவு தான் விளக்கம் அளித்தாலும், ரசிகர்கள் அதை மறுத்துவிட்டு, பிரதீப்பிற்கு நீங்கள் செய்த அநியாயம் தான் தற்போது உங்களுக்கே திரும்பி விட்டது என்று அடித்துக் கூறுகின்றனர்.