இதெல்லாம் என்கிட்ட வேண்டாம் … பிரியங்காவுக்கு கமல்ஹாசன் கொடுத்த வார்னிங்…

0
Follow on Google News

கடந்த முறை பிரியங்கா பங்கேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நீரும், பிரியங்கா குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் பிரியங்கா மற்றவர்களின் கஷ்டத்தில் ஆறுதல் சொல்வது போன்று சென்று அவர்களின் கஷ்டத்தை ரசிக்கக்கூடிய நபர் தான் பிரியங்கா என தெரிவித்த நீரூப், மேலும் பிரியங்காவுக்கு ஒருவரால் பிரச்சனை என்றால் அவர்களை சாக்கடைக்குள் தள்ளி மூடி விடுவார் என நிரூப் தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் விஜய் டிவியா.? இல்ல இது பிரியங்கா டிவியா.? என்று சொல்லும் அளவிற்கு விஜய் டிவி நிர்வாகம் மிகப்பெரிய ஆதரவை பிரியங்காவுக்கு தெரிவித்து வருகிறது என்று ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது பிரியங்கா விஜய் டிவியில் மிகப்பெரிய அரசியல் செய்வதற்கு பின்னணியில் அந்த சேனலை நிறுவகிக்கக்கூடிய நபர்கள் தான் காரணம். பிரியங்காவை மட்டும் சேனல் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து மற்றவர்களை நசுக்கி வருகிறது என்கின்ற ஒரு கேள்விக்கு எழுந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட பிரியங்கா உள்ளே வந்தபோது பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் எல்லாம் அய்யய்யோ பிரியங்கா வந்துருச்சே என்று ஒரு அச்சத்துடனே சக போட்டியாளர்கள் இருந்தார்கள். அந்த சீசனில் சக போட்டியாளரான தாமரையை அதிக அளவில் டார்கெட் செய்தது பிரியங்கா தான்.

மேலும் பிக்பாஸினுடைய டைட்டில் வின்னராக பிரியங்காவை கொண்டு வருவதற்காக சேனல் நிர்வாகம் எவ்வளவோ முயற்சி செய்தும், அதற்கு கமலஹாசன் ஒத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. பிக் பாஸ் குழுவினரிடம் நீங்கள் தவறாக விளையாட்டை வழி நடத்துகிறீர்கள் என்று கமல்ஹாசனே வார்னிங் செய்ததாகவும். இது ஒரு விளையாட்டு நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.

உண்மையிலே மக்கள் செல்வாக்குள்ள திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் சும்மா பிரியங்காவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக தில்லாலங்கடி வேலை செய்தீர்கள் என்றால் நான் உண்மையை போட்டு உடைத்து விடுவேன் என்று கமலஹாசன் பிக் பாஸ் குழுவினரை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

அந்த அளவுக்கு இருந்தும் டைட்டில் வின்னருக்கு முட்டி மோதி எப்படியாவது பிரியங்காவை கொண்டு வந்து வரலாம் என்று பிக் பாஸ் குழுவினர் முயற்சி செய்தாலும் ஒரு கட்டத்தில் பிக் பாஸ் குழுவினரே பிரியங்காவை பிக்பாஸ் வீட்டுக்குள் நடிக்க வைக்க சொல்லி கொடுத்தாலும் கூட மக்கள் மத்தியில் அது எடுபடவில்லை.

பொதுவாக ஒருவர் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக எந்த மாதிரியான அரசியலிலும் தாங்கள் சார்ந்த நிர்வாகத்தில் ஈடுபடுவார்கள் அந்த வகையில் பிரியங்காவின் செல்வாக்கு எந்த அளவுக்கு விஜய் டிவியில் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு விஜய் டிவியில் இருக்கும் சிலர் பிரியங்காவுக்கு ஜால்ரா போட்டால் நாமளும் நினைத்ததை சாதிக்கலாம் என்று ஜால்ரா போடும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.

அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிரியங்கா வந்ததும் அதில் போட்டியாளராக பங்கேற்ற இர்பான் பிரியங்காவுக்கு அக்கா அக்கா என்று ஜால்ரா போட்ட ஐஸ் வைத்த நிகழ்வும் கூட அரங்கேறி வருகிறது. மேலும் சக போட்டியாளர்கள் பிரியங்காவை சுற்றி சுற்றி ஜால்ரா அடித்த சம்பவங்களை பார்க்க முடிகிறது, ஆனால் மணிமேகலை மட்டும் எந்த இடத்திலும் பிரியங்காவிடம் வந்து வளைந்து சலாம் போடாமல் கெத்தாக ஆங்கர் ஆகவே இருந்தது தான் மணிமேகலையை கட்டம் கட்டி பிரியங்கா வெளியேறியதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here