விஜயை சீண்டிய ரஜினிக்கு கமல்ஹாசன் கொடுத்த பதிலடி… தரமான சம்பவம்…

0
Follow on Google News

பீஸ்ட் படத்தையடுத்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவராஜ் குமார், மற்றும் தெலுங்கு நகைச்சுவை நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு என பல நடிகர்கள் இணைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் படம்னாலே ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பாங்க. இதுல இவ்ளோ பெரிய நடிகர் பட்டாளத்தோடு உருவாகுற படம்னா சும்மா விடுவாங்களா? ஆமாங்க.. கோடிக்கணக்கான ரசிகர்கள் மரண வெயிட்டிங் தான்… இந்நிலையில் ஏற்கனவே, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, சமீபத்தில் ராக்ஸ்டார் அனிருத்தின் இசையமைப்பில் உருவான இந்த படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடலையும் வெளியிட்டது.

அனிருத் மியூசிக்னா சொல்லவே வேணாம். ரஜினியின் வெறித்தனமான பேன்களில் அனிருத்தும் ஒருவர்….அதனால மியூசிக்ல மெரட்டி விட்டிருக்கிறார். குட்டீஸ் முதல் பெரியவங்க வரை எல்லாரும் என்ஜாய் பண்ணுறாங்க…. இந்த பாடலுக்கு தமன்னா டான்ஸ் ஆடுனது இன்னொரு ப்ளஸ் .. சூப்பர் ஸ்டார் கூட தமன்னா ஆடின டான்ஸ் ஸ்டெப்ஸ் இப்போ இன்ஸ்டா ரீல்ஸ் -ல டிரென்ட் ஆகிட்டு இருக்கு…

அதுமட்டுமில்லை, இந்த பாடல் யூட்டியூபில் நூறு மில்லியன் பார்வையாளர்களைக் கடக்கவுள்ளது. இந்த பாடலைத் தொடர்ந்து வெளியான ‘ஹூக்கும்’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்து வெளியான ‘ஜூஜூபி’ பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த பிரம்மாண்ட படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இசைவெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர்களை விட நடிகர்கள் மேடையில் பேசுவது இன்றைய டிரென்ட்னு சொல்லலாம்.. அப்படி, இந்த விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஹூக்கும்’ பாடலில் இடம்பெற்ற பட்டத்தை பறிக்க நாலு பேரு வரியை குறிப்பிட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி பேசியிருந்தார். அப்போது, “காட்டுல சின்ன மிருகங்கள் எப்பவும் பெரிய மிருகங்களை தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும்.

உதாரணத்துக்கு காக்கா எப்பவும் பருந்தை சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனா, பருந்து எப்பவும் அமைதியா இருக்கும். பறக்கும் போது பருந்தை பார்த்து காக்கா உயரமா பறக்க நினைக்கும். இருந்தாலும் காக்காவால அது முடியாது. ஆனா, பருந்து இறக்கையை கூட ஆட்டாம எட்ட முடியாத உயரத்துல பறந்துக்கிட்டே இருக்கும். சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பிரச்சனை இப்ப இல்ல. 1977 லயே ஆரம்பிச்சிருச்சு. அதனால சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்னு சொன்னேன்.

ஆனா, ரஜினி பயந்துட்டாருன்னு சொன்னாங்க. நாம பயப்படுறது ரெண்டே பேருக்குதான். ஒன்னு அந்த பரம்பொருள் கடவுளுக்கு இன்னொன்னு நல்லவங்களுக்கு. மற்றபடி யாருக்கும் பயப்படுறதில்ல” என்று குட்டிக் கதை மாறி சொல்லியிருந்தார்… பிரபலங்கள் என்ன பேசினாலும் அது உடனடியா சோஷியல் மீடியால டிரென்ட் ஆகும் இல்லையா… அது மாதிரித்தான் சூப்பர் ஸ்டார் காகம்-னு சொல்லுவது நடிகர் விஜய்யை தான் என்று சோஷியல் மீடியால பேசப்படுகிறது…

ஒரு பக்கம் விஜய் இதுக்கு எந்த பதிலும் சொல்லாம மவுனம் காத்து வந்தாலும், அவரோட தீவிர ரசிகர்கள் கொந்தளிச்சுட்டுதான் இருக்காங்க… இந்த நிலையில்தான், 2008 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசியதை தற்போது விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்த இசை விழாவில், சிறப்பு விருந்தினர்களாக , பிரபல நடிகர் ஜாக்கி ஜான், மலையாள நடிகர் மம்முட்டி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, தசாவதாரம் படத்தின் கதாநாயகனான கமல் அந்த நிகழ்ச்சியில் பேசிய போது, “விஜய் நடித்த படம் வேண்டுமானால் குருவியாக இருக்கலாம். ஆனால், அவர் வானில் உயர உயரப் பறக்கும் பருந்து தான்” என்று குறிப்பிட்டிருந்தார்…இந்த வீடியோ கிளிப்பை வைரல் செய்து வரும் விஜய் ரசிகர்கள், ரஜினிகாந்த் பேச்சுக்கு அன்றே பதிலடி கொடுத்த கமல் என பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.