கடனில் தத்தளிக்கும் கமல்ஹாசன்… பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது, முதல் சீசன் மிக பெரிய ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் என்பது யாரும் மறுக்க முடியாதா உண்மை.

தினமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றுவதால், அந்த இரண்டு நாட்கள் கூடுதல் பார்வையாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தவிர வேர யாரும் இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக கொண்டு செல்ல முடியாது என்கிற அளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பிக் பாஸ் 5 சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த கமல்ஹாசன், தற்போது விக்ரம் படத்தை தயாரித்து நடித்து வருவதால் ஒரே நேரத்தில், பிக்பாஸ்‌ அல்டிமேட்‌ மற்றும்‌ விக்ரம்‌ இரண்டையும்‌ மேற்கொள்ள முடியாத சூழல்‌ உருவாகிவிட்டதால், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனுக்கு பதில் நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்கு வேறு காரணம் கூறப்பட்டு வருகிறது. அதாவது கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 2018ம் ஆண்டு விஸ்வரூபம் பாகம் இரண்டு இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் சொந்தமாக தயாரித்தார் இந்த படம் படு தோல்வியை அடைந்தது, இதற்கு முன்பு உத்தமவில்லன், தூங்காவனம் போன்ற கமல் நடிப்பில் வெளியான படங்களும் தோல்வியை தழுவி மிக பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் பெரும் கடன் சுமையில் இருந்து வரும் கமல்ஹாசன் கடந்து மூன்று வருடங்களாக எந்த ஒரு படமும் அவரது நடிப்பில் வெளியாக வில்லை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் வருமானத்தை வைத்து சமாளித்து வந்தார் கமல்ஹாசன், இதனை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் அவர் நடிக்கும் இந்தியன் படமும் பாதியிலே நிற்கிறது. கையில் எந்த ஒரு படமும் இல்லாத நிலையில் விக்ரம் படத்தை மட்டும் தயாரித்து நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

இந்நிலையில் கடனில் தத்தளித்து வரும் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சம்பளத்தை அதிகரித்து கேட்டுள்ளார், ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் சம்பளத்தை அதிகரிக்க மறுத்துள்ளதை தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார், இதனை தொடர்ந்து விக்ரம் படம் வெளியாகி வசூலை குவித்தால் மட்டுமே கடனில் இருந்து கமல்ஹாசன் தப்பிக்க முடியும் என கூறப்படும் நிலையில்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பின்பு மேலும் பண கஷ்டத்தில் இருக்கும் கமல்ஹாசன் அவசரப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டோம் என வருத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், விரைவில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதர்க்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜயை நேருக்கு நேராக அசிங்கப்படுத்திய இயக்குனர் மிஸ்கின்..! அவமானத்தில் தலைகுனிந்த விஜய்…