ஜெயம் ரவிக்கு மிட் நைட்டில் கூட மணைவி ஆர்த்தி கொடுத்த டார்ச்சர்… அந்த மாதிரியான டார்ச்சரால் ஏற்பட்ட விவாகரத்து…

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது தன்னுடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக ஒற்றை அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் ரவி அவருடைய மனைவி விட்டு பிரிய இருப்பதாக பரபரப்பாக பேச வந்த நிலையில் இருவரும் பிரிய மாட்டார்கள் அவர்களுக்குள் பேசி சரி செய்து விடுவார்கள் என்று தான் பலரும் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்த காரணத்தினால் குறிப்பாக இந்த விவாதத்தில் ஆர்த்தி ஒரு கட்டத்தில் இறங்கி வந்தாலும் கூட, ஜெயம் ரவி பிரிவதில் உறுதியாக இருப்பதால் பிரிவை அறிவித்துவிட்டார். பொதுவாகவே சினிமா துறையில் அஜித் – ஷாலினி போன்று சிறந்த தம்பதியராக வந்தவர்கள் நடிகர் ஜெயம் ரவியும் அவருடைய மனைவி ஆர்த்தியும்.

அதே நேரத்தில் பல பேட்டியில் மனைவி ஆர்த்தியை விட்டுக் கொடுக்காமல் பேசுகின்றவர் ஜெயம் ரவி. அதே போன்று ஆர்த்தியும் கணவர் ஜெயம் ரவியை பற்றி பெருமையாக பேசி இருப்பார், இப்படி இருக்கும் பொழுது இவர்கள் திடீரென்று பிரிவதாக அறிவித்ததின் பின்னணியில் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் நடித்தார்களா.? என்கின்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.

ஒருவர் மீது ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்கிறோம் என்பது போன்று பேட்டி கொடுத்ததெல்லாம் நடிப்பா.? அப்ப திரை துறையினர் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறார்களா.?என்கின்ற விவாதமும் தற்பொழுது எழுந்துள்ளது. இந்த நிலையில் ஜெயம் ரவி மீது அவருடைய மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் இந்த விவாகரத்துக்கு முடிவின் காரணம் என கூறப்படுகிறது.

நடிகர் ஜெயம் ரவி திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பின்பும் எந்த ஒரு நடிகையுடனும் கிசுகிசுக்காமல் வந்தவர். அந்த வகையில் மிக ஒழுக்கமான நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர் என்று பெயர் பெற்றவர். ஆனால் கடந்த சில வருடங்களாகவே ஜெயம் ரவி மீது அவருடைய மனைவிக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டதாகவும், குறிப்பாக ஜெயம் ரவி படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும் கூட அவர் நிம்மதியாக வேலை செய்ய முடியாத அளவிற்கு அவருடைய மனைவி மிகப் பெரிய டார்ச்சர் ஆக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதாவது ஜெயம் ரவி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் பொழுது மனைவி ஆர்த்தி போன் செய்து எடுக்கவில்லை என்றாலும் அல்லது அவருடைய போன் சுவிட்ச் ஆஃப் ஆக இருந்தாலும், உடனே அந்தப் படத்தின் இயக்குனர், கேமராமேன் அல்லது உதவி இயக்குனர் என அந்த படப்பிடிப்பில் யாராவது ஒருவரை தொலைபேசியில் அழைத்து தன்னுடைய கணவர் என்ன பண்ணுகிறார் என்று விசாரிப்பாராம் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி.

அதேபோன்று படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெயம் ரவி வெளிநாடு சென்றால், சரியாக நள்ளிரவில் தொலைபேசியில் கணவரை அழைக்கும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, உன் பக்கத்தில் யார் இருக்கிறார்.? என்றெல்லாம் சந்தேகத்துடனே ஜெயம் ரவியை கேட்டு வந்துள்ளார். இப்படி ஜெயம் ரவியின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்துள்ள அவருடைய மனைவி ஆர்த்தி,

ஜெயம் ரவி எந்த ஒரு நடிகையுடனும் கிசுகிசுவில் இல்லை என்று தெரிந்தும் கூட அவருடைய சந்தேகப்பார்வை கடைசி வரை போகவே இல்லை, தொடர்ந்து ஜெயம் ரவியை சந்தேகத்துடனே பார்க்கும் ஆர்த்தி இது தொடர்பாக பலமுறை வீட்டிலும் இருவருக்கு இடையில் பிரச்சனை வெடித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கடும் டார்ச்சர் காரணமாக பொறுமை இழந்த ஜெயம் ரவி,

இதே போன்ற சந்தேகத்துடன் நீண்ட நாட்கள் வாழ முடியாது என முடிவெடுத்து மனைவியை விட்டு பிரிய வேண்டும் என்ன முடிவெடுத்ததாகவும், அந்த வகையில் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விட்டு பிரிவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மனைவியின் சந்தேக குணம் தான் ஜெயம் ரவி பிரிவதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here