ஜெயம் ரவி தங்கி இருந்த ஓட்டலுக்கே சென்ற மனைவி ஆர்த்தி… யாருடன் ஜெயம் ரவி தங்கியிருந்தார் தெரியுமா.?

0
Follow on Google News

சுமார் 15 வருட ஜெயம் ரவி – ஆரத்தி இவர்களின் திருமண வாழ்க்கை தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. தன்னுடைய மனைவி ஆர்த்தியை விட்டு ஒரு மனதாக பிரிவதாக தன்னுடைய அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளார் ஜெயம் ரவி. இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரையும் வெளியிலிருந்து பார்க்கும் மக்கள் இவ்வளவு ஒற்றுமையாக இருந்த தம்பதிகளுக்குள் எப்படி பிரிவு ஏற்பட்டது என்கின்ற மிகப்பெரிய அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர்கள் பிரிவுக்கான காரணம் என்ன என்றும் சினிமா ரசிகர்கள், அலசி ஆராய தொடங்கி விட்டனர். நடிகர் ஜெயம் ரவி திருமணத்திற்கு பின்பு ஒரு கட்டத்தில் மாமியார் மற்றும் மனைவியின் முழு கட்டுப்பாட்டிற்கு சென்றவர். என்ன செய்ய வேண்டும் என்றாலும் மாமியார் மனைவியைத் தாண்டி எதுவுமே சுதந்திரமாக செயல்பட முடியாது என்கின்ற ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டார். அந்த வகையில் ஒரு சிறை கைதி போல் ஜெயம் ரவி வழிநடத்தப்பட்டதாக விமர்சனம் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவி தான் நடிக்கும் சக நடிகைகளுடன் எந்த ஒரு கிசுகிசுவில் இதுவரை சிக்கியது இல்லை. அந்த வகையில் குறிப்பிட்டு தமிழ் சினிமாவில் ஒழுக்கமான நடிகர்கள் என மிகக் குறுகிய நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். இருந்தாலும் சினிமா துறையில் இருக்கும் பிற நடிகர்கள் போன்று தன்னுடைய கணவர் ஜெயம் ரவியின் அப்படித்தான் என்கின்ற ஒரு சந்தேக பார்வை அவருடைய மனைவி ஆர்த்திக்கு எப்போதும் உண்டு என்கின்றது சினிமா வட்டாரங்கள்.

அந்த வகையில் தொடர்ந்து அடிக்கடி தீவிரமா கணவனின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து அடிக்கடி அதிரடியாக சில சோதனைகளும் செய்துள்ளார் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. இது பல நேரங்களில் ஜெயம் ரவிக்கு மிகப் பெரிய உச்சகட்ட அவமானத்தையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது. படப்பிடிப்பில் ஜெயம் ரவி இருக்கும்பொழுது அந்த சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் மேக்கப் மேனிடம் ஜெயம் ரவி மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் கணவனின் நடவடிக்கை குறித்து சந்தேகத்துடனே விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

சில நேரங்களில் அந்த படத்தின் இயக்குனருக்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய கணவன் அங்கே என்ன செய்கிறார் என்று விசாரிப்பாராம், இது ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி காதுகளுக்கு வந்ததும் அதை தனக்கு ஏற்பட்ட உச்சகட்ட அவமானமாக கருதி இருக்கிறார் ஜெயம் ரவி. இருந்தாலும் தன்னுடைய இரண்டு குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்ட ஜெயம் ரவி, தன்னுடைய குழந்தைகளுக்கு தம் மனைவியுடன் சமரசமாக வாழ வேண்டும் என்று மனைவியின் டார்ச்சல்களை பொறுத்துக் கொண்டு இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மிகப்பெரிய உச்சகட்ட சம்பவமாக ஜெயம் ரவி வாழ்க்கையில் நடந்ததாக சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது ஜெயம் ரவி அவுட்டோர் படப்பிடிப்புக்காக சென்ற போது அங்கே ஜெயம் ரவி தங்கி இருந்த ஓட்டலுக்கு நள்ளிரவில் சுமால் 12 மணி அளவில் சென்று ஜெயம் ரவி மனைவி ரூம் கதவை தட்டி ஜெயம் ரவி இருக்கும் ரூமுக்குள் நுழைந்து அதிரடி சோதனையை மேற்கொண்டு இருக்கிறார்.

அதாவது ஜெயம் ரவியுடன் வேறு ஏதேனும் நடிகைள் இருக்கிறார்களா என்று, ஜெயம் ரவி அவுட்டோர் ஷூட்டிங் சென்ற அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கே சென்று, அவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திருக்கிறார் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி. இப்படி தொடர்ந்து தன்னுடைய கணவன் மீது சந்தேகத்துடன் இருப்பது மட்டுமில்லாமல் தொடர்ந்து தன்னுடைய கணவரை அவமானப்படுத்திக் கொண்டே இருந்துள்ளார் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஜெயம்ரவி இதற்கு மேல் தான் அவமானப்பட முடியாது. தான் நல்லவன் என்று ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன.? அதனால் நிரந்தரமாக மனைவியை விட்டு பிரிந்து விட வேண்டும் என்று ஜெயம் ரவி முடிவு செய்தது தன்னுடைய விவகாரத்தை அறிவித்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here