ஆர்த்தி கையில் ஜெயம்ரவியின் ரகசிய புகைப்படம்… உன் சினிமா கேரியரை காலி செய்யாமல் விடமாட்டேன்.!

0
Follow on Google News

ஜெயம் ரவி ஆர்த்தி இருவருக்கும் இடையிலான பிரச்சனை தற்பொழுது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதற்கு முன்பு இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிந்து கொள்கிறோம் என்று அறிவித்த சினிமா நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா – தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் – சைந்தவி ஆகியோர் ஒருமனதாக பிரிந்ததால் எந்த ஒரு சர்ச்சையும் இல்லாமல் பிரிந்து விட்டார்கள். ஆனால் ஜெயம் ரவி மனைவி விட்டு பிரிந்தாலும் ஆர்த்தி அதற்கு இடம் கொடுக்கவில்லை.

ஜெயம் ரவி அவருடைய மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்த பின்பு, அவருடைய பொருட்கள் மட்டும் வாகனங்களை தன்னுடைய வீட்டில் இருந்து மீட்டு தர வேண்டும் என போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பான ஒரு விசாரணையும் சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மற்ற சினிமா நட்சத்திரங்கள் போன்று பயந்து ஓடி ஒளியாமல் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன் பக்கம் விளக்கத்தை தெளிவுபடுத்தி விட்டார் ஜெயம் ரவி.

தனக்கும் கேனிஷா இருவருஉள்ளஉறவு பற்றியும் பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்த ஜெயம் ரவி, கேனிஷா உடன் இணைந்து நிறுவனம் ஒன்று தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் அவர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களில் இருவருக்கும் இடையில் பெரும் முரண்பாடு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.குறிப்பாக ஜெயம் ரவியை பார்க்க முடியாமல் தானும் தன்னுடைய இரண்டு மகன்களும் தவிர்த்து வருவதாக ஆர்த்தி தெரிவித்து இருந்தார்.

ஆனால் ஜெயம் ரவி அவருடைய இரண்டு குழந்தைகளையும் அவ்வப்போது சந்தித்து நேரம் செலவிட்டு வருவதாக, ஜெயம் ரவி தரப்பிலே தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜெயம் ரவி மீது சந்தேகம் அடைந்த ஆர்த்தி சில மாதங்களுக்கு முன்பு கேனிஷாவையும் – ஜெயம் ரவியும் கையும் களமாக பிடித்தது எப்படி என்கின்ற ஒரு தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அதாவது ஜெயம் ரவி தொடர்ந்து அடிக்கடி கோவா சென்று வந்து கொண்டிருந்த நிலையில் ஆர்த்திக்கு ஜெயம் ரவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது . அதாவது கணவர் மீது சந்தேகம் இருந்தாலோ, அல்லது மனைவி மீது கணவருக்கு சந்தேகம் இருந்தாலோ, அவர்களின் பின்னணி குறித்து, எங்கே செல்கிறார்கள்.? யாருடன் இருக்கிறார்கள் என்கின்ற ஒரு முழு தகவலை சேகரித்து கொடுப்பதற்கு என்ற ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அப்படி ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் தன்னுடைய கணவர் ஜெயம் ரவி எங்கே செல்கிறார் யாருடன் இருக்கிறார் என்கின்ற முழு தகவலை சேகரித்து தரும்படி நாடி இருக்கிறார் ஆர்த்தி. இதனை தொடர்ந்து கோவாவில் ஜெயம் ரவி மற்றும் கேனிஷா இருவரும் ஒன்றாக செம்ம ஜாலியாக இருப்பதை உறுதி செய்த அந்த நிறுவனம், ஜெயம் ரவி – கேனிஷா இருவரும் ஒன்றாக இருப்பதை தூரத்தில் இருந்து புகைப்படம் எடுத்து ஆர்த்திக்கு அனுப்பியுள்ளார்கள்.

மேலும் ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் எங்கே செல்கிறார்கள், எங்கே தங்குகிறார்கள் என்கின்ற முழு தகவலையும் அந்த நிறுவனம் சேகரித்து ஆர்த்தி இடம் தெரிவித்திருக்கிறது. உடனே ஆர்த்தி நீ என்னையே ஏமாற்றுகிறாயா.? உன்னை பற்றி எனக்கு முழுதும் தெரியும் என்று ஜெயம் ரவியும் கேனிஷாவும் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கே ரகசியமாக ப எடுத்த புகைப்படங்களை ஜெயம் ரவிக்கு ஆர்த்தி அனுப்பிவிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்.

இதன் பின்பு தான் ஜெயம் ரவிக்கு ஆத்திக்கும் இடையில் உச்சகட்ட மோதல் ஏற்பட்டு ஜெயம் ரவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக முடிவு எடுத்திருக்கிறார். இந்த நிலையில் என்னை நீ பாதியிலே விட்டுட்டு எப்படி சென்று விடுவாய்.? உன்னுடைய சினிமா கேரியரையே நான் காலி செய்கிறேன் என்று ஜெயம் ரவிக்கு எதிராக பல வேலைகளை ஆர்த்தி செய்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here