ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி குடும்ப பின்னணி என்ன.? ஆர்த்தி வலையில் ஜெயம் ரவி விழுந்தது எப்படி தெரியுமா.?

0
Follow on Google News

80 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முக்கியமான படப்பிடிப்பு தளமாக திகழ்ந்தது கல்பனா ஹவுஸ். அந்த கல்பனா யார் என்றால் ஜெயம் ரவி மாமியார் சுஜாதா விஜயகுமாரின் மாமியார் தான் கல்பனா. அதாவது கன்னட நடிகையான கல்பனாவின் மகன் விஜயகுமாரின் மகள் தான் நடிகர் ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்ட ஆர்த்தி.

கன்னட நடிகையான கல்பனா மைசூர் மகாராஜாவுக்கு சொந்தமான சென்னையில் உள்ள இந்த இடத்தை விலைக்கு வாங்குகிறார். அந்த இடம் கல்பனா ஹவுஸ் என்கிற பெயரில் சூட்டிங் ஸ்பாட் ஆக மாறுகிறது. கல்பனாவின் மகன் விஜயகுமார் நடிகர் ரஜினிகாந்துடன் அடையார் பிலிம் இன்ஸ்டியூட்டில் ஒன்றாக படி படிக்கிறார். அந்த காலகட்டத்தில் இயக்குனர் எஸ் பி முத்துராமன் ஒரு புதுமுக நடிகரை தேடிக் கொண்டிருக்கிறார்.

படத்தின் பெயர் ஒரு கோவில் இரு தீபம் இந்த படத்தின் நடிகராக நடிகை கல்பனாவின் மகன் விஜய குமாரை ஹீரோவாக கொண்டு வருகிறார்கள். மேலும் பிரபல நடிகை கல்பனாவின் மகன் என்பதால் அவருக்கு சினிமா வாய்ப்பு மிக எளிதாக கிடைத்து விட்டது. ஆனால் கல்பனா மகன் விஜயகுமார் நடித்த முதல் படமே படுதோல்வி, இதனை தொடர்ந்து அவர் சினிமா துறையை விட்டுவிட்டு வைர வியாபார தொழிலை தொடங்குகிறார்.

நடிகை கல்பனாவின் மகன் விஜயகுமாரின் மனைவியும் ஆர்த்தியும் அம்மா மகன் சுஜாதா விஜயகுமார் அதுவரை கல்பனா ஹவுஷை சூட்டிங் வாடகைக்கு விட்டு வந்தவர், கணவர் விஜயகுமார் வைர வியாபாரத்தில் நல்ல கல்லா கட்டவும், கல்பனா கவுஸை ஷூட்டிங் வாடகைக்கு விடுவதை நிறுத்திவிட்டு தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்க தொடங்குகிறார்.

அப்படி தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்கும் பொழுது பல சினிமா முன்னணி நடிகைகள் சுஜாதா விஜயகுமாருக்கு நெருங்கிய நண்பர்களாக ஆகிறார்கள். அப்படித்தான் நடிகை குஷ்புவும் சுஜாதா விஜயகுமாருக்கு குடும்ப நண்பர்களாக மாறுகிறார். இதனைத் தொடர்ந்து சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியும் தன்னுடைய தாய் சினிமாவில் இருப்பதால் அவருக்கும் சினிமா சார்ந்த பலரும் நண்பர்கள் கிடக்கிறார்கள்.

அப்படித்தான் நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி பழக்கம் ஏற்படுகிறது. இது நாளடைவில் அவர்களுக்கு காதலாக உருவெடுத்து விடுகின்றன. ஆர்த்தி – ஜெயம் ரவி காதலுக்கு சுஜாதா விஜயகுமாரின் குடும்ப நண்பர்களாக இருக்கக்கூடிய நடிகை குஷ்பூ உட்பட பல சினிமா துறையைச் சார்ந்தவர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால் ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் ஆரம்பத்தில் ஜெயம் ரவியின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.

இருந்தாலும் மகன் தன்னுடைய காதலில் உறுதியாக இருப்பதால் அந்த காதலுக்கு சம்மதம் தெரிவி த்துள்ளார். அதே நேரத்தில் ஆர்த்திக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்று அவருடைய அம்மா சுஜாதா விஜயகுமார் முடிவு செய்தபோது, அவர்களின் குடும்ப நண்பர்களாக இருந்த பல மூத்த நடிகைகள் வளர்ந்து வரும் நடிகர், ரொம்ப ஒழுக்கமான பையன் ஜெயம் ரவியை திருமணம் செய்து வைக்கலாம் என்று தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே ஆர்த்தியை ஜெயம் ரவிக்கு சினிமா துறையில் இருக்கும் சில மூத்த நடிகைகள் மூலம் அறிமுகப்படுத்த வைத்து காதல் செய்வதற்காக ஏற்பாடும் நடைபெற்றதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here