ஜெயம் ரவி கன்டிஷனை ஏற்க்க மறுத்த மனைவி ஆர்த்தி… சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை…

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்கின்ற தகவல் ஒரு வாரமாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக வரும் செய்திகள் உறுதி ப்படுத்தப்படவில்லை என்றாலும் கூட, ஜெயம் ரவியின் மனைவி ஆரத்தி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஜெயம் ரவி இருக்கும் புகைப்படங்களை நீக்கியது, இவர்கள் விவாரத்து செய்ய இருப்பது உண்மைதான் என்கின்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் பொதுவாக சினிமா நடிகர் நடிகைகள் தங்கள் குறித்து ஏதேனும் விவாகரத்து வதந்திகள் வந்தால், நிச்சயம் அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்த தம்பதியர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை அவர்களின் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார்கள். அல்லது இருவரும் ஒன்றாக இணைந்து ஏதாவது ஒரு பொது நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

ஆனால் ஜெயம் ரவியும் அவருடைய மனைவியும் விவாகரத்து பெற போகிறார் என்கின்ற செய்திகள் வெளியாகி, சுமார் ஒரு வாரமாக தமிழ் சினிமா வட்டாரங்கள் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுவரை ஜெயம் ரவியோ அல்லது அவர்களுடைய மனைவி தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு தெரிவித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விவாகரத்து செய்வதற்கு முக்கிய காரணம் அவருடைய மாமியாரின் தலையீடு அதிகமாக இருந்ததால்தான் என்றும், ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி மாமியார் சொல்வதை கேட்டு கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும் என்கின்ற ஒரு நிலைக்கு வந்ததாகவும். அதுவே ஜெயம் ரவிக்கும் அவர் மாமியாருக்கும் இடையிலாக பிரச்சனையாக உருவெடுத்து,பின்பு ஜெயம் ரவிக்கும் அவருடைய மனைவிக்கும் பிரச்சனையாக மாறி விவாகரத்து செய்யும் நிலைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என ஜெயம் ரவி முடிவு செய்த பின்பு , அதுவரை வீட்டோட மருமகனாக இருந்த ஜெயம் ரவி, அதன் பின்பு அவருடைய தந்தை வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது, மேலும் விவாகரத்து தொடர்பாக வழக்கறிஞரை அணுகிய ஜெயம் ரவி அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவியும் அவருடைய மனைவியையும் மீண்டும் இணைத்து வைப்பதற்காக அவர்கள் குடும்பத்தில் நெருக்கமாக இருக்கக்கூடியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆரம்பத்தில் முதலில் ஜெயம் ரவி தான் விவாகரத்து முடிவு எடுத்ததாகவும், ஆனால் அவருடைய மனைவி ஆர்த்தி ஜெயம் ரவியுடன் இணைந்து வாழவே விரும்பியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஜெயம் ரவி விவாகரத்து செய்வதில் உறுதியாக இருந்த நிலையில், இருவருக்கும் இடையில் நடத்திய பேச்சு வார்த்தையில் ஜெயம் ரவி அவருடைய மனைவிக்கு சில கண்டிஷன்களை போட்டதாக கூறப்படுகிறது. அந்த கண்டிஷனில் இனி நம்முடைய வாழ்க்கையில் மாமியார் சுஜாதா விஜயகுமார் தலையிடக்கூடாது, அதாவது எந்த விதத்திலும் குடும்ப விஷயமாக இருந்தாலும் சரி, சினிமா விஷயமாக இருந்தாலும் சரி மாமியார் சுஜாதா விஜயகுமார் தலையிடக்கூடாது அப்படி என்றால் ஆர்த்தியுடன் சமரசம் செய்து கொள்ள தயார் என ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கு கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் என்னுடைய தாயை அப்படி என்னால் ஒதுக்க முடியாது என ஆரத்தி பிடிவாதமாக இருந்ததால் இந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்பே தான் ஆர்த்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலிருந்து ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கியதாகவும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here