ஜெயம் ரவி இரண்டாவது திருமணம் செய்வதில் சிக்கல்… மனைவி ஆர்த்தி வைத்த செக்… பாவம்யா ஜெயம் ரவி.!

0
Follow on Google News

கடந்த சில மாதங்களாகவே நடிகர் ஜெயம் ரவிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும், விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகவும் உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்பொழுது நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விட்டு பிரிவதாக ஒற்றை அறிக்கை மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஜெயம் ரவிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி மனைவி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஜெயம் ரவி உடன் இருக்கும் புகைப்படத்தை நீக்கினார். இதன் பின்பே ஜெயம் ரவி அவருடைய மனைவிக்கு இடையில் பிரச்சனை என்றும் இருவரும் பிரிய இருப்பதாகவும் செய்திகள் உலாவ தொடங்கியது.

இந்த நிலையில் ஆர்த்தி மற்றும் அவருடைய அம்மாவால் தான் ஜெயம் ரவிக்கு தொடர்ந்து பிரச்சனை மேல் பிரச்சனை தொல்லை மேல் தொல்லை ஏற்பட்டு பல அவமானங்களை சந்தித்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வந்துள்ளார் ஜெயம் ரவி. அந்த வகையில் ஜெயம் ரவியால் ஆர்த்திக்கோ அவருடைய அம்மாவுக்கு பிரச்சனை கிடையாது. இந்த நிலையில் மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக ஜெயம் ரவி தான் அறிவித்துள்ளார்.

ஆனால் ஜெயம் ரவியை விட்டு பிரிவதாக அவருடைய மனைவி ஆர்த்தி இதுவரை அறிவிக்கவில்லை, குறிப்பாக சினிமா துறையை சார்ந்த தம்பதியர்கள் தங்களுடைய இல்லற வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் பொழுது கணவன் மனைவி இருவருமே ஒருமனதாக பிரிவதாக ஒரே மாதிரியான அறிக்கை அவரவர் பெயர்களில் வெளியிடுவார்கள்.

உதாரணத்திற்கு நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக முடிவெடுத்த பின்பு தனுஷ் நாங்கள் இருவரும் ஒருமனதாக பிரிக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களிலே ஐஸ்வர்யாவும் அதே அறிக்கையை வெளியிட்டார். ஆனால் அறிக்கையில் இடம் பெற்ற வாக்கியங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருந்தது அவர்கள் பெயரும் கையொப்பமும் மட்டும் தான் வேற வேறாக இருந்தது.

அப்படி இருக்கையில் ஜெயம் ரவி தன்னுடைய அறிக்கையில் ஒருமனதாக பிரிக்கிறோம் என்று குறிப்பிடாமல், நான் என் மனைவியை விட்டு பிரிகிறேன் என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வகையில் ஜெயம் ரவியை விட்டு பிரிவதற்கு முழுவதுமாக ஆர்த்தி சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும், ஜெயம் ரவி தான் ஆர்த்தியை விட்டு பிரிந்துள்ளார் என கூறப்படுகிறது. காரணம் இங்கே பிரச்சனை ஜெயம் ரவியால் ஆர்த்திக்கு இல்லை.

ஆர்த்தியால் தான் ஜெயம் ரவி தொடர்ந்து தொல்லைகளை அனுபவித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜெயம் ரவி அடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், அவர் சட்டப்படி நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற வேண்டும். ஆனால் இந்த விவாகரத்துக்கு அவர் மனைவியும் சம்மதித்தால் தான் எளிதாக விவாகரத்து பெற முடியும். அந்த வகையில் ஜெயம் ரவி தன்னை விட்டுப் பிரிந்தாலும் பரவாயில்லை ஆனால் தான் விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்பதில் ஆர்த்தி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம் சட்டப்படி விவாகரத்து பெற்றால் மட்டுமே சட்டப்படி ஜெயம் ரவி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் ஜெயம் ரவி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் என்று ஆர்த்தி உறுதியாக இருப்பதாகவும். அந்த வகையில் என்னை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து ஜாலியாக இருக்க விட்டு விடுவேனா.? நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறேன் என் ஜெயம் ரவி இரண்டாவது திருமணத்திற்கு செக் வைத்துள்ளார் அவரது மனைவி ஆர்த்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here