ஜெயம் ரவி போன் சுவிட்ச் ஆப்… வலை வீசி தேடும் மனைவி ஆர்த்தி… யாருடன்.. எங்கே சென்றார் ஜெயம் ரவி தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விட்டு பிரிவதாக சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அவருக்கும் அவருடைய மனைவிக்கும் கடந்த சில மாதங்களாகவே பிரச்சனை இருந்து வருவது குறித்து வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஆனால் ஜெயம் ரவி இந்த முடிவை தனிச்சையாக எடுத்ததாகவும் மனைவியுடன் ஆலோசித்து இருவரும் ஒருமனதாக பிரிய வேண்டும் என்கின்ற முடிவு இது அல்ல என்று ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தரப்பிலிருந்து ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.

மேலும் ஜெயம் ரவியை விட்டு பிரிவதற்கு ஆர்த்திக்கு இன்னும் மனம் இல்லை என்றும். ஜெயம் ரவியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்து விட வேண்டும் என்று தான் ஆர்த்தி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். ஆனால் ஜெயம் ரவி அதற்கான வாய்ப்பை தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஜெயம் ரவி அவர் தந்தை வீட்டில் தங்கி வருவதாக தகவல் வருகிறது.

அந்த வகையில் மனைவி இருக்கும் வீட்டிற்கு கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படம் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட ஜெயம் ரவி வர மாட்டார் என்றே கூறப்படுகிறது. காரணம் பட குழுவினரே ஜெயம் ரவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்த பின்பு ஜெயம் ரவி மனைவி வெளியிட்ட அறிக்கையில், என்ன நடக்கிறது என்று தெரியாமல் நானும் தன்னுடைய இரண்டு குழந்தைகளும் குழம்பிப் போய் உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் ஜெயம் ரவி கடந்த சில மாதங்களாகவே அவருடைய மனைவி தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு தொடர்ந்து மனைவியை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஜெயம் ரவிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்து கொள்ள ஜெயம் ரவி மனைவி அவருடைய தொலைபேசியை தொடர்பு கொண்ட போது தொலைபேசி நாட் ரீச்சபிள் இருந்ததால், நேரடியாக ஜெயம் ரவி வீட்டிற்கே சென்று அங்கே ஜெயம் ரவி குறித்து விசாரித்துள்ளார். ஆனால் ஜெயம் ரவி குடும்பத்தினர் அவர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை.

எங்களிடம் சரியாகவே ஜெயம் ரவி பேச மாட்டேன் என்கிறார். வந்தாலும் ஒரு சில மணி துளியில் அவர் இங்கிருந்து சென்று விடுகிறார். நீ எங்களிடம் வந்து கேட்டால் என்னமா.? என்று பதில் தெரிவித்து விட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவியை நேரில் சந்தித்து சமரச முயற்சியில் ஈடுபடுவதற்கு ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி கடந்த சில மாதங்களாகவே முயற்சித்து வரும் வருகிறார்.

ஆனால் அதற்கான வாய்ப்பை ஜெயம் ரவி ஏற்படுத்தி தரவில்லை என்றும் அதே நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் தொலைபேசி நாட் ரீச்சபிள் என வருவதால், ஒருவேளை ஜெயம் ரவி தொலைபேசி எண்ணை மாற்றி விட்டாரா.? என்கின்ற குழப்பமும் நீடித்து வருகிறது. அந்த வகையில் தன்னுடைய கணவரை சந்தித்து சமரசம் செய்ய வலை வீசி தேடி வருகிறார் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here