ரஜினி மகளுடன் ஜெயம் ரவிக்கு திருமண பேச்சுவார்த்தை… ஆர்த்தியை ஜெயம் ரவியை விவாகரத்து செய்ய காரணம் இதுவா.?

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சியில் தற்பொழுது இறங்கி உள்ளது ஒட்டுமொத்த தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் நடிகர் ஜெயம் ரவி எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு வந்தாலும் அவருடைய மனைவியுடன் தான் வருவார், அந்த அளவுக்கு நடிகர் அஜித் – ஷாலினி போன்று சிறந்த தம்பதிகளாக தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியினர் இருந்து வந்தனர்.

ஜெயம் ரவி அவருடைய மனைவியை விட்டு அவர்தான் பிரிவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இருவரும் ஒருமனதாக பிரிக்கிறோம் என்று அவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அந்த வகையில் தற்பொழுது ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தன்னுடைய கணவர் ஜெயம் ரவி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததாகவும், என்னிடம் எதும் இதுகுறித்து ஆலோசிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த வகையில் ஜெயம் ரவியை விட்டு அவருடைய மனைவி ஆர்த்திக்கு பிரிவதற்கு மனமில்லை, ஆனால் ஜெயம் ரவி தான் அவருடைய மனைவியை விட்டு பிரிய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவி , ஆர்த்தியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்து வைப்பது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்திற்கும் ஜெயம் ரவி குடும்பத்திற்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை குறித்து சமீபத்தில் சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார்.

அதாவது நடிகர் ஜெயம் ரவி சினிமாவில் எந்த ஒரு நடிகையுடனும் கிசு கிசுகி சிக்காதவர், மிகவும் ஒழுக்கமான குடும்பப் பின்னணியில் வந்த ஜெயம் ரவிக்கு சினிமாவிலும் நல்ல மார்க்கெட் இருந்தது. அந்த வகையில் ஜெயம் ரவிக்கு தன்னுடைய இரண்டாவது மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என ரஜினிகாந்த் குடும்பத்தினர் விரும்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகனிடம் ரஜினிகாந்த் குடும்ப தரப்பிலிருந்து இது குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று இருக்கிறது, உடனே தன்னுடைய மகனிடம் கேட்டு பதில் சொல்கிறேன் என தெரிவித்த எடிட்டர் மோகன், இது தொடர்பாக ஜெயம் ரவியிடமும் பேசியிருக்கிறார். அதாவது நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது மகளை ஜெயம் ரவிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் அவருடைய அப்பா எடிட்டர் மோகனுக்குமே மிகப்பெரிய விருப்பமாக இருந்துள்ளது.

ஆனால் ஜெயம் ரவி தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியை காதலித்து வருவதாக தெரிவித்தவர் அவரையே தான் நான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் பிடித்துள்ளார். இருந்தாலும் எடிட்டர் மோகனுக்கு ஆரம்பத்தில் சுஜாதா மகளை ஜெயம் ரவிக்கு திருமணம் செய்து வைப்பதில் விருப்பமில்லை.

இருந்தாலும் ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி தன்னுடைய காதலில் உறுதியாக இருந்ததால் அவருடைய தந்தை எடிட்டர் மோகன் மகனின் விருப்பப்படியே ஜெயம் ரவி – ஆர்த்தி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் அந்த வகையில் ஜெயம் ரவிக்கு சூப்பர் ஸ்டார் மகனே வரமாக வந்த போது கூட, தான் காதலித்த பெண்ணை ஏமாற்ற கூடாது என்பதற்காக அந்த வரனை வேண்டாம் என்று காதலித்த ஆர்த்தியை கரம் பிடித்தார் ஜெயம்ரவி.

ஆனால் ஜெயம் ரவி திருமணத்திற்கு பின்பு அவருடைய மாமியார் கட்டுக்குள் கொண்டு வந்து, ஜெயம் ரவி கால் சீட், ஜெயம் ரவி எந்த கதையில் நடிக்க வேண்டும், எவ்வளவு சம்பளம் என ஒரு மருமகனை சுதந்திரமாக செயல்பட விடாமல், ஒரு அடிமை போல் நடத்தியத்தியத்தின் விளைவு இன்று அந்த அடிமை சங்கிலியை உடைத்து வெளியேற வேண்டும் என்றால் விவாகரத்து தான் ஒரே முடிவு என்பதற்காக ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டாரா.? என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here