ஜெயம் ரவிக்கே விபூதி அடித்த ஆர்த்தி… கோடீஸ்வரர் குடும்பம் என்பதலெல்லாம் பீலா தானா…

0
Follow on Google News

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி மிக பெரிய கோடீஸ்வர குடும்பம் போன்றும், ஜெயம் ரவி பொருளாதாரத்தில் பின்வாங்கிய குடும்பம் போன்றும் பேசப்பட்டு வருகிறது. இதில் ஜெயம் ரவி அவருடைய மனைவி மிக பெரிய வசதியான குடும்பம் என்பதால், வீட்டோடு மாப்பிள்ளையாக மாறிவிட்டார், முழுக்க முழுக்க மாமியார் பணத்தில் தான் ஏகபோக வாழ்க்கை வாழ்வது போன்ற தகவல் உண்மை இல்லை என்கிற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இதில் ஜெயம் ரவியின் பிறந்தநாளுக்கு அவருடைய மனைவி ஆர்த்தி சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஒரு காரை கிப்டாக ஜெயம் ரவிக்கு வழங்கியதாகவும், அந்த காரில் தான் அந்த காரைத்தான் கனிக்ஷா கோவாவில் பயன்படுத்தியதாக ஒரு பரபரப்பு கிளம்பி இருந்தது. இந்த நிலையில் இது சம்பந்தமாக ஜெயம் ரவி தரப்பில் ஜெயம் ரவிக்கு சொந்தமாக 6 விலை உயர்ந்த கார் உள்ளது என தெளிவு படுத்தியவர்கள்.

ஜெயம் ரவி குடும்பம் ஒன்றும் சாதாரண குடும்பம் கிடையாது நல்ல வசதி படைத்த குடும்பம் தான். ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் சுமார் 35 வருடமாக சினிமாவில் இருக்கிறார், தயாரிப்பாளராக இருக்கிறார். ஒரு காலகட்டத்தில் தெலுங்கில் சிரஞ்சீவியின் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் விழுந்த போது, ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் சிரஞ்சீவியை சந்தித்து ஒரு கதையை தெரிவித்து இந்த கதையில் நீங்கள் நடிங்க, நிச்சயம் உங்களுடைய சரிந்த மார்க்கெட் மேலும் எழுந்து நிற்கும் என்று உறுதியும் அளிக்கிறார்.

உடனே சிரஞ்சீவி அந்த கதையில் நடிக்கிறார் படம் மெகா ஹிட் ஆகுது. இதன் பின்பு ஜெயம் ரவி தந்தை எடிட்டர் மோகனிடம் நீங்க ஆந்திராவிலேயே இருங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பணியாற்றுங்கள் என சிரஞ்சீவி தெரிவிக்கிறார். ஆனால் எடிட்டர் மோகன் நாம் பிறந்த மண்ணில் தான் இருக்க வேண்டும் என்று சென்னை வந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றினார், முழுக்க முழுக்க எடிட்டர் மோகன் கண்காணிப்பிலே வளர்ந்த ஜெயம் ரவி மற்றும் அவருடைய அண்ணன் எடிட்டர் ஜெயம் ராஜா இருவரும் பாசமான குடும்பப் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள் மட்டுமல்ல பணக்காரர் வீட்டு பிள்ளைகளாகவே வாழ்ந்தார்கள்.

பணத்தில் எந்த குறையின்றி வாழ்ந்த ஜெயம் ரவி குடும்பத்தில் 6 விலை உயர்ந்து சொகுசு கார்கள் இருக்கும் நிலையில், கார் வாங்க வழி இல்லாமல் ஜெயம் ரவிக்கு அவருடைய மனைவி ஐந்து கோடி மதிப்பில் காரை பரிசளிக்கவில்லை. மேலும் ஜெயம் ரவிக்கு அவருடைய மனைவி பரிசாக அளித்த காரின் பணம் ஜெயம் ரவியின் பணத்தில், அதாவது கணவன் பணத்தில் கணவனுக்கு பரிசளித்ததாகவும் ஜெயம் ரவி தரப்பில் கூறப்படுகிறது.

அப்படி இருக்கும் பொழுது ஜெயம் ரவிக்கு அவருடைய மனைவி கார் பரிசாக அளித்ததாகவும் அந்த காரை கேனிஷா கோவாவில் பயன்படுத்தியது போன்று ஒரு தகவல் பரப்பப்படுவது ஆர்த்திக்கு அனுபவம் தேடும் முயற்சியும், மேலும் ஜெயம் ரவி இமேஜை டேமேஜ் செய்யும் வகையில் தான் இப்படி ஒரு செய்தி பரப்பப்படுகிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. குறிப்பாக ஜெயம் ரவியை தான் தங்க முட்டை இடும் வாத்து போன்று அவருடைய மனைவி ஆர்த்தி மற்றும் அவருடைய மாமியார் ஆகியோர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதாவது ஜெயம் ரவியை வைத்து குறைந்த சம்பளத்தில் அவருடைய மாமியார் படம் எடுத்து சம்பாரிப்பது, ஜெயம் ரவி வருமானத்தில் அவருடைய மனைவி ஆடம்பரமாக செலவு செய்வது எப்படி ஜெயம் ரவியை தங்க முட்டை இடும் வாத்து போன்று பயன்படுத்தியது அவருடைய மாமியார் குடும்பம் தான் என்றும் ஜெயம் ரவி இல்லை என்கிறது சினிமா வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here