அவ்ளோ சீக்கிரம் உன்ன நிம்மதியா விட்டு விடுவேனா.? ஜெயம் ரவி இமேஜை டேமேஜ் செய்ய ஆர்த்தி போட்ட ஸ்கெட்.!

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா அவர்களைத் தொடர்ந்து நடிகை சமந்தா – நாகசைந்தையா அடுத்து அவர்களை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் – சைந்தவி என இந்த இதுபோன்ற சினிமா தம்பதியர்கள் தங்களுடைய இல்லற வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்த போது இரண்டு தரப்பிலிருந்தும் நாங்கள் ஒருமனதாக பிரிக்கிறோம், என்று தான் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

ஆனால் நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியினர் ஒரு மனதாக பிரிவதாக இரண்டு தரப்பிலிருந்து அறிக்கை வெளியிட வில்லை. அதற்கு மாறாக ஜெயம் ரவி மட்டுமே தணிச்சையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த அறிக்கையில் எந்த ஒரு இடத்திலையும் நாங்கள் இருவரும் ஒருமனதாக பிரிக்கிறோம் என்று அவர் குறிப்பிடவில்லை. ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன் என்று தான் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது நான்தான் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விலகுகிறேன் என்று தன்னுடைய அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார் ஜெயம் ரவி. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்று ஜெயம் ரவி தன்னுடைய மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கைக்கு பின் ஜெயம் ரவி மீது அனுதாபமும் ஜெயம் ரவி மனைவி மற்றும் மாமியார் மீது ரசிகர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதற்கு காரணம் ஜெயம் ரவி மாமியார் தான் இந்த அத்தனை பிரச்சனைக்கும் காரணம் என சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், ரசிகர்கள் ஜெயம் ரவிக்கு ஆதரவாகவும் அவருடைய மாமியார் மற்றும் மனைவிக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயம் ரவி மனைவி தற்பொழுது ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சமூக வலைதளத்தில் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் வேதனையும் அடைந்தேன் என்று, அதாவது ஜெயம் ரவி அவர் மனைவியை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்ட தகவலை ஆர்த்தி சமூக வலைதளங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாகவும், இதுகுறித்து முன்பே ஜெயம் ரவி அவருடைய மனைவியிடம் எதும் பேசவில்லை என்பது போன்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஆர்த்தி.

மேலும் அவர் ஜெயம் ரவியுடன் மனம் விட்டு பேச எவ்வளவோ முயற்சி செய்தும் அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார், இதனைத் தொடர்ந்து இது குறித்து தாங்கள் எதுவுமே புரியாமல் நானும் என் இரண்டு குழந்தைகளும் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆர்த்தி தெரிவித்துள்ளது தான் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. காரணம் ஜெயம் ரவி, ஆர்த்தியின் திருமண உறவில் இருந்து தான் விலகுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அவர் எந்த இடத்திலும் தன்னுடைய இரண்டு குழந்தைகளை விட்டு பிரிவதாக அவர் குறிப்பிடவில்லை. அந்த வகையில் தன்னுடைய குழந்தையை எந்த விதத்திலும் அவர் விட்டு விட்டுச் செல்ல மாட்டார். இருந்தாலும் தொடர்ந்து ஆர்த்தி அவருடைய அறிக்கையில் என் குழந்தைகளை காயப்படுத்துவதே என்னால் அனுமதிக்க இயலாது, இந்த கடின காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும் மனதிடத்தையும் அவர்களுக்கு ஒரு தாயாக நின்று வழங்குவது நின்று வழங்குவது ஒரு தலையாயக் கடமை என்று,

தொடர்ந்து ஆர்த்தி தன்னுடைய குழந்தையை முன்னிறுத்துவது முழுக்க முழுக்க ஜெயம் ரவி இமேஜை டேமேஷ் செய்து தன் மீது ஒரு அனுதாபத்தை கொண்டுவர முயற்சிக்கும் வகையில் செண்டிமெண்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஆர்த்தி என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here