பணக்காரர் வீட்டு பெண் என ஏமார்ந்து ஜெயம் ரவி… மனைவி ஆர்த்தி குடும்ப பின்னணி குறித்து ஜெயம் ரவி சொன்ன தகவல்..

0
Follow on Google News

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி பிறக்கும்பொழுது மிகப்பெரிய ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், அவருடைய பாட்டி பேரில் இருக்கும் கல்பனா ஹவுஸ் சினிமா சூட்டிங்காக விடப்படும் வாடகை பணமும் மிகப்பெரிய அளவில் வருமானம் வரும் என, இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானி ரேஞ்சுக்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய கோடீஸ்வரர் குடும்பம் ஆர்த்தியின் குடும்பம் என்கின்ற ரேஞ்சுக்கு பல சேனல்களில் பலரும் பேட்டி கொடுத்து பில்டப் கொடுத்து வந்தனர்.

ஜெயம் – ஆர்த்தி இருவரும் காதலித்துக் கொண்டிருந்த பொழுது ஆரம்பத்திலேயே ஜெயம் ரவி தந்தை இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை . ஆனால் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என் கையை அறுத்துக் கொள்வேன் என்று தந்தையை மிரட்டியதால் தான் ஜெயம் ரவியின் – ஆர்த்தி காதலை அவருடைய தந்தை ஏற்றுக்கொண்டார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயம் ரவி வீட்டோட மருமகனாக சென்ற பின்பு தான் அவருக்கு சினிமாவிலும் சரிவு வாழ்க்கையிலும் மன நிம்மதி இன்றி தவித்து வந்துள்ளார். தற்பொழுது அவருடைய மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்த நிலையில் ஜெயம் ரவி மனைவி பெயரில் உள்ள விலை உயர்ந்த சொகுசு கார் கோவாவில் பப் பாடகி கனிஷா ஓட்டிச் சென்று சட்ட விதிகளுக்கு பின்படுத்தாததால் போலீசார் அவதாரம் விதித்த தகவல் ஜெயம் ரவி மனைவிக்கு மெசேஜ் சென்றதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக சினிமா துறையைச் சார்ந்த ஒரு பத்திரிக்கையாளர் ஜெயம் ரவியுடன் உங்களுடைய மனைவி உங்களுக்கு அன்பளிப்பாக வாங்கி கொடுத்த காரை நீங்கள் பாடகி கேனிஷா பயன்படுத்த கொடுத்தீர்களா என்று கேட்டதற்கு, அந்த விலை உயர்ந்த சொகுசு கார் என் மனைவி பெயரில் என் பணத்தை போட்டு வாங்கியது என தெரிவித்த ஜெயம்ரவி.

அந்த கார் சுமார் 6 கோடி என்றும் ஆறு கோடி ரூபாய்க்கு மேல் கார் வாங்குற அளவுக்கு ஆர்த்தி குடும்பத்தில் எங்க இருக்கு பணம் என்று ஜெயம் ரவி தெரிவித்ததாகவும், மேலும் அவர்களுக்கு கல்பனா ஹவுஸ் என்கின்ற மிகப்பெரிய சொத்து இருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அந்த கல்பனா ஹவுஸை உரிமை கொண்டாடி சுமார் ஐந்து பேர் கேஸ் போட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்த ஜெயம் ரவி.

ஒருமுறை என்னுடைய மனைவி கர்ப்பமாக இருந்தபோது கல்பனா கவுசில் மனைவிக்கு உதவியாக இருக்கும் என்று தங்கினேன், அப்ப கூட என்னுடைய தந்தை வேண்டாம் என்று தான் தெரிவித்தார் என தன்னுடைய மனக்குமுறலை தெரிவித்த ஜெயம் ரவி, அந்த வகையில் மிகப்பெரிய சொத்து என்று சொல்லக்கூடிய கல்பனா ஹவுஸ் ஐந்து பேர் உரிமை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கையில் எனக்கு எப்படி அவர்கள் ஆறரை கோடி ரூபாய் மதிப்பில் விலை உயர்ந்த காரை வாங்கி தருவார்கள் என்று தெரிவித்த ஜெயம் ரவி, என்னை சினிமாவிலிருந்து ஓய்ந்து விடுவதற்காகவே என்னுடைய மாமியார் பல வேலை செய்கிறார் குறிப்பாக தயாரிப்பாளர்களிடம் என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம் நான் ரொம்ப மோசமானவன் , கெட்டவன் என்றெல்லாம் என்னுடைய பெயரை டேமேஜ் செய்து வருகிறார்.

என்னுடைய பாஸ்போர்ட், செக் புக் அனைத்தையும் பிடுங்கி வைத்து கொண்டார் மாமியார் என்றும், வெளிநாடு ஷட்டிங் கூட என்னால் போக முடியாதபடி செய்வார், இப்படி ஒரு மாமியாரை நீங்கள் பார்த்தது உண்டா.? என தன் பட்ட கொடுமைகளை அந்த சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாரிடம் ஜெயம் ரவி பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here