க்ரெடிட் கார்ட் காசு கூட கட்ட வழியில்லாத குடும்பம்… ஏமாற்றப்பட்ட ஜெயம் ரவி…

0
Follow on Google News

பொதுவாக நடிகர்கள் பல சிந்தனைகளில் அவர்களுடைய மன ஓட்டம் ஓடிக் கொண்டே இருக்கும். காரணம் கதைகள் கேட்பது அடுத்த படத்தின் கதை எப்படி இருக்க வேண்டும், இந்த கதையில் எப்படி நடிக்க வேண்டும் என்கின்ற தான் சார்ந்த சினிமா துறை குறித்த சிந்தனை ஓட்டம் ஒரு நடிகருக்கு ஓடிக் கொண்டே இருக்கும். இப்படி ஒரு சிந்தனை கொண்ட ஒரு நடிகனுக்கு வீட்டில் நிம்மதி இருந்தால் தான் அவர் அடுத்த அடுத்த கட்டத்திற்கு மேலே செல்ல முடியும்.

அந்த வகையில் பல நடிகர்கள் திறமையும் ரசிகர் பலமும் இருந்தும் கூட ஒரு சில படங்கள் தோல்வியை தழுவுவதற்கு காரணம் வீட்டில் நிம்மதி இல்லாத வாழ்க்கை. அதனால் சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்த முடியாதது தான் அவர்களின் தோல்விக்கு காரணம் என்பது நிதர்சனம். இதனிலையில் நடிகர் ஜெயம் ரவி அழகு நடிப்பு இதையெல்லாம் தாண்டி சினிமா துறையில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒழுக்கமான நடிகர்களில் அவரும் ஒருவர்.

அப்படி சினிமாவில் யாருடனும் பகைமையை ஏற்படுத்திக் கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அனைவரிடமும் நல்ல பெயர் பெற்ற நடிகராக இருந்து வருகிறார் ஜெயம் ரவி. ஆனால் அவருக்கு வீட்டில் நிம்மதி இல்லாத வாழ்க்கை. அதாவது அவருடைய மனைவி ஜெயம் ரவியுடன் சண்டை போடுவது மட்டுமே ஒரு பொழுதுபோக்காக செய்து கொண்டிருக்கிறாரா என்றும் சொல்லும் அளவிற்கு தன்னுடைய இல்லற வாழ்க்கையில் பல கொடுமைகளை ஜெயம் ரவி அனுபவித்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி சினிமாவில் மிகப்பெரிய திறமையான நடிகர் என்றாலும் கூட, அவருடைய பொது வாழ்க்கை என்பது அவருடைய குணம் குழந்தைத்தனம் குணம் என்று கூறப்படுகிறது. அதாவது வெளி உலகில் வாழ்வியல் தத்துவம் தெரியாமலே இப்போது வரை ஒரு குழந்தை குணமாக இருந்து வருவதை அவருடன் நெருங்கி பழகியவர்கள் பலரும் அறிந்திருக்க முடியும். இப்போதே ஒரு குழந்தை குணம் படைத்த ஜெயம் ரவி ஆர்த்தியை காதலித்த தன்னுடைய இளம் வயதில் எந்த அளவுக்கு வெளியுலகம் அவருக்கு தெரிந்திருக்கும் என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறி.

அந்த வகையில் ஆர்த்தியை ஜெயம் ரவி காதலித்தபோது அவர் அம்மா என்ன செய்கிறார்.? அவருடைய அப்பா என்ன செய்கிறார்.? அவருடைய குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம் என்பதெல்லாம் முழுமையாக தெரியாமல் ஆர்த்தி தன்னை காதலிக்கிறார் அவரை நான் காதலிக்கிறோம், அதாவது கண்மூடித்தனமாக ஆர்த்தியை காதலித்ததின் விளைவு ஜெயம் ரவி ஆர்த்தியை திருமணம் செய்திருக்கிறார். இந்த நிலையில் ஒரு போலியான பிம்பம் கட்டி அமைத்தது போன்று ஜெயம் ரவி மனைவி பிறக்கும்போதே கோடீஸ்வரர் குடும்பத்தில் பிறந்தார்.

சென்னையில் பல பங்களாக்கள் அவர்களுக்கு இருக்கு, அந்தக் காலத்திலேயே ஜெயம் ரவியின் மாமனார் கிரெடிட் கார்டு வச்சிருந்தார் என்று பல சேனல்கள் ஜெயம் ரவி மாமியார் குடும்பம் பற்றி ஓவர் பில்டப் செய்து கட்டி அமைக்கப்பட்ட பிம்பம் தற்போது சல்லி சல்லியாக உடைந்து வருவதை பார்க்க முடிகிறது. காரணம் சென்னையில் பல பங்களா இருக்கு.? ஆனா அது ஜெயம் ரவி மாமியாருக்கு இருக்கா என்பது தான் மிகப்பெரிய கேள்வி குறி.

அதாவது ஜெயம் ரவி மாமனார் அந்த காலத்திலே கிரெடிட் கார்டு வச்சிருந்தார் என்பதை தாண்டி அவர் கிரெடிட் கார்டிற்கு பணம் கட்டவில்லை என்கின்ற தகவலும் தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதே நேரத்தில் அவருடைய மாமியார் குடும்பத்தில் ஒரு பழைய கார் ஒன்றும் இருந்திருக்கிறது மற்றபடி அவருடைய குடும்ப சொத்து என்பது இவர்கள் பெயரில் இல்லை என்றும் அந்த குடும்ப சொத்துக்கு பலரும் உரிமை கொண்டாடி தற்பொழுது வரை வழக்கு நிறுவையிலிருந்து வருகிறது என கூறப்படுகிறது.

அந்த வகையில் ஜெயம் ரவியை வைத்து தான் ஆர்த்தி குடும்பங்கள் வாழ்ந்துள்ளது, ஜெயம் ரவி தான் இவர்களுக்கு வாழ்க்கையை கொடுத்துள்ளார் என்று சொல்லும் அளவிற்கு ஜெயம் ரவியை ஆர்த்தி திருமணம் செய்து கொண்ட பின்பு தான் அவருடைய மாமியார் தயாரிப்பாளராக பணம் சம்பாதிக்கிறார், மேலும் ஜெயம் ரவி சம்பாதித்த பணம் சொத்துக்களையும் தற்பொழுது அபகரித்துக் கொண்டு திரும்ப ஜெயம் ரவியிடம் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here