டாடி அம்மாவை விட்டு பிரிகிறேன்… ஜெயம் ரவியிடம் அவருடைய மகன் சொன்ன பதில்.. கண்கலங்க வைக்கும் நிகழ்வு…

0
Follow on Google News

ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு விலகிய பின்பு ஆர்த்தியும் அவருடைய இரண்டு குழந்தைகளும் ஜெயம் ரவியை தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு தவிர்த்து வருவது போன்று ஆர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இது குறித்து ஜெயம் ரவி தரப்பில் இருந்து சில தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆர்த்தியை விட்டு ஜெயம் ரவி பிரிய வேண்டும் என்று முடிவெடுத்த பின்பு தன்னுடைய மூத்த மகன் அனைத்து ஜெயம் ரவி பேசியிருக்கிறார்.

மூத்த மகனுக்கு 15 வயது ஆகிறது, இந்நிலையில் மூத்த மகனை அழைத்து எனக்கும் அம்மாவுக்கும் இடையில் என்ன பிரச்சனை நடக்கிறது என்று உனக்கு தெரியும் இல்ல என்று தன்னுடைய மூத்த மகனிடம் ஜெயம் ரவி கேட்க, அதற்கு தெரியும் டாடி என்று அவருடைய மகன் பதிலளித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் அம்மாவை விட்டு பிரியலாம் என்று நினைக்கிறேன், நீ என்ன நினைக்கிறாய்.? என்று தன்னுடைய மூத்த மகனிடம் ஜெயம் ரவி கேட்டிருக்கிறார்.

அதற்கு சற்று சோகத்துடன் வாடிய முகத்துடன் காணப்பட்ட ஜெயம் ரவியின் மூத்த மகன், இருந்தாலும் நீங்கள் எடுத்த முடிவு சரியானது தான் என்று சோகத்துடனே தந்தைக்கு கிரீன் சிக்னல் கொடுக்கிறார். மேலும் ஜெயம் ரவியின் மூத்த மகன் என்னுடைய ஆசை நீங்கள் அம்மாவுடன் சேர்ந்து தான் இருக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தையும் ஜெயம் ரவிக்கு தெரிவித்த அவருடைய மூத்த மகன் அடிக்கடி நீங்கள் அம்மாவை சந்திக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையையும் தந்தையிடம் வைத்திருக்கிறார் ஜெயம் ரவி மகன்.

அந்த வகையில் ஜெயம் ரவி எந்த சூழ்நிலையிலும் அவருடைய குழந்தைகளை விட்டு விடமாட்டடேன் என பலரிடம் தெரிவித்து வந்துள்ளார். ஜெயம் ரவி அவருக்கு நெருக்கமானவரிடம் என்னுடைய 15 வருட திருமண வாழ்க்கையில் பத்து வருட மகிழ்ச்சியாக இருந்ததாகவும், மீத ஐந்து வருடம் ஒரு கசப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும், மீதம் இருக்கிற அந்த ஐந்து வருடத்தில் கடைசி இரண்டு வருடம் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக ஜெயம் ரவி தன்னுடைய சோகத்தை பகிர்ந்தவர்.

இப்படி தன்னுடைய திருமண வாழ்க்கை 15 வருடங்களில் ஐந்து வருடம் கசப்பான வாழ்க்கையும், கடைசியான இரண்டு வருடம் கடுமையான மன உளைச்சலில் இருந்தாலும் மிகவும் பொறுமையாக இந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று இருந்ததற்கு காரணமே என்னுடைய இரண்டு குழந்தைகள் தான் என்று ஜெயம் ரவி வாழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இவ்வளவு பிரச்சனைக்கு பின்பு தன்னுடைய மனைவியை விட்டு பிரிவதாக ஜெயம்ரவி அறிவித்த பின்பு எதுவுமே நடக்காதது போன்று, தனக்கு எதுவுமே தெரியாதது, ஜெயம் ரவி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததாகவும், இந்த முடிவு எடுப்பதற்கு முன்பு என்னிடம் எந்த ஒரு ஆலோசனையும் நடத்தவில்லை என்று ஜெயம் ரவி மனைவி தெரிவித்திருந்த நிலையில், ஜெயம் ரவி அவருடைய மனைவி விட்டு பிரிவதற்கு முன்பு குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் அனைவருடைய அனைவரிடமும் ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விட்டு பிரிவதற்கு முன்பு அவருடைய மூத்த மகனிடம் பேசி புரிய வைத்து டாடி உங்களை விட்டுட்டு போகல உங்களை எப்போதும் போல சந்திக்கிறேன் என்று தெரிவித்துவிட்டு தான் மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக இறுதி முடிவை எடுத்துள்ளார் என்றும், அந்த வகையில் ஒரு நல்ல தந்தையாக இப்போது வரை ஜெயம் ரவி தொடர்ந்து அவருடைய மகன்களுக்கு செயல்பட்டு வருகிறார் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here