என்னை வேலைக்காரனை விட கேவலமாக நடத்தினர் ஆர்த்தி… கண் கலங்கிய மனவேதனையை கொட்டிய ஜெயம் ரவி…

0
Follow on Google News

ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்த பின்பு இவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சனை குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி விட்டு பிரிவதாக அறிவித்ததற்கு காரணம் ஜெயம் ரவி மாமியாரின் கொடுமை என்றும் ஜெயம் ரவி மனைவியின் ஆடம்பரமாக செலவு என என்றும், இப்படி ஜெயம் ரவி மிகவும் நல்லவர் அவருடைய மனைவி மற்றும் மாமியார் பக்கம்தான் தவறு என்கின்ற தகவல் வெளியானது.

அதன் பின்பு ஜெயம் ரவி ஒரு பாடகியிடம் தொடர்பில் இருக்கிறார் மனைவிக்கும் துரோகம் செய்துவிட்டார் மாமியார் மிகப்பெரிய பணக்கார குடும்பம் என்றெல்லாம் ஜெயம் ரவி மனைவிக்கு அனுதாபம் ஏற்படுத்தும் வகையிலும், ஜெயம் ரவி ஒரு குற்றவாளியாக சித்தரிப்பது போன்ற தகவல் வெளியானது. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை ஜெயம் ரவி பக்கம்தான் நியாயம் உள்ளது. அவருடைய மனைவி மற்றும் மாமியாரின் கடுமையான கொடுமைகளை ஜெயம் ரவி அனுபவித்துஉள்ளார் என்கின்ற தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது .

அதாவது ஜெயம் ரவி மனைவி அடிக்கடி வெளிநாடு செல்வது. குறிப்பாக தாய்லாந்து சிங்கப்பூர் சென்று செலவு செய்வது பப்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இது குறிப்பாக ஜெயம் ரவிக்கு தகவல் தெரிவித்து கூட செல்வதில்லை. அவர் இஷ்டத்துக்கு சென்று செலவு செய்து வந்துள்ளார். இது ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. அதே நேரத்தில் ஜெயம் ரவி எங்கே சென்றாலும் மனைவியிடம் தெரிவித்துவிட்டு தான் செல்ல வேண்டும் என்கின்ற ஒரு கட்டுப்பாட்டையும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி வைத்திருந்திருக்கிறார்.

இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஜெயம் ரவி மூன்றாவது முறை அறிக்கையின் மூலம் தன்னுடைய மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்த பின்பு, இது குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது ஜெயம் ரவி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்தார் என்று ஒரு பொய்யான செய்தியை பரப்பி நானும் என்னுடைய இரண்டு மகன்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிற்கிறோம் என்று அனுதாபத்தை தேடும் முயற்சியை ஜெயம்ரவி மனைவி எடுத்தார், ஆனால் அதில் உண்மை என்று இல்லை என்றும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து பாடகி கேனிஷா உடன் ஜெயம் ரவியை தொடர்பு படுத்தி வரும் தகவல், மற்றும் ஆர்த்தி தரப்பிலிருந்து ஜெயம் ரவி குறித்து வெளியாகும் தகவல் குறித்து ஜெயம் ரவி மனம் விட்டு தனக்கு நெருக்கமான ஒரு பத்திரிக்கையாளரிடம் பேசியிருக்கிறார். அதில் தன்னையும் கேனிஷாவையும் இணைத்து பேசுவதில் உண்மை இல்லை என்றும், நானும் கேனிஷாவும் ஒன்றாக சொகுசு காரில் பயணம் செய்தது உண்மைதான்.

ஒரே நாளில் இரண்டு முறை சட்ட விதிகளை மீறியதாக அந்த கார் அபராதம் விதிக்கப்பட்டது உண்மைதான். அதே நேரத்தில் எனக்கும் கேனிஷாவுக்கு இடையில் நீங்கள் நினைப்பது போன்று எந்த ஒரு பழக்கமும் இல்லை, நாங்கள் இருவரும் தோழர்கள் என்று மனம் விட்டு பேசிய ஜெயம் ரவி, மேலும் அந்த கார் எனக்கு என்னுடைய மனைவி பரிசளித்ததாக ஒரு பொய்யான தகவல் வருது, என்னுடைய பணத்தில் என்னுடைய மனைவி பேரில் நான் அந்த காரை வாங்கினேன் என்றும்.

என்னுடைய மாமியார் என்னுடைய பாஸ்போர்ட் மட்டும் என்னுடைய செக் புக் பிடுங்கி வைத்து தர மாட்டேன் என்றார், இப்போதுதான் போராடி என்னுடைய செக் புக்கை நான் மீட்டு இருக்கிறேன், மேலும் என்னுடைய இன்ஸ்டா பக்கத்தையும் என்னுடைய மனைவி தரமாட்டேன் என்றார், போராடி தற்பொழுது மீட்டு உள்ளேன் என்று வேதனையை தெரிவித்தவர். 15 வருடம் திருமணம் ஆகி எனக்கு தனியாக வங்கி கணக்கு கூட இல்லை அனைத்து வங்கி கணக்குகளும் ஆர்த்தி பெயரில் தான் இருக்கும்.

நான் ஒரு ரூபாய் செலவு செய்தால் கூட ஆர்த்திக்கு மெசேஜ் சென்றுவிடும், மேலும் ஆர்த்தி கண்டபடி செலவு செய்வார் அதையெல்லாம் நான் எதுக்கு செலவு செய்தார் என்ன செலவு செய்தார் என்றெல்லாம் கேட்க முடியாது, எனக்கே அவர் என்ன செலவு செய்கிறார் என்பது கூட தெரியாது . ஆனால் அது அனைத்தும் நான் சம்பாதித்த பணம் என்று வேதனையை பகிர்ந்து கொண்ட ஜெயம் ரவி என்னை ஒரு வேலைக்காரனை விட கேவலமாக மனைவி ஆர்த்தி நடத்தியதாக தன்னுடைய சோகத்தை தனக்கு நெருக்கமான பத்திரிகையாளரிடம் தெரிவித்திருக்கிறார் ஜெயம் ரவி என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here