ஜெயம் ரவி மாமியார் பக்கா டுபாக்கூர் குடும்பம்… இரண்டு மகளும் டைவர்ஸ்…

0
Follow on Google News

ஜெயம் ரவியை அவருடைய மாமியார் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் எகிறி அடிப்பது போன்று அடித்து விட்டு இப்போது ஜெயம் ரவி கொடுமைகள் தாங்காமல் வெளியேற பின்பு, ஐயோ அம்மா எங்களை விட்டு போகிறாரே என்று கத்துவது எந்த விதத்தில் நியாயம் என்கிறது சினிமா வட்டாரங்கள். அதாவது ஜெயம் ரவி நம்மளை விட்டு எங்கே சென்று விடுவார் என்று அவரை படாதபாடுபடுத்திய அவருடைய மாமியாரும் அவருடைய மனைவியும், தற்போது இந்த அடிமை வாழ்க்கையே வேண்டாம் என்று சென்று விட்டார்.

இந்த நிலையில் நானும் என்னுடைய இரண்டு குழந்தைகளும் ஜெயம் ரவியை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியவில்லை என அனுதாபம் தேட முயற்சித்து வருகிறார் அவருடைய மனைவி ஆர்த்தி. இந்த நிலையில் ஜெயம் ரவி மாமியாரின் குடும்பம் பற்றி பல்வேறு பில்டப் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது உலக பணக்காரர் பில்கேட்ஸ் ரேஞ்சுக்கு பல சேனல்கள் அவர் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது போன்ற தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

ஆனால் ஜெயம் ரவியை வைத்து தான் அவருடைய மாமியார் குடும்பங்கள் தற்பொழுது வாழ்ந்து வருவதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஜெயம் ரவி மாமியார் சுஜாதா விஜயகுமாருக்கு இரண்டு பெண் குழந்தைகள் அதில் ஒரு மகளை ஜெயம் ரவி திருமணம் செய்திருக்கிறார். இவர்கள் திருமணம் முடிந்து 15 வருடங்களுக்கு விவாகரத்தை பெறுகிறார்கள், ஆனால் மற்றொரு மகள் திருமணமான ஒன்றரை வருடத்திலேயே விவாகரத்து பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஜெயம் ரவி சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு ஜெயம் ரவியிடம் அந்த சொத்துக்களைத் திரும்பத் தரமாட்டோம் என்று அவருடைய மாமியாரும் மனைவியும் அடாவடி செய்து வரும் நிலையில், கடுமையாக போராடி தன்னுடைய பொருட்களை மீட்டு தருமாறு போலீஸ் இரு புகார் தெரிவித்திருந்தார் ஜெயம் ரவி. அந்த வகையில் தற்பொழுது அவருடைய கார் மற்றும் சில முக்கிய பொருட்கள் மட்டுமே ஜெயம் ரவி கைவசம் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்குமா.? என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்காமல் அதாவது அவருடைய மாமியாரும் ஜெயம் ரவி மனைவியும் மனசாட்சியை தொட்டு, ஜெயம் ரவி எந்த அளவுக்கு உதவி செய்திருக்கிறார், அவரை வைத்து எந்த அளவுக்கு பணம் சம்பாதித்தோம் என்றெல்லாம் நினைத்து பார்க்காமல், ஜெயம் ரவி இவர்களை விட்டு பிரிந்தாலும் கூட உன்னை நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்று தொடர்ந்து அவருக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜெயம் ரவி ஒரு தங்க முட்டை இடும் வாத்து போல் அந்த குடும்பத்திற்கு இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து ஜெயம் ரவி தற்பொழுது அந்த குடும்பத்தை விட்டு விலகி வந்த நிலையில் அடுத்த இரண்டு வருடத்தில் ஜெயம் ரவி மாமியார் குடும்பம் அடுத்த இரண்டு வருடத்தில் மிக பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

அந்த வகையில் ஜெயம் ரவியை வைத்து வருமானம் பார்த்த மாமியார் குடும்பம் தற்போது அடுத்து வருமானத்திற்கு என்ன செய்ய இருக்கிறார்கள் என்பதை மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. அதே நேரத்தில் தங்களை பெரிய கோடீஸ்வரர் குடும்பம் என்று சொல்லிக் கொடும் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி மாமியார் குடும்பத்தினர் எங்களுக்கு ஜீவனாம்சம் வேண்டாம் என்று விவாகரத்து பெற்றுவிட்டு செல்ல வேண்டியது தானே.! ஆனால் செல்ல மாட்டார்கள் அப்படி சென்றால் அவர்கள் தெருவில் தான் இருக்க வேண்டும், காரணம் அவர்களுக்கு எந்த விதத்திலும் சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய சொத்து கைவசம் இல்லை என்கிறது சினிமா வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here