கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி – ஆர்த்தி இவர்கள் இருவருக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜெயம் ரவி அவருடைய மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்த போது, ஜெயம் ரவிக்கும் பாடகி கேனிஷாவுக்கும் தொடர்பு உள்ளது. அதனால் தான் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விட்டு பிரிகிறார் என்றெல்லாம் பேச்சு எழுந்தது.
அப்போது ஜெயம் ரவி அவருக்கு நெருக்கமான சில பத்திரிக்கையாளர்களிடம் தனக்கும் கேனிஷாவுக்கும் அப்படி எந்த ஒரு தவறான ஒரு உறவு கிடையாது. எங்களை பற்றி தவறான செய்திகள் வருது, நான் தன்னுடைய மனைவி மூலம் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளேன். குறிப்பாக தன்னிடம் கார் என எதுவுமே கிடையாது என தெரிவித்த ஜெயம் ரவி, ஈசிஆர் இல் இருந்து தன்னுடைய நண்பர் இருக்கும் அடையார் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு நடந்தே சென்றதாக,எல்லாம் தன் பட்ட கஷ்டங்களை ஜெயம் ரவி தெரிவித்து அவருக்கு நெருக்கமான சிலரிடம் இருந்தார்.

அப்போது ஜெயம் ரவி மீது மிகப்பெரிய அளவில் ரசிகர்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது . அதே நேரத்தில் ஜெனிஷா மிகப்பெரிய ஹீலிங் தரோபி செய்யக் கூடியவர், அவர் பெரிய பாடக பாடகி என்றெல்லாம் தகவல் வெளியானாலும், கேனிஷா பெங்களூரில் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும், அவருக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றெல்லாம் தகவல் வருகிறது.
ஆனால் அவருடைய முதல் கணவர் யார் என்கின்ற எந்த ஒரு உறுதியான தகவலும் வரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தனக்கும் கணேஷாவுக்கும் உள்ள உறவை இந்த உலகத்திற்கு வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற ஐசரி கணேசன் இல்ல திருமண விழாவில் தோழி கேனிஷா உடன் ஜோடியாக பங்கேற்றார் ஜெயம் ரவி.
ஆனால் சினிமா வட்டாரங்களில் இதற்கு முன்பே, அதாவது ஆர்த்தியை விட்டு ஜெயம் ரவி பிரிந்த பின்பு கேனிஷா உடனே ஜெயம் ரவி உலகம் முழுவதும் சுற்றி வருகிறார் என்றெல்லாம் அரசல் புருசலாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக பராசக்தி படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி, அந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்த போது, அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல், இறுதி வரை ஜெயம் ரவி உடன் கேனிஷாவும் இலங்கையில் இருந்ததாக தகவல் வெளியாகிறது.
மேலும் கேணேஷாவும் ஜெயம் ரவியும் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா உடன் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படமும் வெளியானது, இப்படி திரைக்குப் பின்னால் நெருக்கமாக இருந்த ஜெயம் ரவி – கேனிஷா இருவரும் தற்போது வெளியுலகத்திற்கு தங்களை தங்களுடைய நெருக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் நடந்த ஐசரி கணேசன் இல்ல திருமண விழாவில் ஜோடியாக கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் ஐசரி கணேசனின் மகளின் திருமணத்தை மிக கோலாகாலமாக நடத்தி வரும் ஐசரி கணேசன், அடுத்ததாக மாலத்தீவில் முக்கியமான குறிப்பிட்ட 200 நபர்களை மட்டும் அழைத்து தன்னுடைய மகளின் திருமண விழாவின் அடுத்த நிகழ்ச்சியை ஒன்றை நடத்துகிறார். இதற்காக சேட்டட் விமானமும் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த 200 பேர் கொண்ட பட்டியலில் ஜெயம் ரவி மற்றும் கேனிஷா இவர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ஐசரி கணேசனின் மகளின் மாலத்தீவு விழாவிற்கும் சேட்டட் விமானத்தில் அஜால் குஜால் ஆக பறந்து சென்று ஐசரி கணேசனின் மகன் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜெயம் ரவி – கேனிஷா ஜோடி தயாராகி விட்டது என்கிறது சினிமா வட்டாரங்கள். இருந்தாலும் கேனிஷா – ஜெயம் ரவி இருவரின் இந்த அட்ராசிட்டி ஜெயம் ரவியின் இமேஜ் டேமேஜ் ஆக கூட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.