ஜெயம் ரவியை காப்பாற்றிய கேனிஷா.. ஜெயம் ரவி ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்து தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஜெயம் ரவியுடன் பாடகி கேனிஷாவை இணைத்து வைத்து பல கிசுகிசுகள் வெளியானது, ஆனால் இதற்கு ஜெயம் ரவி தரப்பிலையும், கேனிஷா தரப்பிலையும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதாவது இருவரும் நாங்கள் நல்ல தோழர்கள், தயவு செய்து எங்களைப் பற்றி தவறாக பேச வேண்டாம் என்றும் விளக்கம் கொடுத்தார்கள்.

அதே நேரத்தில் ஜெயம் ரவிக்கும் கேனிஷாவுக்கும் எந்தவித தவறான தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது, அந்த வகையில் இருவரும் தோழர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். மேலும் கேனிஷா பின்னணி குறித்து பல தகவல் வெளியாகியுள்ளது. கேனிஷா அப்பா தாய் மொழி தமிழை பூர்வீகமாக கொண்டவர், கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் வசித்து வந்துள்ளார், கேனிஷாவின் தாய் கென்யாவை சேர்ந்தவர், இவர் ஒரு முறை பெங்களூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்தபோது அங்கே கேனிஷா தந்தை அவருடைய அம்மாவை பார்த்திருக்கிறார்.

பார்த்த உடனேயே மனதை பறி கொடுத்தவர் தன்னுடைய காதலை தெரிவித்து இருக்கிறார். இருந்தாலும் கேனிஷா தந்தையின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் அவருடைய தாய் கென்யா சென்றுள்ளார். இதன் பின்பு கென்யாவில் கேனிஷா அம்மா எங்கே இருக்கிறார் என்று முகவரியை தேடி கண்டுபிடித்து அங்கே நேரில் சென்று தன்னுடைய காதலை தெரிவிக்கிறார் கேனிஷாவின் தந்தை. இதன் பின்பே கேனிஷாவின் தாய் அவருடைய தந்தையின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் திருமணம் முடிந்து சுமார் 17 வருடங்களுக்கு பின்பு தான் கேனிஷா பிறக்கிறார். மேலும் கேனிஷாவின் தந்தை தொழிலதிபராக இருந்த வந்துள்ளார். கணேஷாவின் தாய் மேடைகளில் பாடல் பாடி ஆடக்கூடியவராக இருந்து வந்துள்ளார். சிறுவயதில் கேனிஷா கென்யாவில் வளர்ந்துள்ளார், அதன் பின்பு பெங்களூரிலும் வளர்ந்துள்ளார் அந்த வகையில் அவர் தமிழும் நன்றாக பேசக்கூடியவர்.

மேலும் கேனிஷா, அவருடைய தாய் போன்று பாடல் பாடக்கூடியவர். மேலும் கேனிஷா ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலமாக செயல்படக்கூடிய மன நோய்க்கான ஹீலிங் பயிற்சியும் பெற்றதாக கூறப்படுகிறது. கேனிஷா தாய் இறந்து விடுகிறார் அடுத்த சில வருடங்களே அவருடைய தந்தையும் இறந்து விடுகிறார். அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக தாய் தந்தை இல்லாமல் தனியாகவே இருந்து வரும் கேனிஷா தான் கற்றுக்கொண்ட ஹீலிங் பயிற்சியை மனநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு வழங்கி அவர்களை குணப்படுத்தி ஒரு புது வாழ்க்கையை கொடுத்து வருகிறார் கேனிஷா எனக் கூறப்படுகிறது.

அந்த வகையில் குடும்ப பிரச்சனையால் கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டு ஒரு விபரீத முடிவை எடுக்கும் சூழலுக்கு ஜெயம் ரவி தள்ளப்பட்டிருந்த காலத்தில், கேனிஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர் இருக்கும் கோவாவிற்கு வந்து மன நோய்க்கான ஹீலிங் பயிற்சியை பெற்றுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்தில் கேனிஷா வேண்டாம் மறுத்துள்ளார், சென்னையிலே பல பயிற்சி மய்யம் உள்ளது அங்கே பயிற்சி மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தி இருக்கிறார்.

அதன் பின்பு ஜெயம் ரவி தன்னுடைய மன கஷ்டங்களை தெரிவித்து நான் கோவா வந்தால் தான் சரியாக இருக்கும் என தெரிவித்து இருக்கிறார். இதன் பின்பு நேரில் கோவாவிற்கு வர வைத்து அவருக்கு மன ரீதியான ஹீலிங் பயிற்சி அளித்து அவரை மனப்பிரச்சனையிலிருந்து மீட்டு எடுத்துள்ளார் கேனிஷா. அந்த வகையில் ஜெயம் ரவி விபரீத முடிவை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் அவரை காப்பாற்றியவர் கனிஷா என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் ஜெயம் ரவி வாழ்க்கையில் கேனிஷா வந்ததும் ஜெயம் ரவிக்கு அதிர்ஷ்டம் தான் என்றே கூறப்படுகிறது, காரணம் மன நிம்மதியின்றி தவித்த ஜெயம் ரவியை மீட்டெடுத்தவர் கேனிஷா. மேலும் கேனிஷா அளித்து வரும் ஹீலிங் பயிற்சி என்பது ஆப்பிரிக்காவில் தான் அனுமதி, இந்தியாவில் அனுமதி இல்லை என்றே கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here