மும்பையில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி.? யாருடன் குடியேறுகிறார் தெரியுமா.?

0
Follow on Google News

ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை, அடுத்தடுத்து ஜெயம் ரவி குறித்தும் ஆர்த்தி குறித்தும் பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. அதாவது ஜெயம் ரவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 10 வருடங்களாக எங்களுடைய காதல் வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது, ஆனால் கடந்த மூன்று வருடங்களாக அந்த வீட்டில் என்னை அந்த யாரும் மதிக்கவில்லை. என்னுடைய மனைவி அவருடைய அம்மா தயாரிப்பில் வருடத்திற்கு ஒரு படமாக நடிங்க என்று தன்னிடம் சொன்னதாகவும்,

அப்படி ஒரு படம் நடிக்கும் பொழுது அந்த படம் நஷ்டம் என்று என்னிடம் கணக்கு காட்டினார்கள் என வருத்தப்பட்ட ஜெயம் ரவி. என்னுடைய பெயரில் ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட கிடையாது. என் வீட்டில் வேலைக்காரர்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட என் வீட்டில் கிடைக்காது. ஒவ்வொரு முறையும் எனக்கு பணம் தேவைப்படும் பொழுதெல்லாம் என் மனைவியிடம் நிற்க வேண்டும் என்று ஜெயம் ரவி பேசியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் ஜெயம் ரவி சொல்வது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் ஏற்கனவே பேசியிருந்தார். வெளிநாட்டில் நானும் ஜெயம் ரவியும் பார்ட்டிக்கு சென்றால் ஜெயம் ரவியிடம் உன்னிடம் பணம் இருக்கா என்று கேட்டால் இல்லை, என மனைவியிடம் இருந்து வாங்கி கொடுப்பார், என்று ஏற்கனவே விக்ரம் பேசியிருந்த நிலையில் ஜெயம் ரவி தற்போது அவர் குடும்பத்தில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் உண்மைதான் என்று நம்பும்படியாக உள்ளது.

இந்த நிலையில் ஜெயம் ரவி திருமணம் ஆன முதல் மனைவியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக காதலித்ததின் விளைவு மனைவியிடம் தன்னுடைய அனைத்து பொறுப்பையும் கொடுத்துவிட்டு, ஒவ்வொரு முறையும் தன்னுடைய அத்தியாவசிய தேவைக்கு மனைவியிடம் கைகட்டி நிற்கும் சூழல் ஜெயம் ரவிக்கு ஏற்பட்டது. காரணம் அவருடைய இன்ஸ்டால் பக்கம் கூட மனைவி தான் உபயோகிக்கும் வகையில் இருந்துள்ளது, அந்த வகையில் போராடி தான் தற்பொழுது இன்ஸ்டாலே பக்கத்தை மீட்டு எடுத்துள்ளார் ஜெயம் ரவி.

பொதுவாகவே சினிமா துறையைச் சார்ந்தவர்கள் விவாகரத்துச் செய்யும்பொழுது இருவரும் அமர்ந்து பேசி ஒரு சுமூக முடிவு எடுத்து பிரிந்து கொள்வார்கள். யாரும் ஒருவர் ஒருவரை குறை சொல்வது கிடையாது. ஆனால் ஜெயம் ரவி விவகாரம் ஒவ்வொன்றும் பரபரப்பு ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. தன்னுடைய உடமைகளை மீட்டு தாருங்கள் என்று காவல் நிலையத்தில் ஜெயம் ரவி புகார் கொடுக்கிறார்,

நாங்கள் வீட்டு கதவை திறந்துதான் வைத்திருக்கிறோம் வரலாமே என்று அவர் மனைவி பதில் சொல்கிறார். இப்படி தொடர்ந்து மாறி மாறி புகார்களை தெரிவித்து வருகிறார்கள், மேலும் கோவாவில் இருக்கும் பின்னணி பாடகி கேனிஷாவையும் தொடர்பு படுத்தி பல செய்திகள் வந்தது. ஆனால் கேனிஷா , ஜெயம் ரவிக்கு ஹீலிங் மன அமைதிக்கான ஹீலிங் பேச்சு மட்டுமே அழித்துவர் என்பது தெரியவந்தது.

இப்படி உறுதிப்படுத்தாத தகவல் ஒவ்வொன்றாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது ஜெயம் ரவி மும்பையில் செட்டில் ஆக போகிறார் என்றும், தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்கப் போகிறார் என்றெல்லாம் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஜெயம் ரவி மும்பையில் செட்டில் ஆவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், சமீபத்தில் அவர் மும்பை சென்ற வீடியோவை வைத்து அவர் மும்பையில் செட்டில் ஆக போகிறார் என்று சொல்வதெல்லாம் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது.

காரணம் அவருக்கு தமிழில் நல்ல மார்க்கெட் இருக்கிறது, அவரிடம் கதை சொல்ல பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். குறிப்பாக அவருடைய மாமியாரை விட்டு விலகிய பின்பு பலரும் ஜெயம் ரவியிடம் போட்டி போட்டுக் கொண்டு கதை சொல்ல தயாராகி விட்டார்கள் . காரணம் இதற்கு முன்பு கதை சொல்ல வேண்டும் என்றால் அவர் மாமியாரை சந்திக்க வேண்டும்.

ஆனால் இப்போது அந்த சூழல் இல்லாததால் ஜெயம் ரவியை வைத்து படம் எடுக்கக்போகும் இயக்குனர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அந்த வகையில் மும்பைக்கு ஜெயம் ரவி சென்றாலும் அங்கே ஹிந்தி சினிமாவில் பெருசாக வாய்ப்புகள் அவருக்கு இல்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடர்வதற்கான வாய்ப்புகள் மட்டுமே இருப்பதால் நிச்சயம் அவர் மும்பையில் செட்டில் ஆக மாட்டார் என நம்பக தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here