ஒரே வீட்டில் ஜெயம் ரவி – கேனிஷா குடித்தனம்… இந்த அளவுக்கு வந்ததற்கு காரணமே ஜெயம் ரவி மனைவி தான்…

0
Follow on Google News

ஜெயம் ரவி வீட்டோட மாப்பிள்ளை ஆன பின்பு அவருடைய சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மேலும் வீட்டோட மாப்பிள்ளையாக பல சங்கடங்களை மாமியார் மூலம் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டே இருந்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கு குடும்பத்தின் மீது வெறுப்பு வரும் அளவிற்கு மாமியாரின் அட்ராசிட்டியை ஓவராகிப் போனது. மாமியாரின் அட்ராசிட்டி ஒரு பக்கம் இருந்தால் மறுபக்கம் தொடர்ந்து ஜெயம் ரவியை அவருடைய மனைவி ஆர்த்தி சந்தேகப்படுவது.

இதைத் தாண்டி ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி செய்கின்ற ஆடம்பர செலவு ஜெயம் ரவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் மனைவியின் ஆடம்பர செலவு குறித்து ஜெயம் ரவி கேள்வி எழுப்பினால், நீ எனக்கு பணம் தர வேண்டாம் என் அம்மாவிடம் வாங்கிக் கொள்கிறேன் என்று திமிராக ஆர்த்தி பேசுவது ஜெயம் ரவிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருந்திருக்கிறது.

எப்படி ஜெயம் ரவி மனைவி அதிக செலவு செய்வது, மேலும் ஜெயம் ரவி மீது சந்தேகப்படுவது, இதெல்லாம் மனைவியின் மீது ஜெயம் ரவிக்கு கோபமாக மாறியது மட்டும் இல்லாமல், மேலும் வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தையும் வெறுக்கும் சூழலுக்கு வந்திருக்கிறார் ஜெயம் ரவி, ஒரு கட்டத்தில் எங்கேயாவது மன அமைதியை கிடைக்காதா? என்று ஜெயம் ரவி அலைந்து கொண்டிருக்கையில் அவருக்கு அறிமுகமானவர்தான் கோவாவை சேர்ந்த பாடகி கேனிஷா.

இந்நிலையில் கேனிஷா ஆன்மீக பேச்சாளர் என கூறப்படும் நிலையில், அவர் மன அமைதி குறித்து பல அறிவுரைகளை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் மன அமைதி இன்றி தவித்த ஜெயம் ரவியை தன்னுடைய பேச்சால் சாந்தப்படுத்தியது மட்டுமில்லாமல் தன்னிடம் சாந்தம் அடைய வைத்துள்ளார் பாடகி கேனிஷா.

ஜெயம் ரவியும் கேனிஷாவும் நீண்ட நாள் பழக்கம் இல்லை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகமாக இருக்கிறார்கள். அந்த வகையில் மிக குறுகிய காலத்தில் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்துள்ளார்கள். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இரண்டு இரண்டு குடும்பத்தினரும் பேசி சரி செய்து விடலாம் என்று முயற்சி செய்தால், அதற்கான வாய்ப்பையும் ஜெயம் தரவில்லை என்ற பேச்சும் உள்ளது.

ஜெயம் ரவியிடம் அவருடைய தந்தை மனைவி ஆர்த்தி குறித்து பேசினாலே கோபப்பட்டு சட்டென்று வெளியே சென்று விடுவதாகவும், இதனால் எங்கே மகன் எப்பயோ ஒரு முறை வீட்டுக்கு வருகின்றவன் தொடர்ந்து ஆர்த்தி குறித்து பேசினால் சுத்தமா வரமாட்டானோ என்கின்ற ஒரு வித அச்சத்தில் ஜெயம் ரவி குடும்பத்தினரும் ஆர்த்தி குறித்து ஜெயம் ரவியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளனர்.

ஜெயம் ரவியை அவருடைய பெற்றோர் கூட தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு தொலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்படுவதாகவும், அவராக அழைத்து பேசினால் தான், மேலும் எப்ப வீட்டுக்கு வருகிறார், வந்தாலும் சில நிமிடங்களையே தாய் தந்தையாரை பார்த்துவிட்டு கிளம்பி சென்று விடுவதாக கூறப்படுகிறது.

இப்படி மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்து கடந்த மூன்று மாதங்களாக கோவாவில் பாடகி கேனிஷா உடன் ஜெயம் ரவி இருந்து வரும் நிலையில், ஜெயம் ரவி இப்படி குடும்பத்தை முழுவதுமாக வெறுக்க அவருடைய மனைவி மற்றும் மாமியார் அணுகுமுறை தான் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here