ஆர்த்திக்கு ஜெயம் ரவி கொடுத்த கடைசி சான்ஸ்… கண்டிஷனை ஏற்க மறுத்த ஆர்த்தி… உறுதியான விவாகரத்து.!

0
Follow on Google News

கோலிவுட் சினிமாவையே புரட்டி போட்டு விட்டது நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து அறிவிப்பு. கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி அவருடைய மனைவியை விட்டு பிரிவதாக தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தன்னுடைய பிறந்தநாளுக்கு முதல் நாள் தான் தன்னுடைய மனைவியுடனான திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்து தன்னுடைய பிறந்த நாளில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அமைதியாக இருந்து வந்த நிலையில். தற்போது ஜெயம் ரவி தன்னை விட்டு பிரிவதாக அறிவித்தது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும், இதில் தனக்கு உடன்பாடு இல்லை. நான் மனம் விட்டு பேச முயற்சித்தும் அதற்கான வாய்ப்பை ஜெயம் ரவி வழங்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.

அந்த வகையில் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி இருவருக்கும் இடையிலான விவகாரத்திலேயே கடும் முரண்பாடு இருக்கிறது. இதனால் நீதிமன்றத்தில் ஜெயம் ரவி அவ்வளவு எளிதாக அவருடைய மனைவியிடம் இருந்து விவாகரத்தை பெற முடியாது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். இந்த நிலையில் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி பிரிவுக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கிய காரணம் அவருடைய மாமியார் சுஜாதா விஜயகுமார்.தலையீடு குடும்பத்தில் அதிகமாக இருந்தது தான் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் மனைவியின் நடவடிக்கைகளுமே அதிகம் தன்னை கட்டுப்படுத்துவது போல் உணர்ந்த ஜெயம் ரவி, ஒரு கட்டத்தில் பிரச்சனை உச்ச கட்டத்தை எட்டியதும், சில நாட்கள் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் மன அமைதிக்காக கோவா சென்று இருக்கிறார் ஜெயம் ரவி. அதன் பின்பு திரும்பி வந்ததும் மீண்டும் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி இருவருக்கும் இடையில் சமரச பேச்சு வார்த்தைகளை இரண்டு குடும்பத்திற்கும் நெருக்கமானவர்கள் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஜெயம் ரவி அதாவது தன்னுடைய குடும்ப விவகாரங்களில் தன்னுடைய மாமியார் தலையீடு இருக்கக் கூடாது. என்கின்ற கண்டிஷனை வைத்திருக்கிறார், ஆனால் அந்த கண்டிஷனை ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஏற்க மறுத்திருக்கிறார். அதாவது ஜெயம் ரவிக்காக என்னுடைய தாயாரை நான் எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது என்கின்ற தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் மீண்டும் இணைந்தால் தன்னுடைய மாமியார் தலையில் இருப்பதால் அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்து கொண்டே தான் இருக்கும் அதனால் தன்னால் இணைய முடியாது, பிரிந்து விடுகிறேன் என்று தன்னுடைய நிலைப்பாட்டை பேச்சுவார்த்தை நடத்தியவர்களிடம் தெரிவித்திருக்கிறார் ஜெயம் ரவி. ஆனால் ஜெயம் ரவி நம்மை விட்டு விலக மாட்டார் அங்கே சுற்றி இங்கு சுத்தி திரும்ப வந்து தான் ஆக வேண்டும் என்று ஒருவித ஒருவித தெனாவட்டில் ஜெயம் ரவி மனைவி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஆர்த்திக்கும் அவருடைய அம்மா சுஜாதா விஜயகுமாரும் சற்றும் எதிர்பாராத விதமாக ஒற்றை அறிக்கையில் தன்னுடைய மனைவியை விட்டு பிரிவதாக இந்த உலகிற்கு உணர்த்திய ஜெயம் ரவி, மேலும் கடந்த சில மாதங்களாகவே கடுமையான மன உளைச்சலில் ஜெயம் ரவி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், எப்போது அவர் தன்னுடைய மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்தாரோ, அதன் பின்பு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக ஜாலியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் ஜெயம் ரவி தன்னுடைய மனைவியுடன் இணைவதற்கு கடைசி வாய்ப்பாக தன்னுடைய குடும்பத்தில் தன்னுடைய மாமியார் தலையிடக்கூடாது என்று ஆர்த்திக்கு கடைசி சான்ஸ் கொடுத்து அந்த சான்ஸ்ஸை ஆர்த்தி ஏற்க மறுத்ததால் தற்பொழுது விவாகரத்து வரை சென்று விட்டது ஜெயம் ரவி ஆர்த்தியின் திருமண வாழ்க்கை என்கிறது சினிமா வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here