ஜெயம் ரவி – ஆர்த்தி இடையே புகுந்த குஷ்பு … பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி இருவருக்கும் இடையில் வெடித்துள்ள பிரச்சனை கோலிவுட் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது. காரணம் ஜெயம் ரவி ஆர்த்தியை விட்டு விலகுவதாக அறிவித்தாலும் கூட, இதுவரை அவருடைய மனைவி ஆர்த்தி ஜெயம் ரவியின் முடிவே ஏற்கவில்லை, மாறாக ஜெயம் ரவியி தன்னை விட்டு விலகுவதாக தனிச்சையாக எடுத்த முடிவு என்றும் தன்னிடம் எதும் இது குறித்து ஆலோசிக்கவில்லை என்றும் தன்னுடைய அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி இருந்தார் ஆர்த்தி.

அந்த வகையில் நிச்சயம் இரண்டு தரப்பு இடையே ஒருமனதாக இவர்கள் பிரிவதாக முடிவு செய்யாத காரணத்தினால் இவர்கள் மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஜெயம் ரவி ஆர்த்தியை வேண்டாம் என்று விலகினாலும் கூட ஆர்த்தி தொடர்ந்து ஜெயம் ரவியை விட்டு விலக மனம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே அந்த அளவுக்கு ஜெயம் ரவியை ஆழமாக காதலித்தவர் ஆர்த்தி.

இந்நிலையில் எப்படி ஜெயம் ரவியை காதலித்தார் என்பது சில தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது ஆர்த்தி சினிமா பின்புலம் கொண்ட கோடீஸ்வரர் குடும்பத்தைச் சார்ந்தவர். ஆர்த்தி குடும்பத்திற்கும் நடிகை குஷ்பு குடும்பத்திற்கும் குடும்ப ரீதியாக ஒரு நெருங்கிய உறவு உண்டு. இந்நிலையில் ஆர்த்தி ஜெயம் ரவியை நேரில் சந்திப்பதற்கு முன்பே அவரை காதலிக்க தொடங்கி இருக்கிறார்.

மேலும் ஜெயம் ரவியை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தார் ஆர்த்தி. நேரில் ஜெயம் ரவியை சந்திக்க வேண்டும் அவருடன் பழக வேண்டும், பின்பு தன்னுடைய காதலை அவரிடம் வெளிப்படுத்த வேண்டும் என்ற ஒரு வாய்ப்புக்காக ஆர்த்தி காத்திருந்தபோது. நடிகை குஷ்பூ மற்றும் சினிமா துறையினர் சிங்கப்பூர் செல்கிறார்கள், அந்த குழுவில் ஜெயம் ரவியும் இருக்கிறார்.

ஜெயம் ரவி அந்த குழுவில் வருகிறார் என்று தெரிந்து கொண்டு இது நமக்கான சந்தர்ப்பம் என்று அந்தக் குழுவில் ஆர்த்தியும் நானும் சிங்கப்பூர் வருகிறேன் என்று பிடிவாதம் பிடித்து சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் ஆர்த்தியும் ஜெயம் ரவியும் தனியாக சந்திக்கும் சூழல் உருவாகிறது. அப்போது ஆர்த்தி தன்னுடைய காதலை ஜெயம் ரவியிடம் தெரிவிக்கிறார்.

ஆரம்பத்தில் ஜெயம் ரவி எத்தனையோ ரசிகைகள் நம்மிடம் காதல் சொல்வது போல் தான் ஆர்த்தியும் சொல்கிறார் என்று கடந்து செல்கிறார். ஆனால் சிங்கப்பூரில் தொடர்ந்து ஆர்த்தியுடன் பழகப் பழக ஜெயம் ரவியும் ஆர்த்தியின் காதலை ஏற்றுக்கொள்கிறார். அந்த வகையில் ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் காதலுக்கு, குறிப்பா ஆர்த்திக்கு ஜெயம் ரவியை சந்தித்து தன்னுடைய காதலை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் நடிகை குஷ்பூ.

மேலும் ஆர்த்தி – ஜெயம் ரவி இருவருடைய காதலை ஜெயம் ரவி குடும்பத்தார் அவ்வளவு எளிதாக ஏற்கவில்லை. ஆனால் ஜெயம் ரவி – ஆர்த்தி காதலுக்கு துணையாக நின்று இந்த திருமணம் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது நடிகை குஷ்பு தான் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது ஜெயம் ரவி ஆர்த்தி இடையில் விரிசல் உருவாகி ஆர்த்தியை விட்டு ஜெயம் ரவி பிரிய முடிவெடுத்த நிலையில்,

ஏற்கனவே ஜெயம் ரவி – ஆர்த்தி இடையில் சமரசம் செய்து வைப்பதற்காக நடிகை குஷ்பு பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டதாகவும், ஆனால் ஜெயம் ரவி தரப்பில் பிரிவதில் உறுதியாக இருந்ததால் அந்த பேச்சு வார்த்தை தோல்விய தழுவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஆர்த்தி , ஜெயம் ரவியை விட்டு பிரிய மனமில்லை என்பதால் தொடர்ந்து இருவரையும் மீண்டும் இணைத்து வைப்பதற்கான முயற்சியில் குஷ்பூ ஈடுபட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஜெயம் ரவி இதுவரை தான் எடுத்த முடிவிலிருந்து பின் வாங்காமல் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here