மகனை நினைத்து கண்கலங்கிய ஜெயம் ரவி தந்தை… வீட்டோட மாப்பிளை என்றால் இப்படியே நடத்துவது..

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு பலருக்கு அதிர்ச்சியை தரும் வகையில் அமைந்துள்ளது. காரணம் சமீப காலமாக சினிமா துறையைச் சேர்ந்த நடிகர்களில் விவாகரத்து செய்தவர்கள் சக நடிகையுடன் கிசு கிசுவில் தொடர்ந்து சிக்கி வந்தார்கள், அவர்கள் குடும்பத்தில் இதனால் பிரட்சனை என்கிற செய்து வந்த வண்ணம் இருந்தது. ஆனால் நடிகர் ஜெயம் ரவி இதுவரை எந்த ஒரு நடிகை உடனும் கிசுகிசுகள் சிக்கவில்லை .

நடிகர் ஜெயம் ரவி எந்த ஒரு சினிமா சார்ந்த பொது நிகழ்வுக்கு சென்றால், கூடவே மனைவியையும் அழைத்துச் செல்லக் கூடியவர். அந்த வகையில் அவருடைய மனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கக் கூடிய ஜெயம் ரவி விவாகரத்து செய்கிறார் என்கின்ற தகவல் வந்தவுடனே பலராலும் நம்ப முடியவில்லை. ஆனால் அது தற்பொழுது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இதன் பின்னணியில் முழுக்க முழுக்க ஜெயம் ரவியின் மாமியாரின் இறக்கமற்ற செயல் தான் என்றும் இதனால் ஜெயம் ரவி தந்தை மற்றும் அவருடைய அண்ணன் ஜெயம் ராஜா போன்றோரும் கடுமையாக வேதனையும் அடைந்துள்ளார்கள் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி சினிமாவில் நடிகராக வேண்டும் என்பதற்காக அவருடைய தந்தை எடிட்டர் மோகன் சிறு வயதில் இருந்தே ஜெயம் ரவியை பார்த்து பார்த்து செதுக்கி வளர்த்தவர்.

அதாவது நடிகர் தனுஷ் எப்படி சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக அவருடைய தந்தை கஸ்தூரிராஜா இருந்தாரோ.! அதேபோன்று தந்தையின் தயவால் சினிமாவுக்கு வந்தவர் ஜெயம் ரவி. மேலும் நடிகர் தனுஷை எப்படி ஒரு நடிகனாக இந்த தமிழ் சினிமாவிற்கு அவருடைய அண்ணன் செல்வராகவன் அடையாளம் காட்டினாரோ.! அதேபோன்று நடிகர் ஜெயம் ரவியை இந்த சினிமாவிற்கு ஒரு முன்னணி நடிகனாக அடையாளம் காட்டி அறிமுகப்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்து அவரை டாப் நடிக வரிசையில் உட்கார வைத்தது ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குனர் ஜெயம் ராஜா.

ஜெயம் ரவி முழுக்க முழுக்க மாமியாரின் கட்டுப்பாடுக்கு சென்ற பின்பு ஜெயம் ரவியின் கால்ஷீட் முதல் கதை கேட்பது வரை அனைத்தும் அவருடைய மாமியார் கவனிக்க தொடங்கியுள்ளார்.இந்நிலையில் ஜெயம் ராஜா தனி ஒருவன் பார்ட் 2 வை ஜெயம் ரவியை வைத்து எடுக்க கூட ஜெயம் ரவி மாமியாரின் உத்தரவு கிடைக்கவில்லை, ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் தனி ஒருவன் 2 நடிக்க இருப்பதாக மாமியாரிடம் தெரிவித்தாலும் இப்போதைக்கு கால் சீட்டு இல்ல என்று உதாசீனப்படுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய சொந்த தம்பியிடமே கால்ஷீட் கிடைக்கவில்லையே என்று மன வேதனை அடைந்துள்ளார் ஜெயம் ராஜா.

மேலும் பார்த்து பார்த்து வளர்த்த நம்முடைய மகன் நமக்கு சொந்தமில்லாமல், அவனிடம் கால் சீட்டுக்காக அவன் மாமியாரின் அனுமதி பெற வேண்டி இருக்கிறது என்று ஜெயம் ரவியின் தந்தையும் மிகுந்த வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஜெயம் ரவி தன்னை செதுக்கி உருவாக்கிய தந்தை மற்றும் தன்னை இந்த சினிமாவுக்கு அடையாளம் காட்டி மிகப்பெரிய நடிகனாக உட்கார வைத்த அண்ணனுக்கு தன்னால் கால்ஷீட் கொடுக்கும் முடியவில்லை என்கின்ற ஒரு குற்ற உணர்வு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.

மேலும் இதனால் ஒரு கட்டத்தில் மாமியாரை எதிர்க்கும் சூழலுக்கு ஜெயம் ரவி வந்ததால், மாமியாருக்கும் மருமகனுக்குமான உரசல் முற்றியுள்ளது, ஆனால் மனைவி ஆர்த்தியோ மாமியார் பக்கமே ஆதரவாக இருந்துள்ளார். இதனால் இப்படி ஒரு அடிமை வாழ்க்கை எனக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்த ஜெயம் ரவி மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here