ஜெயம் ரவி விவாகரத்து… இதில் எப்படி சிம்பு உள்ளே வந்தார்… இது என்ன புதுசா இருக்கே..

0
Follow on Google News

கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் பிரபலமான ஜோடிகள் விவாகரத்து செய்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சமந்தா- நாக சைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யாவை தொடர்ந்து நாக ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்கள். இந்த விவகாரம் முடிவதற்குள் பிரபல நடிகர் ஜெயம் ரவி- ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக வந்திருக்கும் செய்தி தான் தற்போது ரசிகர்கள் பேரிடியாக இருக்கிறது.

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ப்பவர் ஜெயம் ரவி. பிரபல படத்தொகுப்பாளர் எடிட்டர் மோகனின் மகனான இவர் ‘ஜெயம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். சொல்லப்போனால் இந்த படத்தை இயக்கியதே அவரது அண்ணன் மோகன் ராஜாதான். இந்த படம், இருவருக்குமே நல்ல தொடக்கத்தை கொடுக்க, தற்போது அண்ணனும்-தம்பியும் திரையுலகில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

நடிகர் ஜெயம் ரவி, திறமையான நடிகராக இருந்தாலும், கடந்த சில வருடங்களாக கதைகளை சரியாக தேர்ந்தெடுக்காததால் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருகிறார். கோமாளி படத்திற்கு பிறகு, இவருக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும், மக்கள் மனத்தில் நல்ல ஹீரோ என்ற பெயரை பெற்றிருக்கிறார். மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அருள்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், தனது நடிப்பிற்காக நல்ல வரவேற்பினை பெற்றார்.

ஆனால், தனியாக ஹீரோவாக நடித்திருந்த அகிலன், இறைவன் ஆகிய படங்களும், இந்த ஆண்டு வெளியான சைரன் படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் இவருடைய மூத்த மகன் ஆரவ் இதில் ரவி நடிப்பில் வெளியாகி இருந்த ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

சினிமாவில் சிறந்த ஜோடிகளாக ஜெயம் ரவி- ஆர்த்தி திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த பேட்டியில் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி குறித்து பெருமையாக பேசியிருந்தார். மனைவி இருக்கும் நிலையில் ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியிருந்தது. இந்த செய்திகளுக்கு ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் எந்த விளக்கமும் கொடுக்காததை அடுத்து இந்த செய்தி உண்மையாக இருக்குமோ என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஜெய்சங்கர் ஒரு பேட்டியில் ஜெயம் ரவி விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசியதாவது ‘உங்களுக்கு எதுக்குடா கல்யாணம்? இருந்தா சிம்பு மாதிரி இருங்க. கல்யாணமே பண்ணாதீங்க. சிம்பு எவ்வளவோ இதுக்கு மேல். சிம்புவுக்கு காதலிக்க மட்டும் தான் தெரியும். காதலித்து ஏமாற்ற கூட தெரியாது. ஏமாறத்தான் தெரியும். இப்படி ஏமாறாமல் கல்யாணமே செய்யாமல் இருக்கிறார் பாருங்கள் சிம்பு. அவர்தான் சரி. திருமணம் பற்றி சிம்புவிடம் கேள்வி கேட்டாலும் சரியான பதிலடிகை தான் கொடுப்பார்.

அதாவது வாழ்ந்தால் கரெக்டாக வாழ்ந்து விடுங்கள். இல்லை என்றால் வாழவே முடியாது என தெரிந்தால் கல்யாணமே பண்ணிக் கொள்ளாதீர்கள் என்றுதான் சிம்பு சொல்வார். இந்த வகையில் சிம்பு மிகச்சரியாக இருக்கிறார். அவரால் யாருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. யார் வேண்டுமென்றாலும் காதலித்துக் கொள்ளுங்கள் .ஏமாற்ற போகிறீர்களா ஏமாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் நல்லா இருந்துட்டு போங்க என்றுதான் அவர் இருக்கிறார். பேசாமல் அப்படி இருங்க’ என பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here