ரூமில் உன்னுடன் இருப்பது யார்.?.. ஜெயம் ரவியை மன உளைச்சலுக்கு உள்ளாகிய மனைவி ஆர்த்தி..

0
Follow on Google News

சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் போது அவருடைய உடல் கட்டுக்கோப்பாக இருக்க ஸ்டிராய்டு மருந்தை ஜெயம் ரவி பயன்படுத்தியதால் அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி மருத்துவமனைக்கு சென்று ஜெயம் ரவி தனது உடலை பரிசோதனை செய்த போது. அப்போது மருத்துவர்கள் ஜெயம் ரவிக்கு ஏதோ மன ரீதியான பிரச்சனை இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இது ஜெயம் ரவியின் தந்தை மற்றும் அண்ணன் இருவருக்கும் தன்னுடைய தம்பிக்கு மன ரீதியான பிரச்சனை வரும் அளவிற்கு என்ன என்று மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு இருந்திருக்கிறது. ஜெயம் ரவி பார்த்து பார்த்து வளர்த்து மிகப்பெரிய உயரத்தில் கொண்டு வந்து அமர்த்தியது ஜெயம் ரவியோட தந்தை எடிட்டர் மோகனும் அவருடைய அண்ணன் இயக்குனர் ஜெயம் ராஜாவும்.

ஜெயம் ரவி அவருடைய மனைவியால் மிக கடுமையான தொந்தரவுகளையும் பிரச்சனையும் சந்தித்து வந்து இருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய கணவர் ஜெயம் ரவியை தீவிரமாக சந்தேகத்துடன் கண்காணித்து வந்த அவருடைய மனைவி ஆர்த்தி. ஒருமுறை படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றுள்ளார் ஜெயம் ரவி. அப்போது நள்ளிரவு ஜெயம் ரவிக்கு வீடியோ காலில் போன் செய்த ஆர்த்தி. வீடியோ காலில் அவர் தங்கி இருந்த அறையை சுமார் 360 டிகிரியில் சுற்றி காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்க,

ஜெயம் ரவியும் அந்த ரூமை 360 டிகிரியில் உள்ளே காண்பித்துள்ளார். அதாவது ஜெயம் ரவி தங்கி இருக்கும் ரூமில் வேறு ஏதாவது ஒரு நடிகை இருக்கிறாரா என்கின்ற சந்தேகத்துடனே அதுபோன்ற வீடியோக்களை அவருடைய மனைவி ஜெயம் ரவிக்கு செய்துள்ளார். இது ஜெயம் ரவிக்கு மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளது. இப்படி தன்னை ஸ்பை வைத்து கண்காணிக்கும் அளவிற்கு மனைவி ஆர்த்தி நடந்து கொள்கிறார் என்கின்ற மன ரீதியான பிரச்சனையில் இருந்த ஜெயம் ரவி,

ஒரு கட்டத்தில் தனியாகவே புலம்ப வேண்டிய சூழலுக்கு தள்ளிப் போட்டுள்ளார் அதாவது பாத்ரூம் சென்றால் அங்கே தனியாக பேசுவது, இப்படி மனரீதியாக பாதிக்கப்பட்ட ஜெயம் ரவி ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்று அறிந்து கொண்ட ஜெயம் ரவியின் அண்ணன், தம்பியை அந்த மன ரீதியான பிரச்சனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்கின்ற முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் மெல்ல மெல்ல தம்பி ஜெயம் ரவியின் பிரச்சனையை அறிந்து கொண்ட அண்ணன் ஜெயம் ராஜா தன்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இரண்டு குடும்பத்தினரும் அமர்ந்து ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை பேசி முயற்சி செய்தனர். ஆனால் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி விடாப்பிடியாக பேசியதால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது.

இந்த விவகாரம் மேலும் ஜெயம் ரவிக்கு மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது, இதனை தொடர்ந்து மன அமைதிக்காக, தன்னுடைய அப்பா அண்ணன் குடும்பத்தார் தவிர்த்து வேறு யாரும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு சில நாட்கள் கோவாவிற்கு சென்று தங்கினார் ஜெயம் ரவி. இப்படி ஒரு பக்கம் மாமியார் மறுப்பக்கம் மனைவி கடும் டார்ச்சர் கொடுத்து வந்த நிலையில்,

தன்னுடைய திருமண வாழ்க்கையை முடிவு கொண்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டார். இதன் வெளிப்பாடு தான் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் தம்பி மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரை மீட்டெடுக்க முக்கிய காரணம் அவருடைய அண்ணன் ஜெயம் ராஜா என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here